Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜ துரோக குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தயா , ஜோர்ஜ் மாஸ்டர்களுக்கு எதிராக நடவடிக்கை - கோத்தபாய:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ துரோக குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தயா , ஜோர்ஜ் மாஸ்டர்களுக்கு எதிராக நடவடிக்கை - கோத்தபாய:

பயங்கரவாதத்திற்கு உதவியமை மற்றும் ராஜதுரோக குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், விடுதலைப்புலிகளின் மொழிபெயர்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் என அழைக்கப்படும் குமாரன் பஞ்சரத்தினம், புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் உயர்மட்ட பிரதிநிதிகள் என படையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உறுதுணை வழங்கியமை, கொலைகள் தொடர்பான தகவல்களை மறைத்தல், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டமை, விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளாக செயற்பட்டமை, விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் தெரிவித்தமை, இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச ஊடகங்களில் பொய்யான பிரசாரங்களை மேன்கொண்டமை, புலிகளின் தலைமை மறைந்துள்ள இடத்தை அரசாங்கத்திற்கு மறைத்தமை மற்றும் ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு, அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் இருவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

இதேவேளை விடுதலைப்புலிகளின் ரகசிய தகவல்கள் பலவற்றை தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் வெளியிட்டுள்ளதாகவும் இந்த தகவல்களின் மூலம் விடுதலைப்புலிகளின் தலைமை பீடத்தில் யார் யார் உயிருடன் இருக்கின்றனர் என்பது தமக்கு தெரியவந்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே மேலதிக விசாரணைகளுக்காக ஜோர்ஜ் மாஸ்டர் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோரை கொழும்புக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news....=8752&cat=1

Edited by nunavilan

இதில் என்னவோ சூட்சுமம் இருக்கிரது

1.புலிகள் சரண் அடைந்தமை இதான் முதல் தடவை, இது அவர்கள் பாணி இல்லை.

2.சரண் அடைந்தவர்களின் புகைபடங்கள் வெளியிடப்படவில்லை defence.lk ல் file photos மட்டுமே உள்ளன

3.அதை விட இச்செய்திக்கு defence.lk,dailymirror போன்ற ஊடங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை, அது மட்டுமல்ல புதன் அன்று பெரிய செய்தியாக வெளியிடப்பட்டு நேற்றுக்காலையில் இது காணாமல் போய் விட்டது. புலிகளின் பின்னடைவு குரித்த செய்திகள் சிங்கள ஊடகங்களில் காணாமல் போவதில்லை, அவை அப்படியே இருக்கும்

4.என்னைப் பொறுத்தவரை இதை காரண்மாய் வைத்து பாதுகாப்பு வலயம் மீது மாபெரும் படையெடுப்புக்குத் தயார்ராகின்றது

இந்த உயர்மட்டத் தலைவர்களுக்குத் தெரிந்த இரகசியங்களை இனிமேல்தான் உருவாக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.