Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸ்ரீகாந்தா ஓர் புலி உளவாளி முடியை வளர்த்துக்கொண்டு சிரட்டையுடன் புறக்கோட்டைக்கு சென்றால் நன்றாக பிச்சை எடுக்கலாம் பாராளுமன்றில் அமைச்சர்கள் காடைத்தனம் உரை ஹன்சாட்டில் இருந்து நீக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீகாந்தா ஓர் புலி உளவாளி முடியை வளர்த்துக்கொண்டு சிரட்டையுடன் புறக்கோட்டைக்கு சென்றால் நன்றாக பிச்சை எடுக்கலாம் பாராளுமன்றில் அமைச்சர்கள் காடைத்தனம் உரை ஹன்சாட்டில் இருந்து நீக்கம்:

அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திலுள்ள புதமாத்தளன் பகுதியை நோக்கி படையினர் மேற்கொண்ட தாக்குதல்களால் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தெரிவித்த கருத்தை வாபஸ் பெறவேண்டும் எனவும் இல்லாவிடின் அவரை வெளியே துரத்துவோம் என்றும் ஆளுந்தரப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் நேற்று நாடாளுமன்றில் கூட்டாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் 10 நிமிடங்களுக்கு மேலாக சபையில் பெரிதும் அமளி துமளி ஏற்பட்டது. ஆளும் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய அவரது உரை ஹன்சார்ட்டிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளுராட்சி அதிகார சபைகள் திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா உரையாற்றிய போதே அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தை நோக்கி படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கையை தெரிவித்தார்.

முன்னதாக சபையில் அதிகார சபைகள் திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதம் சபையில் இடம் பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு மிகக் குறைவான பிரதிநிதிகளே பிரசன்னமளித்திருந்தனர்.

பெரும்பான்மையான ஆசனங்கள் வெறுமையாகவே காட்சியளித்தன. பெரும்பாலான ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வெளியேயும் இன்னும் பலர் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையிலுமாக இருந்துள்ளனர்.

இவ்விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராhளுமன்ற உறுப்பினரான சிறிகாந்தா அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்திருந்த பெருந்தொகையான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

பெருந்தொகையான எண்ணிக்கையினர் கொல்லப்பட்டதாக சிறிகாந்தா சபையில் தெரிவித்ததை அடுத்து கோபமடைந்த ஆளுந்தரப்பினர் அவரது பேச்சை இடைமறித்து ஒட்டுமொத்தமாக கோஷம் எழுப்பினர்.

சிறிகாந்தாவை ஒரு புலி என்றும், பிரபாகரன் சொல்வதையே அவர் சொல்கிறார் என்றும், மாறி மாறிக் கத்திய ஆளும் கட்சி உறுப்பினர்கள் மிக மோசமான கெட்ட வார்த்தைகளால் சிறிகாந்தாவைத் திட்டித் தீர்த்தனர்.

இந்த விடயத்தைக் கேள்விப்பட்டதும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் சிற்றுண்டிச்சாலையிலும் குழுமியிருந்த ஆளும்கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபைக்கு விரைந்து வந்து சிறிகாந்தாவுக்கு எதிராக கோசமெழுப்பினர்.

சட்டமூலங்கள் மீதான விவாதங்களின் போது வெறிச்சோடி கிடந்த ஆளுந்தரப்பு ஆசனங்கள் சிறிகாந்தாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து உறுப்பினர்களால் நிரம்பி வழிந்தன. சபைக்குள் பிரவேசித்த உறுப்பினர்கள் சிலர் தங்களது ஆசனங்களுக்கு செல்லாது கூட்டமாக நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்த உறுப்பினர்களுடன் இணைந்து கூச்சலிட்டனர்.

தமிழ் மொழியில் உரையை ஆரம்பித்த சிறிகாந்தா கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். இதற்கிடையே அமைச்சர்களான மேர்வின் சில்வா, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோகித அபேகுணவர்தன, ஹேமகுமார நாணயக்கார, மஹிந்த ரட்ணதிலக்க, லயனல் பிரேமசிறி ஆகியோர் கூச்சலிட்டவாறு சபைக்கு நடுவே வரமுற்பட்டனர். அப்போது படைக்கல சேவிதர் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல சிறிகாந்தாவைக் கடுமையாக குற்றம் சாட்டினார்.

சிறிகாந்தா தெரிவித்த எண்ணிக்கை பிரபாகரனால் அவருக்கு கொடுக்கப்பட்டதா என்பதை உடனடியாகத் தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் வற்புறுத்தினார்.

அரசுக்கும் இராணுவத்தினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்த முனையும் சிறிகாந்தா ஒரு புலியெனக் குற்றஞ் சாட்டினார்.

இதற்கு மத்தியில் ஒழுங்கு பிரச்சினையை கிளப்பிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பதுங்கு குழிக்குள் இருந்து கொண்டு பிரபாகரன் வழங்கிய தகவலையா? வழங்கினீர்கள், நீங்களும் புலிகள் தானே முடியை இன்னும் வளர்த்துக்கொண்டு சிரட்டையுடன் புறக்கோட்டைக்கு சென்றால் நன்றாக பிச்சை எடுக்கலாம். வரப்பிரசாதங்களை பயன்படுத்திக்கொண்டு சபையை தவறாக வழிநடத்த வேண்டாம். முப்படையினர் எவரையும் தாக்கவில்லை என்றார்.

