Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமதாசுடன் சந்திப்புக்கு ஜெ போட்ட திடீர் நிபந்தனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: அதிமுகவில் சேர முடிவெடுத்து விட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை சந்திப்பார் என்று தெரிகிறது.

அதிமுக கூட்டணியில் இணைய நேற்று பாமக பொதுக்குழுக் கூட்டம் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து அதிமுக கூட்டணிக்கு வருகிறது பாமக.

பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும், ஜெயலலிதாவை, ராமதாஸ் சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கப்பட்டிருந்தது.

ஆனால் அப்படி எந்த சந்திப்பும் நேற்று நடைபெறவில்லை. அதேசமயம், அதிமுக தரப்பிலிருந்தும் பாமக முடிவு குறித்து எந்தவித ரியாக்ஷனும் வெளியாகவில்லை. இதனால் பாமக தரப்பில் லேசான பீதி பரவியது.

ஜெ. போட்ட நிபந்தனை:

மத்திய அமைச்சர்கள் அன்புமணியும், வேலுவும் ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகு சந்திக்கலாம் என்று ராமதாசுக்கு ஜெயலலிதா திடீர் நிபந்தனை போட்டதால் தான் இந்தச் சந்திப்பு நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

நாளை இருவரும் டெல்லி சென்று பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தரவுள்ளனர். இதையடுத்து ராமதாஸை நாளை ஜெயலலிதா சந்திக்கவுள்ளார்.

இந்த நிலையில் இன்று பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக அணியில் பாமக?

.

சென்னை,மார்ச் 25: காங்கிரஸ் கூட்டணியில் பாமகவை நீடிக்க வைக்க அக்கட்சி மேற் கொண்ட கடைசிக்கட்ட முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து, அதிமுக கூட்டணியில் பாமக சேருவது உறுதியாகி விட்டது. சென்னையில் நாளை நடைபெற இருக்கும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் படுகிறது. தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இடதுசாரி கட்சிகள் ஏற்கனவே வெளியேறி அதிமுக அணியில் சேர்ந்துள்ளன.

.

பாமகவை திமுக கடந்த ஆண்டு கூட்டணியிலிருந்து வெளி யேற்றியது. எனினும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பாமக தொடர்ந்து இருந்து வந்ததுடன், மத்திய அரசிலும் நீடித்தது. தற்போது மக்களவை தேர்தலை யொட்டி பாமகவின் நிலை என்ன? என்பது பற்றிய கேள்விக்குறி அரசியல் வட்டாரத்தில் இருந்து வந்தது.

காங்கிரஸ் கூட்டணியில் பாமக தொடர்ந்து இருந்து வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்த போதிலும், அதிமுகவுடன் பாமக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை இறுதி செய்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஒருபக்கம் இவ்வாறு செய்திகள் வந்தாலும், மறுபக்கத்தில் பாமகவை காங்கிரஸ் கூட்டணியிலேயே நீடிக்க செய்ய காங்கிரஸ் தரப்பில் பல முயற்சிகள் செய்யப்பட்டன.

காங்கிரஸ் தலைவர்கள் பாமக நிறுவனரை சந்தித்து பேசினார்கள். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் பாமக இந்த கூட்டணியிலேயே தொடர வேண்டுமென்று வலியுறுத்தினார். ஆனால் உறுதியான பதிலை ராமதாஸ் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணி யில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இருப்பதாக திமுக தலைவரும், முதலமைச் சருமான கருணாநிதி தெரிவித்தார். அந்த கூட்டணியில் பாமகவுக்கு இடமில்லை என்று அவர் சூசகமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடைசி கட்ட முயற்சியாக ராமதாசின் புதல்வரும், மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாசை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் பணித்தது. அதன்படி நேற்று டெல்லி சென்ற அன்புமணி காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேலை சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 42 நிமிடங்கள் பேசினார்கள்.

அப்போது அன்புமணியின் மாமனாரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான எம்.கிருஷ்ணசாமி, தற்போதைய தலைவர் கே.வீ.தங்கபாலு ஆகியோர் இருந்தனர்.\ சந்திப்பு முடிந்து வெளியே வந்த அன்புமணி, கூட்டணி பற்றி அகமது பட்டேலுடன் விவாதித்ததாகவும், இன்னும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என்றும் நாளை நடைபெற விருக்கும் பாமக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே அன்புமணியும், ரெயில்வே இணையமைச்சர் வேலுவும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக பரவிய செய்திகள் தவறானவை என்றும் அவர் தெரிவித்தார். அதிமுகவுடன் பாமக கூட்டணி சேரவிருப்பதாக வெளிவந்த தகவல் களையும் அவர் வதந்தி என்று மறுத்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று கட்சியின் தேர்தல் அறிக்கை வெளி யிட்டபோது, பாமக, காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பதாக தெரிவித்தார். எனினும் காங்கிரசின் கடைசிக்கட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி பற்றி பேச்சுக்கள் முடிவடைந்து பாமகவுக்கு அந்த அணியில் 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அரக்கோணம், ஆரணி, காஞ்சிபுரம், தர்மபுரி, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகளில் பாமக போட்டியிடும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைப்பது பற்றிய முடிவு நாளை கூடும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்த பாமக பொதுக்குழு தற்போது சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நாளை காலை 11 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு பொதுக்குழு வழங்கும் என்றும், அதனை அடுத்து அவர் அதிமுகவுடன் கூட்டணி என்ற அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என தெரிகிறது.

பாமக தனது முடிவை அறிவித்ததும் நாளை மாலையே ராமதாஸ், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பின்னர் பாமக போட்டியிடும் தொகுதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவை சந்திப்பதற்கு வசதியாகத்தான் தைலாபுரத்தில் நடக்கவிருந்த பொதுக்குழு கூட்டம் சென்னைக்கு மாற்றப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இலங்கை பிரச்சனையை முதலமைச்சர் கருணாநிதி கைகழுவி விட்டதாக ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு, அவரை கடுமையாக கண்டித்தும், கேலி செய்தும் கருணாநிதி பதிலறிக்கை விடுத்திருப்பதை அடுத்து நாளைய பாமக பொதுக்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு கடும் கண்டனங்கள் எழும்பும் என கூறப்படுகிறது.

http://www.maalaisudar.com/newsindex.php?i...mp;%20section=1

  • கருத்துக்கள உறவுகள்

அன்புமணி, வேலு ராஜினாமா - சந்திக்க மறுத்தார் சோனியா

மத்திய அமைச்சர் பதவிகளை அன்புமணி ராமதாஸும், ஆர்.வேலுவும் நேற்று மாலை ராஜினாமா செய்தனர்.

திமுக கூட்டணியில் சேராமல் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது பாமக. இதையடுத்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸும், வேலுவும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இருவரும் நேற்று இருவரும் டெல்லி சென்றனர். மாலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தத்தமது ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

சந்திக்க சோனியா மறுப்பு ...

பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க அன்புமணி திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரை சந்திக்க விருப்பமில்லை என்று சோனியா காந்தி கூறி விட்டதாக தெரிகிறது.

இதனால் சோனியாவை சந்திக்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டார் அன்புமணி.

-தட்ஸ் தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.