Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு அசுர வேகத்தில் குறைவு – அரசு உதவி கோரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு அசுர வேகத்தில் குறைவு – அரசு உதவி கோரல்

சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு வெகு விரைவாக குறைந்து செல்வதால், அச்சமடைந்துள்ள சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக நாணய நிதியத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் உதவி புரியுமாறு கோர ஆரம்பித்துள்ளது.

சிறீலங்காவிற்கு பிரதான அன்னியச் செலாவணி வருவாயைப் பெற்றுக்கொடுக்கும் சுற்றுலாத்துறை மற்றும் பெருந்தோட்டத் தொழில் என்பனவற்றின் ன்னியச் செலாவணி வருமானம் முன்னரைவிட குறைவடைந்துள்ளன.

இதேவேளை, சிறீலங்கா அரசு மிகப்பெரும் பாதீட்டை ஒதுக்கீட்டுடன் தமிழர் தாயகத்தின் மீது போர் தொடுத்துள்ளதாலும், அதற்காக முற்று முழுதாக நாட்டின் உள்நாட்டு இருப்புக்களை பயன்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொருண்மிய வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மிகப்பெரும் பொருண்மிய நெருக்கடிக்குள் சிறிது சிறிதாக சென்று கொண்டிருக்கும் சிறீலங்காவை காப்பாற்றும் பொருட்டு, சர்வதேசத்திடம் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களைக் காண்பித்து உதவிகள் பெற்றுக்கொள்ள சிறீலங்கா அரசு நினைப்பது கடந்த சில நாட்களாக சிறீலங்காவின் ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மூலம் புலப்படுகின்றது.

அதாவது வன்னியில் இருத்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவ உதவி செய்யும்படி உலகின் மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரசுகளிடம் சிறீலங்கா கேட்டு நிற்கின்றது.

ஏற்கனவே கிழக்கு மாகாணத்தினை ஆக்கிரமித்து இவ்வாறு புனர்வாழ்வுக்கு என வழங்கப்பட்ட நிதியின் மூலமே சிறீலங்கா அரசு தற்போதைய போரை நடாத்ததி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்.... தனியார் நிறுவனங்களை பலத்தகாரமாக அரச உடமையாக்குகின்றது....

இலங்கைக்கு வெளி நாடுகள் உதவி வழங்காவிட்டால் எப்போதே பிரச்சனை முடிந்திருக்கும்..

இந்த வெளி நாட்டுப்பணத்திற்காகவே போர், அகதி முகாம்கள் எல்லாம்....

இலங்கைக்கு வேறு எப்படி வருமானம் வரும்.. என்ன ஒழுங்கான ஏற்றுமதி? தேயிலை=0.

வெளி நாட்டுபணம் = யுத்தம்=மக்கள் கொலை= அரசியல் =சட்ட ஒழுங்கு சீர்கேடல்= பலவீனம்= தமிழர்கள் அடிமை நிலை

  • கருத்துக்கள உறவுகள்

2 நாள் முந்தினம் லண்டனில் ஒரு பிரபல தமிழ் கடைக்கு போனேன், அங்கெ சில உணவுப்பொருட்களை வாங்கினேன், ஒவ்வொரு உணவுப்பொருட்களையும் எடுத்து பார்க்கும் பொழுது சுற்று முற்றும் திருப்பி பார்த்தேன், அதை அவதானித்த கடை உரிமையாளர், 'தம்பி நாங்க திகதி முடிஞ்சதுகளை விற்கிறதில்லை' எண்டார், அதற்கு நான் சொன்னேன், ஐயா நான் அதை பார்க்கவில்லை 'MADE IN' எந்த ரகத்தை சேர்ந்தது எண்டதை பார்த்து வாங்கிக்கொண்டு இருக்கேன் எண்டன்............ {என்ன கொஞ்சம் ஓவரா இருக்கோ?? :mellow: }

சிறிலங்கன், ஜப்பான் பொருட்களை புறக்கணிப்பவர்களுக்கு வேண்டுகோள், முக்கியமா லண்டன் வாழ் தமிழர்களுக்கு, பாகிஸ்த்தான் பொருட்களையும்???? :mellow::lol: முக்கியமா kebab.... :lol: {nedukku, தயா, அண்டைக்கு கெபப் கடைக்கு முன்னால நிண்டமாதிரி இருந்திச்சு??} :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கன், ஜப்பான் பொருட்களை புறக்கணிப்பவர்களுக்கு வேண்டுகோள், முக்கியமா லண்டன் வாழ் தமிழர்களுக்கு, பாகிஸ்த்தான் பொருட்களையும்???? :rolleyes::unsure: முக்கியமா kebab.... :lol: {nedukku, தயா, அண்டைக்கு கெபப் கடைக்கு முன்னால நிண்டமாதிரி இருந்திச்சு??} :lol:

கெபாப்[kebab] தனிய பாக்கிஸ்தான்காரர் மட்டும் சாப்பிடுவதில்லை துருக்கிகராரின்[turkey] முக்கிய உணவு தான் கெபாப். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு அசுர வேகத்தில் குறைவு – அரசு உதவி கோரல்

இதற்கு சிறிலங்கா கவலைப்பட வேண்டாம். புலம்பெயர் மக்களாகிய நாங்களே உங்களுக்கு உதவிகள் செய்வோம் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.