Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் யார் என்பதை அறிய உலகத்திற்கு மூண்று நாட்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவுக் கடலில் தீர்த்தமாடி கொடியிறக்க வேண்டிய நிலை !

உலக நாடுகள் எதிர் பார்ப்பதுபோல பிரபாகரன் முட்டாள் அல்ல !

தாடியும் மீசையுமாக பொந்துக்குள்ளால் வெளிவர சதாம் உசேனும் அல்ல !

மற்றவர் நினைப்பதைப் போல சரணடையுமளவிற்கு தன்மானம் இழந்தவருமல்ல !

வீர வசனம்பேசி தூக்குக் கயிற்றை முத்தமிட வீரபாண்டிய கட்டப்பொம்மனுமல்ல !

இராணுவம் எட்டு கிலோமீட்டர்கள் நெருங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். 1974ம் ஆண்டு

கலைஞர் ரீ.வி யுத்த நிறுத்தம் என்கிறது ! அதை மறுக்கிறது சிங்கள அரசு !

சிறீலங்கா அரசு யுத்த நிறுத்தம் ஒன்றை வழங்க உடன்பட்டுவிட்டதாக தெரிவித்து இன்று காலை தமிழக முதல்வர் மு.கருணாநிதி உண்ணாவிரதமிருந்து மதியமே அதை முடித்துக் கொண்டார். சிறீலங்கா அரசு யுத்த நிறுத்தத்திற்கு சம்மதித்திருப்பதால் தாம் உண்ணாவிரதத்தை கைவிடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதுவரை வெளியாகிக் கொண்டிருக்கும் கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி அறிக்கை சிறீலங்காவில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறிவருகிறது. அதுதவிர கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்றோர் கலைஞரின் முயற்சியால் யுத்த நிறுத்தம் வந்ததாக தெரிவிக்கிறார்கள். மறுபுறம் இந்திய அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் 24 மணி நேரங்களில் நல்ல செய்தி வரலாம் என்று தெரிவிக்கிறார்.

யுத்த நிறுத்தம் ஒன்றை தாம் செய்ய இருப்பதை சிறீலங்கா இந்தியாவிற்கு இரகசியமாக அறித்துள்ளதால் கலைஞர் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளாரா என்பது தெரியவில்லை. அல்லது இப்படியொரு முடிவு வரவிருக்கிறது என்பதை இரகசியமாக அறிந்துதான் அவர் உண்ணாவிரதத்தை அரங்கேற்றினாரா என்பதும் சந்தேகம் தருவதாகவே உள்ளது.

மறுபுறம் கடந்த நவம்பருக்குள்ளேயே போரை முடிப்போம் என்று கூறி பணத்தை வேண்டி களமிறங்கிய சிங்கள இராணுவம் இந்தியத் தேர்தலின் முக்கியமான கட்டம் வந்தும் அதை முடிக்க முடியாமல் திணறுவது பலருக்கு சினத்தை உருவாக்கியிருக்கிறது.

நாலே நாட்களில் போரை முடித்துவிடுவோம் என்று கோத்தபாய ராஜபக்ஷ இந்த நெருக்குதலுக்கு பதில் கொடுத்திருந்தார். அவருடைய கணிப்பின்படி வரும் புதன்கிழமையுடன் போர் முடிய வேண்டும். அதை நம்பி பிரான்சிய வெளிநாட்டு அமைச்சர், பிரிட்டன் வெளிநாட்டு அமைச்சர், சுவீடன் வெளிநாட்டு அமைச்சர் ஆகிய மூவரும் வரும் புதன் சிறீலங்கா புறப்படுகிறார்கள். வியாழன் மகிந்தராஜபக்ஷ வெற்றிக் கொடி பறக்கவிட சல்யூட் அடிக்கப் போகிறார்களோ என்று எண்ணுமளவிற்கு இருக்கிறது இவர்களின் தாமதமான பயணம். அதேவேளை பிரிட்டன் வெளிநாட்டு அமைச்சர் டேவிட் மிலிபிரான்ட் சற்று முன் மகிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் அவசரமாக பேசி புலிகளின் யுத்த நிறுத்தத்தை ஏற்க வேண்டுமென கோரியுள்ளார்.

