Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட காயம்பட்டவர்கள் அனுபவிக்கும் கொடூரங்கள்

Featured Replies

திகதி: 17.02.2009 தமிழீழம் 'விடியல்'

வன்னியில் இருந்து திருகோணமலை கொண்டு செல்லப்பட்ட காயம் அடைந்த நோயாளர்களின் நிலமை மிகவும் படு மோசமாகக் காணப்படுவதாக திருகோணமலை வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

பெயர் குறிப்பிடவிரும்பாத மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டவர்களில் பெரும்பான்மையான பிள்ளைகள் பெற்றோர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளமையால் பெரும் கூக்குரலுடன் காணப்படுவதாகவும், உரிய முறையில் கவனிப்புகள் இல்லாத நிலமையில் பிள்ளைகள் உடல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று வயது வந்தவர்களும் கூட உரிய முறையில் கவனிக்கப்படாமலும் உரிய நேரத்தில் மருந்துகள் வழங்கப்படாமலும் மற்றும் உணவுகள் கிடைக்காமலும் பெரும் சிரமங்களுக்கும் உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்குக் கூட பணம் இல்லாமையால் பலத்த கஸ்டங்களுக்கும் உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

அத்துடன், நேயாளர்கள் கூட குடும்பங்களாக வைத்தியசாலைகளில் வைத்திருக்காது வேறு வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு ஒருவருக்கு நடக்கும் சம்பவம் அடுத்தவருக்கு தெரியாது இருக்கும் வகையில் நடவடிக்கைகளை படைத்தரப்பினர் மேற்கோண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் இருந்து சென்ற காயங்களுக்கு உள்ள்கிய நோயாளர்களுக்கு இரத்தம் வழங்கியவர்கள் என்ற பெயரில் சிலர் திருகோணாமலைப் பகுதியில் தற்போது இனம் தெரியாதவாகள் என்ற போர்வையில் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதனைத் தொடர்ந்து தற்போது பொது மக்கள் இரத்தம் வழங்குவதற்குச்கூட யாரும் முன்வராத நிலமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வைத்தியசாலைகளுக்குச் சென்று நோயாளர்களை உறவினர்களோ, நலன் விரும்பிகளோ பார்ப்பதற்கு படைத்தரப்பினர் அனுமதிக்காத நிலைமையே தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றது. வைத்தியசாலை முழுமையாக படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதினால் காயங்களுக்கு உள்ளாகி அனுமதிக்கப்ட்டவர்களுக்கு என்ன நடந்து கொண்டு இருக்கின்றது என்ற விடயத்தை யாரும் அறியமுடியாது தடை செய்யப்பட்டுள்ளதாக உறவினாகளும் நலன் விரும்பிகளும் கவலை தெரிவிக்கின்றார்கள்.

நன்றி : சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமையிலும் கொடுமை.

இது இலங்கையின் தந்திரம்.. மிகக்கவனமாக இருக்கிறது.. எங்கு காயப்பட்டவர்களுக்கூடாக தமது இராணுவத்தாக்குதல், புலிகள் கவசமாக மக்களைப்பயன்படுத்துக்கிறார

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி நோயாளர்களைப் பார்வையிட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

வன்னி யுத்தத்தில் அகப்பட்டுக் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்வையிடுவதற்கு செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி மறுப்பு குறித்து ஊடக அமைப்புகள் கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றன.

வவுனியா, மன்னார், திருகோணமலை, தம்பலகாமம், கந்தளாய், பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய வைத்தியசாலைகளில் வன்னியிலிருந்து அழைத்து வரப்பட்ட நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்ட்டுகளில் பாதுகாப்பு கடமைகளுக்காகப் பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே வைத்தியசாலை நிர்வாகமும் பொலிசாரும் இந்த அனுமதியை மறுப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல பொலன்னறுவை வைத்தியசாலையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

நேற்று மாலை பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நோயாளர்களைச் சந்திப்பதற்கும் பார்வையிடுவதற்கும் சென்ற அம்மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுத் திருப்பப்பட்டுள்ளனர்.மேலிட உத்தரவே இதற்குக் காரணம் என்று கூறப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

- வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.