Jump to content

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் வார நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் வார நிகழ்வு

ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாக மாணவர் ஒன்றியத்தினால் ‘அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகள்’ (Expression against Oppression) என்னும் வார நிகழ்வு பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமையன்று ஆரம்பமாகியது. இந்நிகழ்வின் முதல் நாள் நிகழ்வில் இலங்கை அரசின் தமிழர் மீதான இனப்படுகொலை தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வினை மாணவர் ஒன்றியம் நடாத்தியது.

இந் நிகழ்வின் ஆரம்பநாளில் இப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் முழுநாள் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலை பல்கலைக்கழகம் தனது வழமையான அலுவல்களை ஆரம்பித்தபோது ஆரம்பித்த தமிழ் மாணவர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் பல்கலைக்கழகம் நிறைவடையும் வரை தொடர்ந்தது.

“வாய் மூடி மெளனியாய் உள்ள சர்வதேசம்” (International Community is being Silent) என்று எழுதிய கறுப்புத்துணிகளால் வாயினைக் கட்டியபடி மாணவர்கள் தங்கள் வழமையான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் தாம் வாய்களைக் கட்டியுள்ளதன் காரணத்தை எழுத்துமூலம் தங்கள் சக மாணவர்களிற்குத் தெரியப்படுத்தினர்.

தமது போராட்டம் பற்றி மாணவர்கள் தமது கல்வியியலாளர்களிற்கு விளக்கமளித்து எடுத்துரைக்கையில்,

இனப்படுகொலையால் தமிழர்கள் அழிக்கப்படுவதை சர்வதேசம் மெளனமான வேடிக்கை பார்க்கிறது. தமிழர்களிற்கு தீர்வு எதையும் வழங்காது இருக்கிறது. இதற்கு சர்வதேச சமூகம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

இலங்கையில் ஊடகங்கள் சுந்திரமாகச் செயற்பட முடியாது அரசு அடக்குகின்றது, மோதல்கள் நடைபெறும் தமிழர் பிரதேசங்களிற்கு ஊடகவிsயலாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு வாழும் மக்களின் கருத்துக்களும் உண்மைநிலைகளும் வெளியுலக ஊடகங்களில் இருந்து இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.

அறுபது வருடங்களிற்கு மேற்பட்ட இனப்பிரச்சினையை சர்வதேச சமூகம் தீர்த்துவைக்கத் தவறியுள்ளது அறுபது வருட கால இனப்பிரச்சினையை சர்வதேச சமூகத்தால் இன்று வரை தீர்த்து வைக்க முடியவில்லை என்பன போன்றவற்றை தெரிவித்தனர்.

தனது வருமானத்தின் மிகப்பெரும் பகுதியை போருக்கு செலவிடும் சிறீலங்கா அரசின் ஏற்றுமதிப் பொருட்களைப் புறக்கணித்து அதன் பொருளாதாரத்தில் சீர்குலைவை ஏற்படுத்துமாறும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன் அடையாளமாக சிறீலங்கா உற்பத்தி மற்றும் ஏற்றுமதிப் பொருட்களை சிறீலங்காக் கொடியின் மீது கொட்டி கொடியுடன் சேர்த்து எரியூட்டினர்.

இவற்றைத் தொடர்ந்து பிற்பகல் பல்கலைக்கழக வளாகத்திலும், அதைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகளினூடாகவும் தமிழீழத் தேசியக் கொடியை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். அவ்வேளையில் தமிழீழமே தங்கள் நாடு, தம் கைகளில் உள்ளது தமிழீழத் தேசியக் கொடி என்பதையும் வெளியுலகிற்கு எடுத்தியம்பினர்.

இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மண்டபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக பிரதிநிதிகள், ரொறன்ரோ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், தமிழ் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் மார்க்கம் கல்விச் சபையின் தமிழ் உறுப்பினரான நீதன் சண் ஆகியோர் பங்கு பற்றி உரையாற்றினர்.

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையை வெளிச்சம் போட்டுக்காட்டும் நிகழ்வுகள் தமிழர்களது அவலநிலை நீங்கும் வரை தொடரும் எனத் தெரிவித்தனர்.

நன்றி - பதிவு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மறைமுகமாக அமெரிக்காவின் Rule based world order  ஐ ஜெய்சங்கர் சுட்டிக்காட்டுகிறார்.😁
    • சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -3 சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -1 சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -2
    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.