இந்த இக்கட்டான நெருக்கடியில் பிரபாகரனைப் பிடிக்க கடைசி இடத்திற்குள் நுழைந்திருக்கிறது இராணுவம். இதை இப்படியொரு ஓவியமாக வரையலாம் :

இராணுவம் என்ற களைத்துப்போன கழுதையின் முன்னால் பிரபாகரன் என்ற கரட் தொங்குகிறது. அதைக் கடிக்க அது வேகமாக ஓடுகிறது. பாதுகாப்பு செயலர் நாராயணன் கோத்தபாயவின் முதுகில் சவுக்கால் அடிக்க அவர் கழுதையை விரட்டுகிறார். இருந்து பாருங்கள் நாலு நாளில் கரட்டைக் கடித்துவிடும் கழுதை என்று கூறியிருக்கிறார்.

சிறீலங்காவின் இராணுவம் அங்கு போய்ச் சேரும், ஆனால் பிரபாகரன் இராணுவக் கழுதையிடம் பிடிபடமாட்டார். கடைசியில் கரட்டைக் கடிக்கப்போகும் கழுதை முல்லைத்தீவு கடலில் தீர்த்தமாடிய கதையோடு யுத்த நிறுத்தம் செய்து கொடியிறக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். மாவிலாறிலிருந்து கரட்டை விரட்டும் கழுதை நந்திக்கடலில் வந்தா கரட்டைக் கவ்வப்போகிறது என்று சுயமாக யோசிக்க சிலருக்கு நேரமில்லை.

எஞ்சியுள்ள எட்டுக் கிலோமீட்டர்கள் நிலப்பரப்பு சைபர் கிலோமீட்டர்களாகும், அப்போது முல்லைத்தீவுக் கடல்தான் இராணுவத்திற்கு பரிசாகக் கிடைக்கும். இதை நாம் மூன்று மாதங்களின் முன்பே கூறியிருக்கிறோம்.

உலக நாடுகள் எதிர் பார்ப்பதுபோல பிரபாகரன் முட்டாள் அல்ல !

தாடியும் மீசையுமாக பொந்துக்குள்ளால் வெளிவர சதாம் உசேனும் அல்ல !

மற்றவர் நினைப்பதைப் போல சரணடையுமளவிற்கு தன்மானம் இழந்தவருமல்ல !

வீர வசனம்பேசி தூக்குக் கயிற்றை முத்தமிட வீரபாண்டிய கட்டப்பொம்மனுமல்ல !

இராணுவம் எட்டு கிலோமீட்டர்கள் நெருங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். 1974ம் ஆண்டு கம்பர்மலை நெற்கொழு ஆலமரத்தில் பிரபாகரன் மறைந்திருக்க, அவருக்கு கீழே இரண்டு மீட்டர்கள் இடைவெளியில் அதே ஆலமரத்திற்குக் கீழேதான் இராணுவம் பிரபாகரனைத் தேடிக் கொண்டு நின்றது. அப்படிப்பட்டவருக்கு நாலு நாட்களும், எட்டுக் கிலோ மீட்டர்களும் மிகமிக அதிகமான நேரமும், அதிகமான தூரமுமாகும்.

இன்று ஐ.நா பாதுகாப்பு சபைவரை பிரபாகரனைத் தேடுமளவிற்கு அவர் வளர்ந்திருக்கிறார். அண்டவெளி சற்லைற்றுக்களுக்கும் ஆப்பு வைக்கப்போகிறார் என்பதை அறிய மேலும் மூன்று தினங்களே உள்ளன.

http://www.alaikal.com/news/?p=15610

இராணுவம் என்ற களைத்துப்போன கழுதையின் முன்னால் பிரபாகரன் என்ற கரட் தொங்குகிறது. அதைக் கடிக்க அது வேகமாக ஓடுகிறது. பாதுகாப்பு செயலர் நாராயணன் கோத்தபாயவின் முதுகில் சவுக்கால் அடிக்க அவர் கழுதையை விரட்டுகிறார். இருந்து பாருங்கள் நாலு நாளில் கரட்டைக் கடித்துவிடும் கழுதை என்று கூறியிருக்கிறார்.

