Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Aljazeera விடம் மாட்டிக்கிட்ட உதயநாணயராக்க (02 May 09)

Featured Replies

சட்டலைட் படங்கள் வெளிவந்த பிறகுதான் வெளிநாட்டு ஊடகங்கள் எமது செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த இரு தினங்களுக்கு முன், இலங்கையின் மோதல் இடம்பெறும் பாதுகாப்பு வலயத்தில், சிறிலங்கா இராணுவத்தினரின் கனரக ஆயுத பாவணையை உறுதி செய்யும் செய்மதிப்படங்கள் வெளியானதை தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள், வடகிழக்கில் பொதுமக்கள் உயிரிழப்புக்கள் தொடர்பாக கவனம் செலுத்த தொடங்கிவிட்டன.

நேற்று சனிக்கிழமை அதிகாலை முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அறுபதுக்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்த இராணுவத்தினரின் ஷெல் தாக்குதல்களை உறுதிப்படுத்திய ஆதாரங்களால், சிறிலங்கா அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் நம்பகத்தன்மை வாய்ந்தவை அல்ல என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் எழுப்பத்தொடங்கியுள்ளன.

நேற்று சனிக்கிழமை அல்ஜசீரா செய்தி சேவையில், முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை தாக்கப்பட்டதை அடிப்படையாக கொண்டு சிறிலங்கா இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது நாணயகாரவினால் 'கனரக ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை எனவும் விடுதலை புலிகள் இருக்கும் பிரதேசங்களை மாத்திரமே தம்மால் தாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

'மோதலில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பும் எதிர் எதிர் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதனால், சர்வதேசத்திற்கு உண்மை புலப்படுவதற்காக மோதல் பிரதேசத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்களை அனுமதிக்கலாமே'என கேட்கப்பட்ட கேள்விக்கு

பதில் அளித்த நாணயக்கார,

'புது மாத்தளன் பகுதிக்கு 30 ஊடகவியாளர்களை அழைத்து சென்றதாகவும், அதில் பிபிசி செய்தியாளர் உட்பட பல வெளிநாட்டு ஊடகவியளாலர்கள் அடங்குவதாகவும்' தெரிவித்தார்.

அப்போது மீண்டும், அதே போல் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் ஊடகவியலாளர்களை அனுமதிக்கலாமே என கேள்வி கேட்கப்பட அப்படி அனுமதித்தால், அவ் ஊடகவியலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட முடியாது' என நாணயக்கார தெரிவித்தார்.

எனினும் 'காசா, ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெறும் மிக ஆபத்தான மோதல்களின் போதே போர்ப்பகுதிகளுக்கு தம் தரப்பிலும், மேலும் பல சர்வதேச ஊடகவியலாளர்கள சென்று வந்ததாகவும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும்,' அல்ஜசீரா செய்திச்சேவை விசனத்துடன் தெரிவித்தது.

'இடம்பெயரும் பொதுமக்கள் அதிகமாக காணாமற்போவது, கடத்தபடுவது, பெண்களுக்கு பாதுகாப்பின்மை என்பன தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றனவ

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி .............சுபித் ரன் .....தினமும் இப்படி உண்மை செய்திகளால்...இனவெறி சிங்களம் , அதனுடன் துணை போகும் , அதிகாரிகளும் தலை குனிய வைக்க படவேண்டும்....எவ்வளவு தூரம் வார்த்தைகளால் சமாளிக்கிறார்கள். உண்மை உலகம் அறிய வேண்டும் காலம் ஓடிகொண்டிருக்கிறது . இனம் அழிந்து கொண்டிருக்கிறது .......சர்வதேசம் மெல்ல கண் திறக்கிறது . தேவை ஒரு போர் நிறுத்தம் .அதன் பின் தீர்வு .....மேலும் இத்தகைய பதிவுகளை போடவும் ஆவலுடன் காத்திருக்கிறோம். j

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் பார்த்திபன் அவர்கள் பொது மக்களின் அவலங்களை உலகுக்கு சொல்லவே மிக ஆவலாக இருந்தார். மிகவும் வரவேற்க தக்கது.எனது ஆதங்கம், தற்கொலை தாரிகளை பாவித்தல், சிறுவர்களை பாவித்தல் போன்ற கேள்விகளுக்கு ஆணித்தரமான விடை ஒன்றை சர்வதேச செய்தி ஸ்தாபனத்துக்கு வழங்கி இருக்க வேண்டும். இப்படியான தருணங்கள் எமக்கு கிடைப்பது புலம் பெயர்ந்த மக்களின் இடை விடாத போராட்டங்களால் தான்.எமக்கு கிடைக்கும் தருணங்களை அருமையாக பாவித்தல் எமக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம். இலங்கை அரசும் , எமக்கு எதிரானவர்களும் மேற்கூறிய இரு காரணங்களை வைத்து எம்மை கீழிறக்க பார்க்கிறார்கள். ஆகவே மிக மிக ஆணித்தரமான விடைகள் தலைமையில் இருந்து வர வேண்டும். இதனால் ஊடக போரை எதிர்கொள்ளும் எம்மை போன்ற சிறியவர்களுக்கு விடையளிக்க வசதியாக இருக்கும். நன்றி. அன்பு உறவுகளின் கருக்துக்களை எதிர்பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.