Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ICRC பணியாளர் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்கள் மீது தொடர்ச்சியான விமான, பீரங்கி மற்றும் தேமோபரிக் குண்டுகளை வீசி தாக்கி வரும் சிறீலங்கா பயங்கரவாத அரசு இன்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரை குண்டு வீசிக் கொன்றுள்ளது. கடந்த 4ம் திகதியும் காயமடைந்த மக்களை ஐ சி ஆர் சி கப்பலில் ஏற்ற உதவிக் கொண்டிருந்த ஒரு பணியாளரும் கொல்லப்பட்டுள்ளார்.

இதற்கிடையே வன்னி மக்கள் மீது விமானங்கள் மூலம் தேமோபரிக் குண்டுகளை (அமெரிக்கா, ரஷ்சியா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் பாவிக்கும் கொடிய ஆயுதங்கள்) வீசிவிட்டு.. புலிகள் தம்மிடமிருந்து தப்பிச் செல்லும் மக்களைக் குண்டு வைத்துக் கொல்வதாகக் கதையளந்து கொண்டிருக்கிறது.

1995 இலும் இராணுவம் தென்மராட்சியை கைப்பற்றிய வேளை சந்திரிக்கா அரசு இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆதாரம்: டெயிலிமிரர்.எல்கே.

Edited by nedukkalapoovan

கடைசி நிமிடம் வரை மக்கள் பணியை செய்துகொண்டிருந்த பணியாளருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனயோ ........ , உயிர்கள் .

இன்றில்லா விட்டால் நாளை அந்த உயிர்கள் பறிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் .

அஞ்சலி ஐயா , நீங்கள் நான் வணங்கும் தெய்வத்திற்கு மேலானவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

கருணை உள்ளம் கொண்ட அந்த பணியாளரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு பிரதேசத்தின் மீது எறிகணை தாக்குதல் மற்றுமொரு பணியாளர் கொல்லப்பட்டதாக ஐசிஆர்சி தகவல்

வீரகேசரி இணையம் 4/9/2009 8:47:41 AM -

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பிரதேசமாகிய அம்பலவன்பொக்கணை என்ற இடத்தின் மீது நேற்று புதன்கிழமை காலை நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அந்தக் குழுவின் இலங்கைக்கான தலைமை அதிகாரி போல் கெஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையாகிய சின்னத்துரை குகதாசன் என்ற இந்தப் பணியாளர் தமது குடும்பத்தினருக்குக் குடி தண்ணீர் எடுப்பதற்காக வெளியில் சென்றிருந்த போது, நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.

தண்ணீர் விநியோக தொழில்நுட்பவியலாளராக கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் பணியாளராக இவர் பணியாற்றி வந்தார். புதுமாத்தளன் வைத்தி்யசாலையில் அனுமதிக்கப்படுகின்ற காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களை திருகோணமலைக்குக் கப்பல் மூலமாகக் கொண்டு வருகின்ற அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் மனிதாபிமான பணிகளில், புதமாத்தளன் வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களைக் கப்பலுக்குக் கொண்டு செல்வதற்கான பணிகளில், அண்மைக்காலமாக இவர் ஈடுபட்டிருந்தார் என்று அந்த அறிக்கையில் அனைத்துலக செஞ்சிலுவைக்குழு தெரிவித்திருக்கின்றது.

அனைத்துலக செஞ்சிலுவைக்குழுவின் மற்றுமொரு பணியாளராகிய வடிவேல் விஜயகுமார் என்பவர், இந்தப் பிரதேசத்தில் உள்ள வலைஞர்மடம் வடக்குப் பகுதியில் கடந்த மாதம் 4 ‘ஆம் திகதி நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் எறிகணையின் சிதறல் துண்டு வந்து தாக்கியதில் கொல்லப்பட்டார் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.