Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்ப்பகுதியில் இருந்து கடைசி தமிழன் வெளியேறும்வரை சண்டையை நிறுத்தி வைக்க வேண்டும்: இந்தியா கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் தமிழர் கொலைகளை நிறுத்த இந்தியா வலியுறுத்து. அவசர உயர் மட்டக் கூட்டத்தில் முடிவு

[23 ஏப்ரல் 2009, வியாழக்கிழமை 7:05 மு.ப இலங்கை]

வன்னியில் தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அப்பாவித் தமிழர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது குறித்து இந்தியா கவலை அடை கின்றது.

அதேவேளை பொதுமக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கும் காட்டுமிராண் டித்தனத்தை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு நேற்றிரவு புதுடில்லியில் நடைபெற்ற அரசாங்க உயர் மட்டத்தினரின் அவசர கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் தமிழ்ப் பொதுமக்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது குறித்து நாங்கள் மிகவும் மனவருத்தம் அடைகின்றோம். இந்தப் படுகொலைகள் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச் சர் பிரணாப் முகர்ஜி அவசர கூட்டத்தின் பின்னர் தெரிவித்தார்.இலங்கைப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கவென அவசரக் கூட்டம் ஒன்று நேற்றிரவு இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்புத்துறை அமைச்சர் எல்.கே.அந்தோனி, தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் போரை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் எதிர்பார்க்கப்பட்டது போன்று ஆணித்தரமான முடிவு எதுவும் எடுக்கப்படாமை குறித்து தமிழக அரசியல் வட்டாரங்கள் மிகுந்த கவலை தெரிவித்தன. இது வெறும் தேர்தல் "ஸ்ரண்ட்"" என்று அவதானி ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார். தமிழக எதிர்க்கட்சித் தலைவரான செல்வி ஜெயலலிதாவும் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இந்தப் பின்னணியிலேயே பிரதமர் தலைமையிலான அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் இலங்கை அரசை போரை நிறுத்தக் கோரும் அழுத்தம் அதிகரித்து வருவதையடுத்து அதனைத் தணிக்குமுகமாகவும் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியாவுக்கு எடுத்துரைக்குமுகமாகவும் ஜனாதிபதியின் சகோதரரும், அவரது ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ விரைவில் இந்தியா செல்லவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பை இந்தியா அழைத்துப் பேச்சு நடத்தி யிருந்ததும் குறிப்பிடத்தக்கது. (அ)

உதயன் பத்திரிகை

இலங்கை நிலவரம் தொடர்பாகஇ பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் 2 வது நாளாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாகஇ மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கை பிரச்சினையில் தீவிரவாதிகள் மீது எங்களுக்கு அனுதாபம் கிடையாது. அப்பாவி மக்களுக்காகத்தான் பெரிதும் கவலைப்படுகிறோம். போர்ப்பகுதியில் இருந்து கடைசி தமிழனும் வெளியேறும்வரைஇ ராணுவ தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம் என்றார்.

இந்தியாவை மட்டுமல்ல முழு உலகையே ராஜபக்ச (ச)கோதரர்கள் ஏமாற்றிவிட்டார்கள்

இதை இறயாண்மையுள்ள தமிழன் கூறும் போது புரியவில்லையா?அல்லது இப்பவும் நடிக்கிறீர்களா?

இலங்கையரசு போரை நிறுத்தவில்லை என்கிறீர்களே?கூட்டணியினருக்கு என்ன சொன்னீர்கள்? நிரந்தர போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை(இது யார் கூறியது? யாருக்காக கூறியது?)

  • கருத்துக்கள உறவுகள்

செய்பவர்களே நிறுத்த சொன்னால்........

சும்மா தலையை மட்டும் ஆட்டுபவர்கள் எவ்வாறு நிறுத்துவது. இதெல்லாம் பழைய தேர்தல்கால அவியல்கள். காலத்தை உணர்ந்து ஏதாவது புதிதாய் அவிப்பீர்கள் என்று எதிர்பர்ர்த்த எமக்குதான் ஏமாற்றம்.

தமிழ் மக்களின் கொலைகளைபற்றி மிகவும் வருத்தம் அடைகின்றார்களாம். இந்திய ஆட்சியாளர்கள்?

புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கின்றார்களாம்? சமாதனகாலத்தில் எல்லா பாதைகளும் திறந்துதானே இருந்தன?

பதவிவெறியர்களின் கையில் ஆட்சி போனதால் நாட்டு மக்களின் நிலை சொல்லியாளதது. ஆடுங்கள் ஆடுங்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஆடுவீர்கள்?

காங்கிரஸ் பன்றிகளே மூடுங்கள் உங்கள் நாத்தம் பிடித்த வாயை..

போரை நடத்துவதே நீங்கள்தானே பரதேசிகளே!

Edited by வசி_சுதா

சிறு விளக்கம் தேவை: இந்த இடுகையை துவக்கியது நான் தான் - எப்படி மாறியது? நல்ல கருத்துக்களுக்கு தவறுதலாக ஏற்பட்டிருப்பின் பரவாயில்லை... மாறியதால் வருந்தவில்லை ஆனால் எப்படி என்று அறிய விரும்புகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.