Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழருக்காக கரூரைச்சேர்ந்த சிவானந்தம் சென்னையில் தீக்குளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழருக்காக கரூரைச்சேர்ந்த சிவானந்தம் சென்னையில் தீக்குளிப்பு

கரூரைச்சேர்ந்த ஆ.சிவானந்தம்(46). சென்னை வடபழனியில் உள்ள தேர்தல் ஆணையம் முன்பு போர் நிறுத்தம் செய்யுங்கள்- ஈழத்தமிழரை காப்பாற்றுங்கள் என்று கோரிக்கையை உரக்க எழுப்பியபடி தீக்குளித்தார்.

அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கே அவர் அவசர பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நச்சுக் குண்டுகளை வீசி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவே தீக்குளித்தேன் என்று மருத்துவமனையில் காவல்துறையினரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவருக்கு உடலில் 80% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தீக்குளித்த இளைஞர் சிவானந்தத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை எதிர்த்து தமிழ்நாட்டில் முத்துக்குமார் தொடங்கி ஏற்கெனவே 12 பேர் தீக்குளித்துள்ளனர்

ஆதாரம்: நக்கீரன்

Edited by Mullaimainthan

இந்த சாவுகள் எல்லாம் கலைஞருக்கே சமர்ப்பணம்.

சிவானந்தம் உங்கள் தியாகத்துக்கு தலை வணங்குகின்றேன். ஆனாலும் உங்கள் உலகத் தலைவர் இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்.

இந்திய தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களுக்காக எவரும் தீக்குளித்தால் சந்தோஷப்படுவார்கள். தன்னினத்துக்காகத் தீக்குளித்தால் அதுவும் இந்தத் தேர்தல் நேரத்தில் வாய் திறக்கவே மாட்டார்கள்.

இதுதான் காந்தி தேசம்... (காந்தியத்தை மதித்தது இந்தியா அல்ல.. இங்கிலாந்து. இது வேற கதை.. இங்கிலாந்து காந்தியத்தை அன்று மதித்தால்தான் காந்தியின் சாத்வீக போராட்டம் வெற்றியடைந்தது.)

தமிழ்நாட்டு தமிழனை நாய் என்றும் மதியாத அரசு மத்தியில இருக்கேக்க இந்தசாவுகள் விழழுக்க இறைத்த நீராதானிருக்கும். மிகவிரைவில் மக்கள் மாற்று வழியை பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளார்கள். அது நடக்கும் நிச்சயபாக..அதன்பிற்பாடிதான் இந்திய அரசு தீக்குளித்து தம்முயிரை ஈந்ந இந்த மாணத்தமிருக்கு தாம் கொடுக்கபோகும் விலையை உணர்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இணையம் - இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பழ. நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தன் (வயது 46) எனபவரே சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயில் அருகே நேற்று வெள்ளிக்கிழமை இரவு தீக்குளித்துள்ளார்..

இலங்கையில், நிலவும் யுத்தம் காரணமாக அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் சிலர் சிவானந்தனின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.இதனை அடுத்து கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அவரை பொலிஸார் அனுமதித்துள்ளனர். அவரது உடலில் 80 சதவீத அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

சிவானந்தம் மரணம் அடைந்து விட்டதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன.அவருக்கு எனது வீர வணக்கங்கள்.உறவுகளே தீக்குளித்தது போதும். தமிழகத்தை முடக்கக்கூடிய வேறு விதமான போராட்டங்களை நடத்துங்கள். தயவு செய்து உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.