Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது:தமிழக அரசின் உத்தரவு

Featured Replies

இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈழத்தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப்பேசவந்த இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிதாக புதுச்சேரி போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தது.

இதைத்தொடர்ந்து அவரை புதுச்சேரி போலீசார் தேடி வந்தனர்.போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் போதே சீமான் சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் நடந்த ஈழதமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசினார்.

புதுச்சேரி போலீசார் சீமானை கைது செய்வதற்கு தமிழக போலீசாரின் உதவியை நாடியது.

தமிழக சட்டசபையில் சீமான் ஏன் இன்னும் கைதாகவில்லை என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, இன்னும் 2நாட்களுக்குள் கைதாகிவிடுவார் என்று தெரிவித்தார்.இந்நிலையில் சீமான் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக வக்கீல்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவரை கைது செய்வதற்கு புதுச்சேரி போலீசார் விரைந்துவந்தனர். ஆனால் அதற்குள் சீமான் தனது பேச்சு முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டார்.

புதுச்சேரி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது. அச்சமயம், தானே நேரில் வந்து ஆஜராவதாக சீமான் அறிவித்தார்.அதன்படி நெல்லை காவல்துறை ஆணையர் முன்பு சீமான் நேரில் ஆஜரானார். நெல்லை காவல்துறை ஆணையர் சீமானை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.புதுச்சேரி நீதிமன்றத்தீர்ப்பின் படி அங்கே காலாப்பட்டு மத்தியசிறையில் அடைக்கப்பட்டார் சீமான்.பாளையங்கோட்டையில் பேசியபோதும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நெல்லை போலீசாரும் சீமான் மீது வழக்கு தொடர்ந்தது.

க்ரைம் நம்பர் 308/2009, இந்திய தண்டனை சட்டம் 505, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 13(1), (B), 13(2) ஆகிய சட்டப்பிரிவுகளில் காவல்துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில் இன்று, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் தமிழக அரசின் உத்தரவை புதுச்சேரி சிறையில் இருக்கும் சீமானிடம் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் வழங்கினார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் சிறையில் அடைக்கப்படுவதால் அவர் 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபடும் எண்ணத்தில் இருந்தார் சீமான். இந்த நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

நன்றி நக்கீரன்

Edited by தேசம்

அவர் கேட்டு கொண்டது போல அவரை தூக்கில் போட்டு விடுவது இன்னும் நல்லது...

சீமான் மீது தே.பா.: கலைஞர் மீது குற்றச்சாட்டு

இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து பேச இளங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று புதுவை வந்தார்.

காலாப்பட்டு சிறைக்கு சென்ற அவர் ஒரு மணி நேரம் காத்திருந்து இயக்குனர் சீமானை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ‘’இயக்குனர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு ஏவி உள்ளது. இதைநான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களையும், திரை உலகை சேர்ந்தவர்களையும் ஒட்டு மொத்தமாக மிரட்டுவதற்காகவே சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி ஏவி இருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்காக பேசியதை தவிர தேசத்திற்கு எதிரான செயல்களில் சீமான் ஒருபோதும் ஈடுபடவில்லை. அவரின் பேச்சு விளைவாக எந்த இடத்திலும் எத்தகைய கலவரமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் அவர் மீது இந்த கொடிய சட்டத்தை பயன்படுத்தி இருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத போக்காகும்.

சீமான் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை உடனடியாக திரும்ப பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கேட்டு கொண்டது போல அவரை தூக்கில் போட்டு விடுவது இன்னும் நல்லது...

அட சும்மா இருங்கய்யா.... நீங்க வேற.. சோனியாவிற்கும் ஜெயாலலிதாவுக்கு தனது விசுவாசத்தை காட்டனும் எண்டதற்காக கிழட்டு சிங்கம் தூக்கில போட்டுடப்போகுது, :):D

  • கருத்துக்கள உறவுகள்

அட சும்மா இருங்கய்யா.... நீங்க வேற.. சோனியாவிற்கும் ஜெயாலலிதாவுக்கு தனது விசுவாசத்தை காட்டனும் எண்டதற்காக கிழட்டு சிங்கம் தூக்கில போட்டுடப்போகுது, :):D

இந்தச் சிங்கம் ஏன் இன்னும் ......,

பொம்பிளையளுக்கு பின்னாலை திரியுது என்று ,

நினைக்கத்தான் பெரிய கவலையாக இருக்கிறது . :(

  • கருத்துக்கள உறவுகள்

கண்டது சுடும் உத்தரவுகள்,பயங்கரவாத சட்டம் என்பவை மூலம் புரட்சிகளை எண்ணெய் ஊற்றி வளர்த்த வரலாறு இலங்கைக்கு உண்டு!இச்செயல் ஒரு சாதாரண அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளே!

சீமான் கைதான செய்தியால் வருந்துகின்றோம். கருணா கிழட்டு சிங்கமல்ல கிழட்டு நரி.

ஜானா

Edited by Janarthanan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.