Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடம்பெயர்ந்த மக்களை பராமரிக்க தம்மிடம் ஒப்படைக்குமாறு கோருகிறது ஜே.வி.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இடம்பெயர்ந்த மக்களை பராமரிக்க தம்மிடம் ஒப்படைக்குமாறு கோருகிறது ஜே.வி.பி.

திகதி: 01.05.2009 // தமிழீழம்

தமிழினப்படுகொலை மேற்கொள்ளப்படுவதை ஊக்கிவிக்கின்றதும், இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை கடுமையாக எதிர்த்துவருவதுமான சிறிலங்காவின் இனவாதக் கட்சிகளில் ஒன்றறான ஜே.வி.பி. இடம்பெயர்ந்து வந்த மக்களை பராமரிக்கும் பொறுப்பை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி தெரிவித்துள்ளதாவது, இடம்பெயர்ந்துள்ள மக்களின் உளப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருப்பதால் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை தங்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்கான பலமும் அனுபவமும் தங்களிடம் இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஜே.வி.பி. நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் நாடளுமன்ற குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது; அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பெருமளவான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ள நிலையில் அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புலிகளிடமிருந்து அம்மக்களை எமது இராணுவத்தினர் மீட்டு பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், இம்மக்களின் தேவைகளை தொடர்ந்து அவர்களால் செய்வது சிரமமென்ற முறையில் அரசாங்கம் அம்மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி வருகின்றது. இதில் சிக்கலையும் அது எதிர்கொண்டுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் கண்ணுக்கெட்டிய அல்லது தெரிகின்ற பிரச்சினைகளை தேவைகளை நிறைவு செய்தால் போதாது. அவர்களது உளப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். இந்நிலையில் இதனை செய்வதற்கு சிறந்த முகாமைத்துவம் கொண்ட கட்டமைப்புத் தேவை. அதனை எமது செந்தாரகை நிவாரண இயக்கம் செய்யத் தயாராகவுள்ளது.

எனவே, இம்முகாம்களை அவ்வியக்கத்திடம் கையளிக்குமாறு நாம் கேட்கின்றோம். யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அரசு கூறுகின்றது. உண்மையில் புலிகளின் தலைவரையும் அவர்களது உறுப்பினர்கள் அனைவரையும் அழிப்பதன் மூலமே யுத்த வெற்றியை ஈட்ட முடியுமே தவிர நிலப்பரப்பை விடுவிப்பதனால் வெற்றி வந்துவிடாது. இவ்வாறு தலைவரையும் உறுப்பினர்களையும் அழியாதுவிட்டால் அவர்கள் கெரில்லா வழிமுறைக்கு சென்றுவிடுவர். என்று கூறியுள்ளார்.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

--------------------------------------------------------------------------------

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா ஒரேயடியா முடிக்கிறதுக்காக்கும் பச்சோந்தி நாய்கள்

கொலைவெறி கொண்டு கொடுகணை ஏவிய கைகளிலேயே, குற்றுயிரான எம் இனத்தை கடலேறி புல் மோட்டையிலும், திருகோணமலையிலும் கொடுக்கத்தானா இந்த சர்வதேசம்!

மனிதஉரிமை சபை, ஐ. நா, மேற்குலகம், தமிழகம் என்றெல்லாம் ஓடி ஓய்ந்து விட்டோம். யார் எம் சனத்தைக் காப்பது?, நாம் என்ன செய்து, எங்கள் உறவுகளையும், அவர் தேசத்தையும் காக்கலாம்?

காக்கும் கைகளை ஓய விடக்கூடாது, இரு மாதமாய் ஒரு வேளை கஞ்சியாவது ஊற்றி, ஊட்டிய கை காய முன், களம் புகுந்து வென்சமராடிய கைகளை பலப்படுத்துவதே, எம் உறவுகளை காக்கும் ஒரே வழி!

நெஞ்சினை உருக வைக்கும் புலி வீரன் உயிர்க் கொடை, நெருப்பினில் நீராடும் படை தமிழ் புலிப்படை.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது உளப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். இந்நிலையில் இதனை செய்வதற்கு சிறந்த முகாமைத்துவம் கொண்ட கட்டமைப்புத் தேவை. அதனை எமது செந்தாரகை நிவாரண இயக்கம் செய்யத் தயாராகவுள்ளது.

முதலில் ஜே.வி.பி தனது உளப்பிரச்சினையை தீர்க்கட்டும் .

மூஞ்சூறு தான் போக வழியை காணவில்லை , அதற்குள் விளக்கு மாத்தையும் தூக்கிக் கொண்டு போக நிக்குது .

எண்ணெய்ச் சட்டியில இருந்து அடுப்புக்குள்ள விழுந்த கதையாகிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.