Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதுரையில் மர்ம நபர்கள் வினியோகித்த ஈழ சிடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுரையில் மர்ம நபர்கள் வினியோகித்த ஈழ சிடி!

வெள்ளிக்கிழமை, மே 1, 2009, 10:22 [iST]

: மதுரை திருமங்கலம் பகுதியில் ஈழத் தமிழர்கள் குறித்த சிடிக்கள் வீடுடகளில் வினியோகம் செய்யப்பட்டன.

இந்தப் பகுதியில் உள்ள கடைகள், வீடுகளின் வாயில்களில் அதிகாலையில் இந்த சிடிக்கள் கிடந்தன.

மேலும் அதிகாலையில் நடைபயிற்சி சென்றவர்கள், பஸ்களுக்கு காத்திருந்தவர்களுக்கும் கார்களில் வந்த சிலர் இந்த சிடியை தந்துவிட்டுப் போயினர்.

'எங்கள் கண்ணீர் கதை' என்ற பெயரிலான இந்த சிடிக்களில் இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசுவது, குழந்தைகள் உடல் சிதறிக் கிடப்பது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளன.

சுமார் 18 நிமிடம் ஓடும் இந்த சிடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சும் அடங்கியுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் அரசு மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற கோரிக்கையுடன் இந்த சிடியில் காட்சிகள் முடிவடைகின்றன.

சிடியை வினியோகித்தது யார் என்ற விசாரணையில் க்யூ பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னப்பா!!மர்மநபர்கள்?மானமுள்ள மனிதாபம் உள்ள தமிழர்கள் தமிழர்கள் என்பதே சரி.

அதென்னப்பா!!மர்மநபர்கள்?மானமுள்ள மனிதாபம் உள்ள தமிழர்கள் தமிழர்கள் என்பதே சரி.

அதுதான் நாசமாபோன இந்தியா

  • கருத்துக்கள உறவுகள்

அகதி ஜயா கோபப்படாதையுங்கோ!

எல்லாமே நல்லதாக அமைய காலம் கனிந்துவருவதாக அறிகுறிகள் தோன்றுகின்றன.

ஆகவே கோபத்தை விட்டிட்டு எங்களது போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பாக உலா வரும் இலங்கை இனப்படுகொலை குறித்த சிடி

ஞாயிற்றுக்கிழமை, மே 3, 2009, 15:10 [iST]

சென்னை: இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலை குறித்த சிடிக்கள் படு பரபரப்பாக தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் உலா வந்து கொண்டுள்ளன.

அப்பாவி மக்கள் மீது விழுந்து வெடித்துச் சிதறும் குண்டுகள், கதறித் துடிக்கும் பெண்கள், கோரமான மரணங்கள், சிதறுண்டு கிடக்கும் தமிழ் மக்களின் உடல்கள், நீண்ட வரிசையில் சாப்பாட்டுக்காகவும், குடிநீருக்காகவும் காத்திருக்கும் மக்கள் என அவலங்கள் அடங்கிய அந்த சிடிக்கள் பார்ப்போர் மனதை சோகத்தின் உச்சத்திற்கு இட்டுச் செல்லும் வகையில் உள்ளது.

இந்த காட்சிகளின் பின்னணியில் உணர்ச்சிப் பெருக்குடன் கூடிய கவிதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

இனி என்ன செய்யப் போகிறோம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிடியை பெரியார் திராவிட கழகம் தயாரித்து புழக்கத்திற்கு விட்டுள்ளது. 16 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த சிடியில், தமிழ் மக்களின் இந்தத் துன்பத்திற்கும், அவலத்திற்கும் காரணமான காங்கிரஸுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போடாதீர்கள் என்ற கோரிக்கையும் இடம் பெற்றுள்ளது.

இந்த சிடி மக்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

புதுச்சேரியைச் சேர்ந்த எழிலரசி என்ற பெண் இந்த சிடி குறித்து கூறுகையில், முதலில் எனக்கு இலங்கைப் பிரச்சினை குறித்து முழுமையாகத் தெரியாமல் இருந்தது. ஆனால் இந்த சிடியைப் பார்த்த பிறகு நான் அதிர்ந்து போய் விட்டேன். ஈழத் தமிழர்களுக்காக நான் மிகவும் கவலைப்படுகிறேன், அனுதாபப்படுகிறேன்.

இப்படிப்பட்ட ஒரு கொடுமைக்கு இந்திய அரசு துணை போவது ஏன் என்று புரியவில்லை. என்னைப் போலவே இந்த சிடியைப் பார்த்த பிற பெண்களும் கூட இந்திய அரசின் ஏன் தமிழ் மக்களின் சாவைக் கண்டும் காணாமல் இருக்கிறது என்று புரியாமல் கேட்டனர்.

நிச்சயம் எங்களது ஓட்டு காங்கிரஸுக்கு இல்லை. ஈழத் தமிழர்களுக்கு யார் உதவுவார்களோ அவர்களுக்கே வாக்களிப்போம் என்கிறார்.

சிடியில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சேர்ந்து நிற்பது போல ஒரு படம் இடம் பெற்றுள்ளது.

கோபத்தில் காங்கிரஸ்...

இந்த சிடி காங்கிரஸார் மத்தியில் பெரும் கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில், நான் இந்த சிடியைப் பார்த்தேன். தடை செய்ய வேண்டும் என கோரியுள்ளேன். இருப்பினும் இன்னும் இது சட்டவிரோதமாக உலா வந்து கொண்டுள்ளது.

இந்த சிடியில் காங்கிரஸ் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்றார்.

தற்போது இந்த சிடிக்களை போலீஸார் வளைத்து வளைத்துப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தாம்பரம் அருகே 3 பேர் கைது

தாம்பரம் அருகே நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்த சிடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை அடுத்து அதிமுக, பாமக கட்சியினர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 1ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக கூட்டணி கட்சியினரின் பொதுக்கூட்டம் பீர்க்கன்கரணை சீனிவாச நகரில் நடந்தது. அதில் அந்த தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே மூர்த்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்பட்டது. அப்போது கூட்டத்தில் இலங்கை தமிழர் தொடர்பான சிடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த பீர்க்கன்கரணை அதிமுக செயலாளர் குரு நேருஜி, பாமக செயலாளர் மனோகரன் மற்றும் சவுண்ட் சர்வீஸ் அமைத்து கொடுத்த பார்த்திபன் ஆகிய மூன்று பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, விசாரித்தனர்.

அவர்கள் மூவர் மீதும் வீடியோ சட்டம் 188வது விதியின் 7வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அதிமுகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தற்ஸ்தமிழ்

தொல்லைக்காட்சி, பத்திரிகை போன்று இந்த சிடீக்களை தனது கட்டுப்பாட்டுக்குள்ள வைக்க முடியாமல் கலைஞர் திண்டாடுறார். அதுதான் மர்ம சீடி, மர்ம நபர் என்று தனது காவல்துறையை ஏவி விட்டிருக்கின்றார். சட்டரீதியாக சென்றால் இந்த விடயத்திலும் கலைஞருக்கு தோல்வி தான் கிட்டும்.

அகதி ஜயா கோபப்படாதையுங்கோ!

எல்லாமே நல்லதாக அமைய காலம் கனிந்துவருவதாக அறிகுறிகள் தோன்றுகின்றன.

ஆகவே கோபத்தை விட்டிட்டு எங்களது போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்.

சுட்டிக்காட்டியதற்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.