Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தம் முடிந்துவிட்டது அரசியல் தீர்வுக்கு தயாரா?

Featured Replies

யுத்தம் முடிந்துவிட்டது அரசியல் தீர்வுக்கு தயாரா?

* ரணில் கேள்வி.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுவதைப் போன்று யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளதால் அடுத்த கட்டமாக அரசியல் தீர்வை முன்வைத்து செயலாற்ற அவர் தயாராகவுள்ளாராவென கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இனிமேலாவது ஊடகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கொட்டுக்கச்சி வடத்த பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டாரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வைபவத்தில் கட்சியின் தவிசா ளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மாகாணசபை உறுப்பினர்கள், பௌத்த மத குருமார்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.

இங்கு ரணில் விக்கிரமசிங்க மேலும் பேசுகையில் கூறியதாவது;

யுத்த முன்னெடுப்பின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முல்லைத்தீவு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த வண்ணமுள்ளனர். அவர்களுக்கான வாழ்வாதார மற்றும் நிவாரண உதவிகளை அரசாங்கம் உரிய முறையில் வழங்க வேண்டும், பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதில் நாம் திடமாகவுள்ளோம். அதேவேளை நீண்டகாலமாக சமாதானமொன்றை அரசு ஏற்படுத்தி தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வான அரசியல் பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

யுத்தத்தை அடுத்து ஏற்படும் பொருளாதார யுத்தத்துக்கும் உணவுப் பட்டினிக்கும் தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளையும் ஊழல்களையும் வெளிப்படுத்த ஊடகங்கள் செயற்படுகின்றபோது அவ்வூடகங்களுக்கு எதிராக தடைகளையும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வேலைகளையும் இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இது வரைக்கும் 53 ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களுக்குள்ளாகிய

  • கருத்துக்கள உறவுகள்

அழகான பேச்சு, இதனால் சிறிலங்காவை அவதானித்துவரும் வெளிஉலகுக்கு தன்னை விளம்பரப்படுத்தி தான் ஒரு சமாதான ஆர்வலன் ஜனநாயக பிரியன் என்பதைப் பறைசாற்றலாம். ஆட்சியென்று வந்தபின் வெளிநாடுகள் வழங்கும் உதவிகளை கையடக்கம் செய்தபின் பேச்செல்லாம் போய் குள்ளநரி புத்தியுடன் செயல்படுவது தான் நடந்தேறிய வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சியென்று வந்தபின் வெளிநாடுகள் வழங்கும் உதவிகளை கையடக்கம் செய்தபின் பேச்செல்லாம் போய் குள்ளநரி புத்தியுடன் செயல்படுவது தான் நடந்தேறிய வரலாறு.

ரனில் கடைசியாக ஆட்சியில் இருந்தபோது விடுதலைப்புலிகளிடம் வடக்கு-கிழக்கின் இடைக்கால நிருவாகத்தை கையளிக்க இணங்கிய காரணத்தால் சந்திரிக்காவினால் பதவி இறக்கப்பட்டார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக ஜனாதிபதி தேர்தலில் மகிந்த இராஜபக்ஷவிற்கு எதிராக போட்டியிட்ட போது தமிழ்மக்கள் வாக்களிக்காது விட்டதால் தோல்வி அடைந்தார். இது தான் வரலாறு.

இன்று ஈழத்தமிழர்கள் தனித்து நின்று அழிவதற்கான காரணங்களில் ஒன்று எமக்கு எதிரிகளை உருவாக்க தெரிகிறதே தவிர நண்பர்களை உருவாக்க தெரியவில்லை. எரித்திரியர்கள் தமது எதிரிகளான எதியோப்பியருடன் உடன்பாடு செய்து தனிநாடாக பிரிந்தார்கள். சிங்கப்பூரியர்கள் தம்மை ஆக்கிரமிக்க விளைந்த மலேசியருடன் உடன்பாடு செய்துதான் தனிநாடானார்கள். நமக்கோ இந்த வழிகளில் எல்லாம் வெற்றி பெற உள்ள சந்தர்ப்பங்களை அடையாளம் காணக்கூட தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.