Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்காக காத்திருக்கும் இலங்கை "ரூபாவும்' பங்குச்சந்தையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்காக காத்திருக்கும் இலங்கை "ரூபாவும்' பங்குச்சந்தையும்

[13 - March - 2009]

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் டொலர் கடன் தொகையை பெறுவதற்காக இலங்கை மத்திய வங்கி பேச்சு வார்த்தை மேற்கொண்டுவரும் நிலையில் நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளை இலங்கையின் நாணயமும் பங்குச்சந்தையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

சாத்தியமான நிபந்தனைகள் தொடர்பான கேள்விகளையும் பதில்களையும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டிருக்கிறது.

பிரதான விளைவு எத்தகையதாக இருக்கும் சாத்தியம் காணப்படுகிறது?

சாதகமற்ற நிபந்தனைகள் எதுவும் முன்வைக்கப்படாது என்று மத்திய வங்கி கூறுகின்றபோதிலும் கடனுக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபின்னர் இலங்கை நாணயத்தில் மதிப்பிறக்கம் மேற்கொள்ளப்படுமென ஆய்வாளர்களும் நாணய பரிவர்த்தனையாளர்களும் எதிர்பார்க்கின்றனர். ரூபாவுக்கு ஆதரவான விதத்தில் தமது பணத்தை மத்திய வங்கி பயன்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதிக்கும் சாத்தியம் இல்லையென அவர்கள் நம்புகின்றனர். 2008 இன் கடைசி நான்கு மாதங்களிலும் ரூபாவின் பெறுமதியை தக்கவைக்க மேற்கொண்ட நடவடிக்கைகளால் இலங்கையின் கையிருப்பை அரைவாசியாக இழக்க வேண்டியேற்பட்டது. நாணய பாதுகாப்பை தடுத்து நிறுத்துவது தெளிவான நிபந்தனையாக இருக்கும் என்பது ஏசியா செக்குருட்டீஸின் ஆய்வுப் பிரிவுத்தலைவர் தனுஷ்க சமரசிங்க கூறியுள்ளார். சந்தை தீர்மானிக்கும் மட்டத்தை ரூபா நாணயம் எட்டும்போது 2009 இல் 610 சதவீதத்துக்கு இடைப்பட்ட அளவில் படிப்படியாக நாணய மதிப்பிறக்கம் ஏற்படுமென்று நாணய பரிவர்த்தனையாளர்கள் மதிப்பிடுகின்றனர். இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியமோ அல்லது மத்திய வங்கியோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இது நாணயப் பெறுமதிக்குறைப்பு இலக்கொன்றை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்குமென அர்த்தப்படுமா? இல்லை உலக பொருளாதார நெருக்கடியால் தனது கடனுக்கான நிபந்தனையில் சர்வதேச நாணய நிதியம் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்கும் என்று மத்தியவங்கியும் பொருளியலாளர்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர். நாணய மதிப்பிறக்கம் மேற்கொண்டால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பண நிரம்பலை கட்டுப்படுத்துவதும் தனது வெற்றிகரமான கொள்கைக்கு இடையூறாக அமையுமென்ற வலுவான வாதத்தை மத்தியவங்கி முன்வைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரூபா பெறுமதி குறைப்பை மேற்கொண்டால் அது பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யும். அதனால் வெளிநாட்டுக்கடனை திருப்பிச் செலுத்தும் அரசாங்கத்தின் ஆற்றலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.கடைசியாக கிடைத்த புள்ளிவிபரத்தின் பிரகாரம் நவம்பர் இறுதியில் 12 பில்லியன் டொலர் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் தொகையாகும்.

நிதிக்கையாள்கை, தனியார் மயமாக்கல் போன்றவை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வழமையாக முன்வைக்கும் நிபந்தனைகள் என்ன?

நெருக்கடியான தருணங்களில் வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொள்ள முயற்சிக்கும் விருப்பத்தை சர்வதேச நாணய நிதியம் வெளிப்படுத்தியுள்ளது. நிதிக்கண்காணிப்பு போன்றவற்றை கைவிடுவது உட்பட வேறுபட்ட அணுகுமுறையை கையாள நாணய நிதியம் முயற்சிப்பதாக அரசினால் நிர்வாகிக்கப்படும் கொள்கை கற்கைகள் நிறுவனத்தின் சிரேஷ்ட பொருளியாலாளர் துஷினி வீரக்கோன் கூறியுள்ளார். தனியார்மயப்படுத்தலுக்கு அரசை இணங்கவைக்க சர்வதேச நாணய நிதியத்தால் முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அரசின் தேசியவாத பொருளாதாரக் கொள்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் எதிரானதாகும். ஆனால், தனது கொள்கையால் வலுவான பொருளாதார வளர்ச்சியை மேற்கொள்ள முடிந்தது என்று அரசாங்கத்தால் வாதிடமுடியும். கடந்த வருடம் 6.0 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி இவ்வருடம் 56 சதவீதத்திற்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

நிபந்தனைகள் குறித்து எப்போது தெரியவரும்?

இந்த மாதம் பேச்சுவார்த்தை நிறைவடையுமென எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி கூறுகிறது. அநேகமாக பணம் கிடைத்துவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் இரண்டாவது காலாண்டுப் பகுதியில் 600840 மில்லியன் டொலரை முதற்கட்டமாக சர்வதேச நாணய நிதியம் வழங்கும் சாத்தியம் உள்ளதாக ஏசியா செக்குருட்டீஸை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

http://www.thinakkural.com/news/2009/3/13/...s_page69740.htm

ஆயினும் இரண்டாவது காலாண்டுப் பகுதியில் 600840 மில்லியன் டொலரை முதற்கட்டமாக சர்வதேச நாணய நிதியம் வழங்கும் சாத்தியம் உள்ளதாக ஏசியா செக்குருட்டீஸை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

600840 மில்லியன் டொலர் என்பது நம்பும்படியாக இல்லை. அமெரிக்க பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்க்காக இதைவிட மிகவும் குறைந்த தொகைக்காக ஒபாமா ஒருமாதமா பாடுபட்டு செனட்டிடம் அனுமதி பெற்றவர்.

Edited by Small Point

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.