Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முடிந்தளவு வேகமாகச் செயற்படுகள்! - போர்நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா.விடம் கனடா வேண்டுகோள்

Featured Replies

இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்துகொள்ளப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ள கனடா அரசாங்கம், முடிந்தளவு வேகமாகச் செயற்படும்படி ஐ.நா.வைக் கோரியுள்ளது.

பிரச்சினைக்குட்பட்டுள்ள இந்தத் தெற்காசிய நாட்டில் போர்நிறுத்தம் செய்துகொள்ளப்படவேண்டும் என்று

ஐக்கிய நாடுகள் சபையை தாம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கனன் வியாழனன்று தகவல் வெளியிட்டுள்ளார்.

"உடனடிப் போர்நிறுத்தத்துக்கு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஏற்பட்டுவரும் இழப்புக்கள் குறித்து நாம் மிகவும் கவலையடைந்துள்ளளோம். குறிப்பாக மோதல் பிரதேசத்திலிருக்கும் பொதுமக்கள் குறித்து அதிக கவலையடைகிறோம்'' என்றார் கனன்.

"பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவேண்டும் என்று அரசாங்கத்தையும், விடுதலைப் புலிகளையும் நாம் கோருகிறோம்'' என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

கனடாவின் ஒட்டாவா மாநிலத்தில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் போராட்டங்களால் ஒட்டாவா நகர் மூன்றாவது நாளாகவும் ஸ்தம்பித்துள்ளது.

இரண்டு துப்பாக்கிகளைச் சித்திரிக்கும் புலிகளின் கொடிகளுடன் நடாத்தப்படும் இந்தப் போராட்டங்களைத் தடுத்து நிறுத்துமாறு கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் தயா பெரேரா விடுத்த வேண்டுகோளை கனன் நிராகரித்தார்.

"எதிர்ப்புப் போராட்டங்களை நிறுத்துவது எனது பணியல்ல'' என்று தெரிவித்த அவர், "எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு கனடாவில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாம் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். மக்கள் தமது கருத்துக்களையும், அக்கறைகளையும் வெளியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று மேலும் கூறினார்.

"எதற்கும் ஒரு எல்லையுண்டு. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஏதோவொரு இடத்தில் தடுத்து நிறுத்தப்படவேண்டும்'' என்று புதனன்று கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் வெளியிட்ட கருத்துக்கைள கனன் கருத்திலெடுக்கவில்லை என்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள கனேடிய பத்திரிகையான நசனல் போஸ்ட் தெரிவித்துள்ளது.

"பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை கடுமையாகக் கண்டிப்பதுடன், இராஜதந்திர அழுத்தங்களையும், மேலதிக மனிதாபிமான உதவிகளுக்கான கோரிக்கைகளையும் கனடா விடுக்கவேண்டும். மோதல்களை நிறுத்தவேண்டும் என்ற இலங்கை மக்களின் கோரிக்கைகளை நாம் ஏற்றுக்கொள்வதுடன், மோதல்களில் தமது உறவுகள் பாதிக்கப்பட்டதால் வேதனையுறும் கனடாவாழ் இலங்கையர்களின் துயரங்களை நாம் பகிர்ந்துகொள்கிறோம்'' என்றார் கனேடிய வெளிவிவகார அமைச்சர் கனன்.

நிலைமைகளை கனடா உன்னிப்பாக அவதானித்து வருவதுடன், "இயன்றளவு வேகமாக இந்த விடயத்தில் ஐ.நா. தலையிடவேண்டும்'' என்று தாம் கோருவதாகவும் கனன் தெரிவித்தார்.

"இந்த விடயம் தொடர்பாக ஐ.நா. சபையில் தொடர்ச்சியாக நாம் வலியுறுத்தி வருகிறோம். எமது கருத்துக்களுடன் ஒத்துப்போகும் ஏனைய நாடுகளுடன் இணைந்து உலகின் இந்தப் பகுதியில் விரைவில் போர்நிறுத்தம் ஏற்படுவதை உறுதிசெய்ய கனடா தொடர்ந்தும் பாடுபடும்'' என்று கனன் குறிப்பிட்டுள்ளார்.

(நசனல் போஸ்ட்)

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரளவு பரவாயில்லை. ஆனால் காணாது.

இப்படியான ஒரு நிலை ஏற்பதும், அவலங்கள் பெருகும், இனவழிப்பு உச்சத்தில் இருக்கும் என்றெல்லாம் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தியும் இந்த உலகம் கண்டுகொள்ளவேயில்லை. என்ன நம்பிக்கையில் இவர்களெல்லாம் மௌனித்தார்களோ தெரியவில்லை.

தற்போதைய நிலையில் இக் கோரிக்கையை முன்வைக்கும் கனடிய அரசு முதலில் புலிகள் மீதான தடையை நீக்கித் தன் தவறைத் திருத்திக் கொண்டால், அனைத்து விடயங்களும் அது சார்ந்த நடவடிக்கைகளும் காத்திரமானதாக இருக்கும்.

வெளி நாட்டு சிங்களவனின் வாலை முதல் நறுக்க வேண்டும்.

தமிழனையே அழிப்பதையே குறியாக கொண்ட சிங்கள இனத்தை இல்லாமல் செய்ய வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான்.

முதலில் தடையை நீக்குங்கோ. அது மற்றைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். உங்களுக்கும் பெருமை கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு துப்பாக்கிகளைச் சித்திரிக்கும் புலிகளின் கொடிகளுடன் நடாத்தப்படும் இந்தப் போராட்டங்களைத் தடுத்து நிறுத்துமாறு கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் தயா பெரேரா விடுத்த வேண்டுகோளை கனன் நிராகரித்தார்.

கொலைவாள் ஏந்தியபடி நிற்கின்ற சிங்களக்கொடியை முதலில் கனடாவில் இருந்து துரத்தி விட்டுப் புலிக் கொடி பற்றிக் கதைக்கலாமே....

  • கருத்துக்கள உறவுகள்

கொலைவாள் ஏந்தியபடி நிற்கின்ற சிங்களக்கொடியை முதலில் கனடாவில் இருந்து துரத்தி விட்டுப் புலிக் கொடி பற்றிக் கதைக்கலாமே....

அது ....தூயவன்.வரவேற்கிறேன் உங்கள் கருத்தை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.