அருமை :unsure::unsure::lol::lol:

சிறீலங்காவின் இராணுவம் அங்கு போய்ச் சேரும், ஆனால் பிரபாகரன் இராணுவக் கழுதையிடம் பிடிபடமாட்டார். கடைசியில் கரட்டைக் கடிக்கப்போகும் கழுதை முல்லைத்தீவு கடலில் தீர்த்தமாடிய கதையோடு யுத்த நிறுத்தம் செய்து கொடியிறக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்

அரோகரா அரோகரா! :unsure: :unsure:

இந்தச்செய்தி யதார்த்தமானதாக இருந்தாலும் என்னால் இதை எங்களுக்குச்சாதகமா நிலையாக கருத முடியவில்லை.

காரணம் நாம் எதிரியின் வெற்றியை கொடுக்க வில்லை ஆன்னாலும் எதிரியும் எங்கள் வெற்றியை பறித்டுவிட்டானே?

இந்தச்செய்தி யதார்த்தமானதாக இருந்தாலும் என்னால் இதை எங்களுக்குச்சாதகமா நிலையாக கருத முடியவில்லை.

காரணம் நாம் எதிரியின் வெற்றியை கொடுக்க வில்லை ஆன்னாலும் எதிரியும் எங்கள் வெற்றியை பறித்டுவிட்டானே?

இதுதான் நிதர்சனமான உண்மை....தனி நாடு போல இயங்கி வந்தவர்களை மீண்டும் காட்டுக்கு அனுப்பியது சிங்களவனுக்கு வெற்றி தானே?

இன்று ஐ.நா பாதுகாப்பு சபைவரை பிரபாகரனைத் தேடுமளவிற்கு அவர் வளர்ந்திருக்கிறார். அண்டவெளி சற்லைற்றுக்களுக்கும் ஆப்பு வைக்கப்போகிறார் என்பதை அறிய மேலும் மூன்று தினங்களே உள்ளன.

சுத்த கோமாளித்தனமா இருக்கு இதை போய் நிதர்சனம் அது இது எண்டு வேறை கருத்து வைக்கிறியள். இனி வரும் நாட்கள் மனித அவலத்தின் உச்ச கட்டமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் போடும் கணக்கு என்றும் பிழைத்தது இல்லை தெரியாதா உனக்கு.........................!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஒரே கழுதையும் கரடியுமா கிடக்கு ஒரு நரியைகூட காணல :o

என்ன ஒரே கழுதையும் கரடியுமா கிடக்கு ஒரு நரியைகூட காணல :o

அதுவும் தந்திரமுள்ள குள்ள நரியை (கருணா) காணலயே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுவும் தந்திரமுள்ள குள்ள நரியை (கருணா) காணலயே!

சினைப் ஏன் அந்த நாயைபற்றிக்கதைக்கிறீர் போய் தேத்தாண்ணி குடியும்

பிரபாகரன் இராணுவத்திடம் சிக்காமல் இருப்பது மிக மிக அவசியம்... பிடிபட மாட்டார் என்றும் நம்புவோம்... ஆயினும் பர பர விரு விரு வில்லு பட பானியில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தப்பித்தலை விளக்கியிருப்பது இரசிக்கத் தக்கதாக இல்லை...மாறாக வேதனையும் வலியுமே மிஞ்சுகிறது... பிரபாகரன் இராணுவத்திடம் சிக்காமல் இருந்தால் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று பொருளாகுமா...? இராணுவத்திடம் இருந்து தப்பித்துக்காட்டுவதன் மூலமா பிரபாகரன் தன்னை யார் என்று உலகத்திற்க்குக் காட்ட முடியும்...? அவரின் வெகு உயரிய இலட்சியமான தனி தமிழ் ஈழத்தை வென்றெடுப்பதற்க்கு முன் இது கால் தூசாகுமா... ? எல்லா காலங்களிலும் ஏதொவொரு அற்ப கதை பேசி சுயபோதையில் ஈடுபடும் போக்கு இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது மிக்க வேதனை... பிரபாகரனை விஜய் பட ஹீரோ போலாக்கி எல்லாவற்றையும் அவரே பார்த்துக்கொள்ளுவார் என்றிருந்தால் நமது கனவு என்றும் பலிக்காது... இனி நம் போராட்டத்தின் கரங்களை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து அதற்க்கு ஏற்ப செயல் படவேண்டும்..

Edited by அன்புசிவம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.