அரசாங்கத்திற்கும் படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயன்ற சிறிகாந்தா முடிவளர்த்த பெரிய புலி, பெரிய புலி என்றும் கோஷமிட்டனர்.

இதற்கு மத்தியில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போதிலும் அதற்கு ஆளுந்தரப்பினர் இடமளிக்கவில்லை. தொடர்ந்தும் கோபாவேசத்துடன் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர்.

அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார உட்பட பல அமைச்சர்கள் சிறிகாந்தாவை மிகவும் கடுமையாகச் சாடினர்.சிறிகாந்தாவால் தனது உரையை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

அவர் பல தடவைகள் உரையாற்ற முற்பட்ட போதும் அதற்கு அரச தரப்பினர் இடம்கொடுக்கவில்லை. இந் நிலையில் சிறிகாந்தாவின் நேரம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரச தரப்பினர் மேசையை தட்டியும் ஆரவாரமிட்டும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சிறிகாந்தாவின் உரை அரசாங்கத்திற்கும் படையினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளமையினால் அவரது உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்றும் ஆளுந்தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைகளை அடுத்து அவரது உரை ஹன்சாட்டிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவாளியாக கடமையாற்றி வருவதாக விவசாய அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்தா நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் உளவு பணிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சரும், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருமான காமினி திஸநாயக்க படுகொலைச் சம்பவத்துடன் ஸ்ரீகாந்தாவிற்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹாவலி திட்டத்தின் போது ஏற்பட்ட அறிமுகம் காரணமாக ஸ்ரீகாந்தாவை காமினி திஸாநாயக்க அரசியலில் அறிமுகப்படுத்தினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி காமினி திசாநாயக்க தொடர்பான தகவல்களை புலிகளுக்கு வழங்கி அவரது படுகொலைச் சம்பவத்திற்கு ஸ்ரீகாந்தா துணை நின்றார் என ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேசத்தை கட்டியெழுப்பும் வரி அதிகரிப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....=8664&cat=1

ஏன் முடி வளர்க்காமல் சென்றால் பிச்சை போட மாட்டார்களா?? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அட தாடி வளர்த்து பரட்டை தலையோட போனால்தான் பிச்சை போடுவாங்க.. அதான் கெகலிய ரம்புக்வெலவை அரசாங்கம் ஸ்பெசலா வைச்சிருக்கு.....

இருந்தாலும் பண்டாக்கள் எல்லாம் ஒற்றுமையாத்தான் நிக்கினம். :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் எடுப்பது பிச்சை. அதிலை உண்மையை சொல்பவரை பிச்சை எடுக்க சொல்கிறது பிச்சைகார HELL LANKA.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனிடத்தில் இருக்கும் துவேசமும் , இன ஒற்றுமையும் புதியதல்ல ,

இதே வேளை........ தமிழர்களால் பயங்கரவாத சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல்களில் , ஒரு சில சிங்கள பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் ........,எத்தனை வியாக்கியானம் கதைத்துக்கொண்டு எம்மவர்கள் கிளம்பியிருக்கின்றார்கள் . இப்போ தமிழர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் போது ....... எங்கே போய்விட்டது அவர்களின் மனிதாபிமானம் . இங்கு எட்டிக்கூட பார்க்கவில்லையே. என்ன கேடு கெட்ட இனம் எங்கள் இனம் . காட்டிக்கொடுப்பவனும் , கூட்டிக்கொடுப்பவனும் , தலையாட்டியும் , வெள்ளைவானும் , ஒட்டுக்குழு என்றும் எத்தனை வேசங்களில் திரியுதுகள் . தூ....... வெட்கம் , ரோசம் இல்லாத பிறப்புகள். :mellow::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனிடத்தில் இருக்கும் துவேசமும் , இன ஒற்றுமையும் புதியதல்ல ,

இதே வேளை........ தமிழர்களால் பயங்கரவாத சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல்களில் , ஒரு சில சிங்கள பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் ........,எத்தனை வியாக்கியானம் கதைத்துக்கொண்டு எம்மவர்கள் கிளம்பியிருக்கின்றார்கள் . இப்போ தமிழர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் போது ....... எங்கே போய்விட்டது அவர்களின் மனிதாபிமானம் . இங்கு எட்டிக்கூட பார்க்கவில்லையே. [b]என்ன கேடு கெட்ட இனம் எங்கள் இனம் . காட்டிக்கொடுப்பவனும் , கூட்டிக்கொடுப்பவனும் , தலையாட்டியும் , வெள்ளைவானும் , ஒட்டுக்குழு என்றும் எத்தனை வேசங்களில் திரியுதுகள் . தூ....... வெட்கம் , ரோசம் இல்லாத பிறப்புகள். :mellow::unsure:

எங்கள் விடுதலை இத்தனை தூரம் பின்னோக்கிப்போவதே இந்தக்கோடாரிக்காம்புகளால் தானே!!!.....

இறைவா!

துரோகிகளிடம் இருந்து எம் இனத்தைக்காப்பாற்று! எதிரிகளைத் தலைவர் பார்த்துக்கொள்வார்" என்று என் சகோதரி சொன்னதை நானும் சொல்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.