Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றி புதிய படம் தயாராகிறது. இதுபற்றிய தகவலை நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ளார்.

ஆனால் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இதில் பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். ஏற்கனவே இருவர் படத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கேரக்டரில் வந்தார். சிறந்த நடிப்புக்காக இவருக்கு மாநில அளவில் 18 விருதுகள் கிடைத்துள்ளன. 3 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

பிரபாகரன் வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜை அணுகிய போது உடனே ஒப்புக்கொண்டாராம். இந்த வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவேன் என்றார். அவர் பிரபாகரன் கேரக்டருக்கான பிரத்யேகமான பயிற்சி எதுவும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆனாலும் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை தேடிப்பிடித்து படித்து வருகிறார்.

viduppu

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளே.....

கடவுளே.....

கடவுளே என்றால் என்ன அர்த்தம் ??? இவர் சரியான தேர்வுதான். முகச்சாடை சரியாகவே இருக்கிறது. இவர் இல்லையேல் அஜித் குமார். இல்லையேல் வெளி மாநிலம் போக வேண்டும் . தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ண, ஹிந்தியில் தர்மேந்திர, சன்னி தியோல், ஆதித்ய பன்சோலி,

மேலே உள்ளது முக்கியமான கருத்து அல்ல . ஈழத்தை பற்றி ஆழமாக கருத்துக்களை பரிமாறிய எந்த படமுமே வெளிவரவில்லை. ஈழம் என்பதே பல்வேறு கருத்து மோதல்கள் கொண்ட களம் . அதனால் படம் எடுப்பவரின் காசு காலியாகிவிடும். ஆனால் படம் எடுப்பதாக கூறி படம் எடுக்காமல் விளம்பரம் தேடிக்கொள்ள முடியும் . அனேகமாக இவர்கள் செய்வது இதுதான்

ஈழத்தை பற்றி படம் எடுக்க நான் முயற்சித்த போது நான் பட்ட அனுபவமே ஒரு படம் எடுக்கும் அளவுக்கு ஆனது. அதனால் சொல்கிறேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கன்னத்தில் முத்தமிட்டால் போல அரைகுறையா தெரிஞ்சிட்டு எடுக்காமல்.. முழுமையா எடுத்தால் நல்லா இருக்கும்

அப்பொழுது யார் 9கருநா(ய்)நிதி வேசம் போடுறது ?

கன்னத்தில் முத்தமிட்டால் போல அரைகுறையா தெரிஞ்சிட்டு எடுக்காமல்.. முழுமையா எடுத்தால் நல்லா இருக்கும்

அய்யா அரைகுறையாக இல்லை . முற்றிலும் கற்பனைக்கதை. மேலும் உண்மைச்சம்பவங்களை கலந்து. நான் சந்தித்த சில தயாரிப்பாளர்கள் மற்றும் நண்பர்கள் சொன்ன கருத்துக்கள் சில ( நான் சினிமாக்காரன் இல்லை என்பதால் இந்த கதையை படமெடுங்கள் என்றுதான் கூறினேன் .)

1. உனக்கு இது தேவையா ?

2. ரொம்ப நல்லா இருக்கு . ஆனா படம் வெளிவராதுப்பா

3. எங்கிட்ட அவ்வளவு காசு இல்ல ( ஏனெனில் அது ஏற்கனவே வெளியான வேற்று மொழி படத்தின் தழுவல் என்பதாலும் மிகப்பெரிய வெற்றிப்படம் ஆனதாலும் கதை உரிமம் வாங்கவே பாதி பலம்/பணம் போயி விடும்)

4. தம்பி நாலு காசு பார்க்கிற மாதிரி கதை ரெடி பண்ணுப்பா . ( பெரும்பாலோனோர் கதை கேட்டபின் சொன்னது படம் கண்டிப்பா வெளி வராது . குற்றபத்திரிக்கை போல ஆயிடும் )

5. ஒரு மென்மையான காதல் கதைக்கு இவ்வளவு குரூரமும் ஆவேசமும் இன அழுத்தமும் தேவையா ??? ( ஐயா இத முழு காதல் படமா எடுத்து சிங்களவர்களிடமும் பாராட்டு வாங்க நினைத்தாரோ என்னவோ )

6. மொத்த படத்தையும் இலங்கை / கண்டி - யாழ் - ராமேச்வரத்தில் எடுக்க வேண்டி வருமே . இந்த லொகேஷன் ஏற்கனவே பார்த்ததாயிற்றே ???????????????????????

7. ரொம்ப ஈசியா கடலிலேயே ஹெலிகாப்டர் பைட் சொல்லுறியே . நீ சங்கர் சார் கிட்ட போயிருக்கனும்.

8. ஒருத்தன் கதையை அவனுக்கே தெரியாதபடி மாற்றி இருக்கிறாய் . வெரி குட் . ஆனா இது ரொம்ப ரோதனைப்பா . நீ ஒன்னு பன்னு. பேசாமல் இத தொடர்கதையா மாற்றி ஏதாவது வார இதழுக்கு அனுப்பி பார் . கதையாவது மக்களுக்கு தெரிய வரும் . ( ஏனெனில் மூலக்கதை வேறு என்று நான் சொன்ன பின் தான் அட ஆமாம்ல என்று சொன்னார்களே தவிர எவரும் சரியாக கண்டு பிடிக்க வில்லை .

9. இலங்கைக்கே போகாத நீ எழுதும் ஈழக்கதை எந்த அளவிற்கு எடுபடும்????. நீ குறிப்பிட்டிருக்கும் சம்பவங்கள் கால நிலையோடு ஒத்து போகிறது சரி . கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகள் சரி . அதை கண்முன் காட்டுவது அவ்வளவு எளிதல்ல . மேலும் இந்த கதை பற்றி அதிகமாக யாரிடமும் விவரிக்காதே . கதையாக எழுதுவதே உத்தமம் . அதுகூட தொடர்புடைய வயதுடைய நபர்களிடம் காட்டி மேலும் சில திருத்தங்கள் செய்து வெளிவிடு .

அன்று மனதை பூட்டி விட்டு கால சுழலில் சிக்கி சுழல மறந்தே போயி விட்டேன் . மீண்டும் இப்போது ஞாபகம் வந்தது . பகிர்ந்து கொண்டேன்

அப்பொழுது யார் 9கருநா(ய்)நிதி வேசம் போடுறது ?

கருணாநிதி வேஷத்திற்கு அவரே தான் வர வேண்டும் .

இளம் பிராய கொலைஞருக்கு நிறைய ஆட்கள் கிடைப்பார்கள் . ஏனெனில் சாதாரண முகம் கலைஞருடையது . சிறப்பான முகம் ஒன்றும் இல்லை . புலித்தலைவருக்கு தான் கஷ்டம் . ஏனெனில் அவரின் கண்கள் அவ்வளவு சுலபமாக தேட முடியாதது . அதனால் தான் என் லிஸ்டில் அதிகம் பிற மொழி நடிகர்கள் உள்ளனர்

ஓவர் ஆக்டிங்கா இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.