Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடனடிப் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாஷிங்டன் : இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது . இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் , இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் போர் குறித்து வெள்ளை மாளிகை முதல் முறையாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது . ஒபாமா கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்ற பிறகு வெளியாகும் முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை இதுவாகும். அதில் இரு தரப்பினரும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது . சர்வதேச மனிதநேய கோட்பாட்டுகளை அ‌த்துமீறி இலங்கை ராணுவம் நடக்கிறது .போரை தொடர்ந்து நடத்துவதால் இன பிரச்னை மேலும் தீவிரமடையும். நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் .பாதுகாப்பு வளையங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்துவதை இலங்கை நிறுத்த வேண்டும் . பத்திரிகையாளர்களையும், சர்வதேச உதவி குழுக்களையும் பொதுமக்களை சந்திக்கவும், அவர்களுக்கு உதவவும் இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் போரில் அகப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய அவல நிலை தொடர்பாகவும், கொல்லப்படுபவர்களின் தொகை அதிகரித்துச் செல்வதையிட்டும் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்கா, இரு தரப்பினரும் உடனடியாக போரை நிறுத்திக்கொண்டு போர்ப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக்கோரியுள்ளது.

இது தொடர்பாக வாசிங்ரன் வெள்ளை மாளிகையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"பாதுகாப்பு வலயத்தின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு நாம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளும் அதேவேளையில், அனைத்துலக உதவி நிறுவனங்களைத் தடுப்பதையும், ஊடகங்கள் அங்கு செல்வதற்கான அனுமதியை மறுப்பதையும் நிறுத்திக்கொள்ளுமாறும் சிறிலங்கா அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்பெயர்ந்த மக்கள் தம்மைப் பதிவுசெய்து வசிக்கும் பகுதிக்குச் சென்று அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு அனைத்துலக உதவி நிறுனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறான மக்களுக்கு உதவும் முயற்சியில் அமெரிக்காவும் அதன் அனைத்துலகப் பங்காளிகளுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொள்கின்றது.

அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு உட்பட்ட கடமைப்பாடுகளின்படி நடந்துகொள்ளுமாறு இரண்டு தரப்பையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். இவை மீறப்படும் சம்பவங்கள் தொடர்பில் நாம் மிகவும் கவலையடைந்திருக்கின்றோம். "

புதினம்

அமெரிக்கா அவசியமற்ற முறையில் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்கிறது: ஜாதிக ஹெல உறுமய

இலங்கையின் உள் விவகாரங்களில் அமெரிக்க அராசங்கம் அவசியமற்ற வகையில் தலையீடு செய்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேற்குலக நாடுகள் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற வகையில் மூக்கை நுழைத்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபர்ட் ஓ பிளெக் தனது தகுதிக்கு மீறிய வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் நிலைமை மற்றும் யுத்த நடவடிக்கைகள் பொறுப்பற்ற வகையில் பிளெக் தகவல் வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்களது தாளத்திற்கு ஏற்ற வகையில் இலங்கை அரசாங்கத்தை ஆட்டுவிக்க அமெரிக்காவும், பிரித்தானியாவும் அதீத முயற்சி மேற்கொண்டு வருவதாக எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/

சிங்கத்திடம் வாலாட்ட வேண்டாம் என்கிறார், இந்த மஞ்சளுடை இராணுவத் தளபதி. மீண்டும் தலையிட்டால் மொட்டையடித்துவிடுவாராம்.

உடனே போரை நிறுத்துங்கள்-அமெரிக்கா கண்டிப்பு

இலங்கை அரசு உடனடியாக போரை நிறுத்த வேண்டும். அப்பாவி மக்கள் பலியாவது பெரும் கவலை தருகிறது என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல் முறையாக அமெரிக்க வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களை கொல்வதை நிறுத்த வேண்டும், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை..

பாதுகாப்பு வலயத்தின் மீது தொடர்ந்து எறிகணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ளுமாறு இலங்கை அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல விடாமல் சர்வதேச உதவி அமைப்புகளைத் தடுப்பது, பத்திரிகையாளர்களை செல்ல விடாமல் தடுப்பது ஆகியவற்றையும் இலங்கை அரசு கைவிட வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று அவர்களை சந்திப்பதற்கு அனைத்து உதவி அமைப்புகளையும் இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.

போரை நிறுத்தாவி்டால் அது இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

போர் அவலம் நீடித்தால், மறு சீரமைப்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படும். இரு தரப்பினரும் சண்டை போடுவதை கைவிட்டு விட்டு மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல உதவ வேண்டும்.

இதுதொடர்பாக அனைத்து நாடுகளுடனும் இணைந்து அமெரிக்கா பணியாற்ற விரும்புகிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை அமெரிக்கா ஆதரிக்கிறது.

சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை இலங்கை அரசு மதிக்க வேண்டும். அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இவற்றை மீறும் வகையில் இலங்கை அரசு தொடர்ந்து நடந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/

றொபேர்ட் ஓ பிளேக் எத்தினைதரம் சிங்களவன் செத்ததுக்கு புலிகள் தான் செய்தது செய்தது எண்டு சொல்லி கண்டனம் விட்டுருப்பான்?

அப்போதெல்லாம் தமிழர்கள் எல்லாம் சும்மா இருந்ததைப்பார்த்து பிளேக்குமே எப்பிடி ஏசினாலும் கோபப்படவே மாட்டார்களாம் தமிழர்கள் அவர்கள் ரொம்பவும் நல்லவர்கள் எண்டு எத்தினை பேரிட்ட அழுதிப்பானோ.

இண்டைக்கு அதே விளையாட்டை சிங்களவனுக்கு விட்டா விடுவான சிங்களவன். பீளேகின்ர களுசானைக்க களட்டி கொளுத்தமாட்டான காவிச்சட்டை கள்ளச்சாமிகள்.

எப்போதுமே அடிக்கிறவனுக்குத்தான் மவுசு. அடிவாங்கினா அரோகராத்தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.