Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் அதிகளவான தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுகின்றனர்: அமெரிக்கா கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன. அங்கு 16 வீத மக்கள் தொகையைக்கொண்ட தமிழ் மக்களில் இளைஞர்கள் அதிகளவில் கொல்லப்படுவதுடன் காணாமலும் போய் உள்ளனர் என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ள 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன. சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் துணை இரணுவக் குழுவினரும், அரசியல் கட்சிகளாக தம்மை பதிவு செய்து கொண்டுள்ள டக்ளசின் ஈ.பி.டி.பி. மற்றும் முரளிதரனின் ரி.எம்.வி.பி. போன்ற கட்சிகளும் அதிகளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளும் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போர் தீவிரமடைந்ததை தொடர்ந்து சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. அரசின் இந்த மனித உரிமை மீறல்களினால் அதிகளவில் தமிழ் மக்களே பாதிப்படைந்துள்ளனர்.

இலங்கையில் 16 வீதமான மக்கள் தொகையைக்கொண்ட தமிழ் மக்களில் இளைஞர்கள் அதிகளவில் கொல்லப்படுவதுடன் காணாமலும் போய் உள்ளனர்.

அரசுடன் இணைந்து செயற்படும் குழுவினரே நீதிக்குப் புறம்பான படுகொலைகளில் ஈடுபட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அரசியல் படுகொலைகள், அரச படையினருடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினர்

சிறார்களை படையில் சேர்ப்பது

காணாமல் போதல்

எழுந்தமானமான கைதுகள்

தடுத்து வைத்தல்

தரமற்ற சிறைக்கூடங்கள்

கைது செய்யப்படுபவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு மறுப்பு தெரிவித்தல்

அரசின் ஊழல்

சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாகுபாடுகள்

என்பன இலங்கையில் அதிகரித்துள்ளன.

சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவினர் பொதுமக்களுக்கு எதிரான ஆயுத தாக்குதல்கள், துன்புறுத்தல்கள், கடத்துதல், பணயக்கைதிகளாக மக்களை பிடித்தல், கப்பம் வாங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குற்றங்களில் ஈடுபட்ட காவல்துறை, இராணுவம், மற்றும் துணை இராணுவக் குழுவினரை சேர்ந்த எவரும் கடந்த வருடத்தில் தண்டிக்கப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி புதினம்

அமெரிக்காவின் கடந்த காலவரலாறு ஒவ்வொருமுறையும் இலங்கையை கண்டிப்பது போல் நடந்து தன் பக்கம் இழுத்து மேலும் பொருளாதார, ஆயுத உதவிகளை வழங்குவது.

இப்போது ஒபவாமா ஆட்சியில் கொள்கைகளை உண்மையில் மாற்றி இருந்தால் சரி, அல்லது அதே பாணி நடிப்பானால் எமக்கு எடுபடாது.

அமெரிக்க உண்மையில் மனித நீதிப்படி நடப்பதானால் ஐ நா மூலம் பல நடவடிக்கைகளை எடுக்கலாம்.

நசிய தேவை இல்லை. பிழை என்றால் நெற்றிக்கண் திறக்கினும் பிழைதான்..

கடைசி வன்னியில் போரில் மாட்டி இருக்கும் மக்களுக்கு அவசர உதவிகளை தொண்டு தாபனங்கள் மூலம் செய்யலாம்.

சர்வதேச செய்தி தாபனங்களை பாதிக்கப்பட்ட மக்கள் இடத்திற்கு சுதந்திரமாக அனுப்பி உண்மைகளை அறிய வைக்கலாம். இதன் மூலம் சாதரண மக்களை கடைசி பீரங்கி, ஆகாயத்தாக்குதலில் காப்பாற்றலாம் சும்மா....

அங்கு பட்டினி, அரச பயங்கரவாதத்தினால் கொலைகள். தடுக்க வக்கில்லை..முதலில் தூதுவர் பிளேக்கை மாற்றட்டும்..பின் மிகுதி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த தலிபானுகள் கட்டிடத்தை இடிச்சதுக்கும் கவலையை தெரிவிச்சிட்டு வேலையை பார்த்திருக்கலாமே <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.