Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஈழம் பற்றிய இந்தியாவின் பார்வை மாறுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழப் பிரச்னையில் காங்கிரஸின் கொள்கைக்கும் பா.ஜ.கவின் கொள்கைக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. தவிரவும், பா.ஜ.க. அகண்ட பாரதக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் கட்சி. ஆளும் சிங்களக் கட்சியின் கொள்கை, அகண்ட இலங்கை. அந்த வகையில், நரேந்திர மோடிக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் நிறைய ஒற்றுமைகள். சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து இவர்கள் கவலைப்படமாட்டார்கள். அவர்களை அழித்தொழிக்கவே விரும்புவார்கள். பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவேன் என்று முழங்கும் பா.ஜ.க.வுக்கும் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்களர்களைக் குடியேற்றும் இலங்கை அரசுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என்ன?

3) இந்தியா இதற்கு முன்னால் பலமுறை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்திருக்கிறதே? இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் ஈழப்போராட்டத்தை அங்கீகரித்து ஆதரித்திருக்கிறார்களே? புலிகளுக்கு விசேஷ பயிற்சிகளையும் அளித்திருக்கிறார்களே? தமிழர்களின் நலன்மீது அக்கறை இல்லாமலா இவை சாத்தியமாயிற்று?

இதற்கான விடையை மன்மோகன் சிங் அரசே பல முறை தெளிவாகச் சொல்லிவிட்டது. இலங்கைக்கு இன்று நாங்கள் ஆயுதங்கள் வழங்கவில்லை என்றால் சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையை கைக்குள் போட்டுக்கொண்டுவிடும். அதற்காகவாவது நாம் இலங்கை அரசுடன் ஒத்துழைத்துதான் தீரவேண்டும். இதன் பொருள், இலங்கை மீது அதிகாரம் செலுத்த இந்தியா விரும்புகிறது என்பதுதான். உலகத்தின் பிக் பிரதராக அமெரிக்கா எப்படித் தன்னை முன்னிறுத்திக்கொள்கிறதோ, அப்படியே இந்தியாவும் தன்னை ஆசியாவின் பிக் பிரதாக முன்னிறுத்திக்கொள்ள விரும்புகிறது. வர்த்தக ரீதியிலும் (இலங்கை மார்க்கெட்டை முழுவதுமாகப் பிடித்துக்கொள்ளலாம்), ராணுவ ரீதியிலும் (படைத்தளங்கள் அமைத்துக்கொள்ளலாம்) இலங்கை முக்கியத்துவம் கொண்ட பிரதேசம். இன்னொரு நாட்டுக்கு இலங்கையை விட்டுக்கொடுக்கமுடியாது. குறிப்பாக, எதிரி நாடுகளுக்கு.

எப்படி கிடைக்கும் இலங்கை? நட்பாக இருப்பதன் மூலம். அல்லது, மிரட்டுவதன் மூலம். இரண்டையும் இந்தியா செய்து பார்த்திருக்கிறது. புலிகளையும் பிற இயக்கங்களையும் வளர்த்துவிட்டு, அவர்கள் மூலம் இலங்கையை மிரட்டி இருக்கிறது. அதனால் புலிகள் பலனடைந்தனர் என்றாலும் இந்தியாவின் நோக்கம் அதுவல்ல. கொஞ்சியும் இருக்கிறது இந்தியா. இந்தா கச்சத்தீவு என்று அன்று அள்ளிக்கொடுத்ததன் மூலம். தமிழர்கள் மீது தாக்குதல் தொடுங்கள், கண்டுகொள்ளமாட்டோம் என்னும் நிலைப்பாட்டை இன்று எடுத்துள்ளதன் மூலம். வழிமுறைகள் மாறலாம். நோக்கம் ஒன்றேதான்.

இந்தியாவில் ஆட்சி அமைக்ககூடிய கட்சிகளான பா.ஜ.க அல்லது காங்கிரஸ் போன்றன ஒரு போதும் ஈழத் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகவோ அல்லது சுயநிர்ணய உரிமையுள்ள, தனக்கென்ற தாயக பிரதேசத்தினை கொண்ட ஒரு இனமாகவோ அங்கீகரிக்கப் போவதில்லை. அப்படி அங்கீகரிப்பது, இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் விடுதலை நோக்கி போராட தூண்டுதலாக அமைந்து விடும் என்பதில் இருந்து சாதி ரீதியில் தாழ்த்தப் பட்டு தலித்துகளாக அடையாளப் படுத்தப்பட்டு இருக்கும் மக்கள் கூட்டம் கிளர்ந்தெழுந்து விடும் என்பது வரையான காரணங்கள் உள்ளன. எம் பிரச்சனையை அவை ஒரு சிறுபான்மையினரின் பிரச்சினை (minorities problem) என வகைப் படுத்தப் பட்டே பார்ப்பர்

ஆனால் காங்கிரசின் அணுகு முறையும் பா.ஜ.க வின் அணுகு முறையும் வித்தியாசமாக அமையலாம். காங்கிரஸ் இன்று செய்யும் வெளிப்படையான இராணுவ உதவிகள் மற்றும் இலங்கையில் நடை பெறும் படுகொலைகள் மீதான ஆதரவு நிலை என்பதில் ஒரு சில மாற்றங்கள் வரலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.