Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் வார நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் வார நிகழ்வு

ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாக மாணவர் ஒன்றியத்தினால் ‘அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகள்’ (Expression against Oppression) என்னும் வார நிகழ்வு பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமையன்று ஆரம்பமாகியது. இந்நிகழ்வின் முதல் நாள் நிகழ்வில் இலங்கை அரசின் தமிழர் மீதான இனப்படுகொலை தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வினை மாணவர் ஒன்றியம் நடாத்தியது.

இந் நிகழ்வின் ஆரம்பநாளில் இப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் முழுநாள் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலை பல்கலைக்கழகம் தனது வழமையான அலுவல்களை ஆரம்பித்தபோது ஆரம்பித்த தமிழ் மாணவர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் பல்கலைக்கழகம் நிறைவடையும் வரை தொடர்ந்தது.

“வாய் மூடி மெளனியாய் உள்ள சர்வதேசம்” (International Community is being Silent) என்று எழுதிய கறுப்புத்துணிகளால் வாயினைக் கட்டியபடி மாணவர்கள் தங்கள் வழமையான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் தாம் வாய்களைக் கட்டியுள்ளதன் காரணத்தை எழுத்துமூலம் தங்கள் சக மாணவர்களிற்குத் தெரியப்படுத்தினர்.

தமது போராட்டம் பற்றி மாணவர்கள் தமது கல்வியியலாளர்களிற்கு விளக்கமளித்து எடுத்துரைக்கையில்,

இனப்படுகொலையால் தமிழர்கள் அழிக்கப்படுவதை சர்வதேசம் மெளனமான வேடிக்கை பார்க்கிறது. தமிழர்களிற்கு தீர்வு எதையும் வழங்காது இருக்கிறது. இதற்கு சர்வதேச சமூகம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

இலங்கையில் ஊடகங்கள் சுந்திரமாகச் செயற்பட முடியாது அரசு அடக்குகின்றது, மோதல்கள் நடைபெறும் தமிழர் பிரதேசங்களிற்கு ஊடகவிsயலாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு வாழும் மக்களின் கருத்துக்களும் உண்மைநிலைகளும் வெளியுலக ஊடகங்களில் இருந்து இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.

அறுபது வருடங்களிற்கு மேற்பட்ட இனப்பிரச்சினையை சர்வதேச சமூகம் தீர்த்துவைக்கத் தவறியுள்ளது அறுபது வருட கால இனப்பிரச்சினையை சர்வதேச சமூகத்தால் இன்று வரை தீர்த்து வைக்க முடியவில்லை என்பன போன்றவற்றை தெரிவித்தனர்.

தனது வருமானத்தின் மிகப்பெரும் பகுதியை போருக்கு செலவிடும் சிறீலங்கா அரசின் ஏற்றுமதிப் பொருட்களைப் புறக்கணித்து அதன் பொருளாதாரத்தில் சீர்குலைவை ஏற்படுத்துமாறும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன் அடையாளமாக சிறீலங்கா உற்பத்தி மற்றும் ஏற்றுமதிப் பொருட்களை சிறீலங்காக் கொடியின் மீது கொட்டி கொடியுடன் சேர்த்து எரியூட்டினர்.

இவற்றைத் தொடர்ந்து பிற்பகல் பல்கலைக்கழக வளாகத்திலும், அதைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகளினூடாகவும் தமிழீழத் தேசியக் கொடியை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். அவ்வேளையில் தமிழீழமே தங்கள் நாடு, தம் கைகளில் உள்ளது தமிழீழத் தேசியக் கொடி என்பதையும் வெளியுலகிற்கு எடுத்தியம்பினர்.

இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மண்டபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக பிரதிநிதிகள், ரொறன்ரோ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், தமிழ் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் மார்க்கம் கல்விச் சபையின் தமிழ் உறுப்பினரான நீதன் சண் ஆகியோர் பங்கு பற்றி உரையாற்றினர்.

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையை வெளிச்சம் போட்டுக்காட்டும் நிகழ்வுகள் தமிழர்களது அவலநிலை நீங்கும் வரை தொடரும் எனத் தெரிவித்தனர்.

நன்றி - பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.