Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேவு வானூர்தி தகவல் கொடுக்க மக்கள் மீது பீரங்கித் தாக்குதல்: நிவாரணம் பெற காத்திருந்த 32 பேர் உட்பட 134 தமிழர்கள் பலி

Featured Replies

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் நிவாரணம் பெற காத்திருந்த 32 பேர் உட்பட 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 199 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணவுக்காகக் காத்திருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் – குறைந்தது 30 பேர் பலி

செஞ்சிலுவை அனைத்துலக சங்கம் கொண்டுசென்ற உணவைப் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த மக்கள் மீது சிறீலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் குறைந்தது 30 பேர் அந்த இடத்திலேயே கோரமாகக் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட மக்கள் பற்றிய முழுமையான விபரங்கள் உடனடியாக வெளிவராத நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று (வியாழக்கிழமை) செஞ்சிலுவைச் சங்கம் சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதலின் மத்தியிலும் 25 மெட்றிக் தொன் உணவுப் பொருள்களை வன்னிக்கு எடுத்துச் சென்றிருந்தது.

ஒரு நாளைக்கு 90 மெட்றிக் தொன் உணவுப் பொருள்கள் வன்னியிலுள்ள மக்களுக்கு தேவைப்படும் நிலையில், கடந்த 30ஆம் கொண்டு செல்லப்பட்ட 30 மெட்றிக் தொன் உணவுப் பொருள்களையடுத்து இந்த உணவுப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டிருந்தன.

உணவின்றி தவிட்டில் நீரை ஊற்றி உணவாகக் உட்கொண்டுவந்த இந்த மக்கள் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்ட அமைப்பு அனுப்பி வைத்த உணவிற்கான இன்று (வெள்ளிக்கிழமை) காலை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதன்போது அங்கு வட்டமிட்ட சிறீலங்கா படையினரது ஆள் இல்லாத வேவு வானூர்தி தகவல் எடுத்து அனுப்ப, சிறீலங்கா தரைப்படையினர் மக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

படைக்கல சக்தியை மட்டுமன்றி, உணவையும் ஆயுதமாகப் பயன்படுத்தும் சிறீலங்கா படையினர், ஒருவேளை உணவுக்காகக் காத்திருந்த மக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி மக்களை அடிபணிய வைக்கும் உத்தியைக் கையாண்டு வருகின்றது.

மூலம் : மீனகம்.கொம்

இதுகுமேலும் ஒரு கொடுமை எமக்கு இருக்குமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேவு வானூர்தி தகவல் கொடுக்க மக்கள் மீது பீரங்கித் தாக்குதல்: நிவாரணம் பெற காத்திருந்த 32 பேர் உட்பட 134 தமிழர்கள் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் நிவாரணம் பெற காத்திருந்த 32 பேர் உட்பட 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 199 பேர் காயமடைந்துள்ளனர்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் கப்பலில் நேற்று வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தபோதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நட்டாங்கண்டல் தற்காலிக மருத்துவமனைக்கு அருகில் இன்று காலை 10:30 நிமிடமளவில் மக்கள் வரிசையில் நிவாரணங்களைப் பெறுவதற்காக கூடிநின்றபோது சிறிலங்கா வான்படையின் வேவு வானூர்தி படம் எடுத்துக்கொண்டிருந்தது.

அந்தவேளையிலேயே சிறிலங்கா படையினர் தரையில் இருந்து அகோரமான பீரங்கித் தாக்குதல்களை மக்கள் கூடிநின்ற குறித்த பகுதி மீது தாக்குதலை நடத்தினர்.

பீரங்கிக் குண்டுகள் மக்கள் மத்தியில் வீழ்ந்து வெடித்தன. இதனால், 32 பேர் கொல்லப்பட்டும் 43 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

சிறிலங்கா படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் உடலங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவனைக்கு எடுத்துச்செல்ல முடியாத நிலையில் தரையில் படுத்திருந்தவாறு அவதிப்பட்டனர்.

இதேவேளையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 5:00 மணியில் இருந்து இன்று பிற்பகல் 3:00 மணிவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான எறிகணைகளை மக்கள் செறிவாக இருந்த பகுதிகள் மீது ஏவினர்.

மக்கள் செறிவாக இருந்த பகுதிகளை நோக்கி கனரக பீரங்கி சூட்டுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

இத்தாக்குதல்களில் நிவாரணத்துக்காக காத்து நின்றவர்களில் 32 பேர் தவிர முள்ளிவாய்க்கால் பகுதியில் 102 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 156 பேர் காயமடைந்துள்ளனர்.

மூலம்: புதினம்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

உணவுக்காகக் காத்திருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் – 32 பேர் பலி! 43 பேர் படுகாயம்!

செஞ்சிலுவை அனைத்துலக சங்கம் கொண்டுசென்ற உணவைப் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த மக்கள் மீது சிறீலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் குறைந்தது 32 பேர் அந்த இடத்திலேயே கோரமாகக் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் 43 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட மக்கள் பற்றிய முழுமையான விபரங்கள் உடனடியாக வெளிவராத நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று (வியாழக்கிழமை) செஞ்சிலுவைச் சங்கம் சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதலின் மத்தியிலும் 25 மெட்றிக் தொன் உணவுப் பொருள்களை வன்னிக்கு எடுத்துச் சென்றிருந்தது.

ஒரு நாளைக்கு 90 மெட்றிக் தொன் உணவுப் பொருள்கள் வன்னியிலுள்ள மக்களுக்கு தேவைப்படும் நிலையில், கடந்த 30ஆம் கொண்டு செல்லப்பட்ட 30 மெட்றிக் தொன் உணவுப் பொருள்களையடுத்து இந்த உணவுப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டிருந்தன.

உணவின்றி தவிட்டில் நீரை ஊற்றி உணவாகக் உட்கொண்டுவந்த இந்த மக்கள் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்ட அமைப்பு அனுப்பி வைத்த உணவிற்கான இன்று (வெள்ளிக்கிழமை) காலை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதன்போது அங்கு வட்டமிட்ட சிறீலங்கா படையினரது ஆள் இல்லாத வேவு வானூர்தி தகவல் எடுத்து அனுப்ப, சிறீலங்கா தரைப்படையினர் மக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

படைக்கல சக்தியை மட்டுமன்றி, உணவையும் ஆயுதமாகப் பயன்படுத்தும் சிறீலங்கா படையினர், ஒருவேளை உணவுக்காகக் காத்திருந்த மக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி மக்களை அடிபணிய வைக்கும் உத்தியைக் கையாண்டு வருகின்றது.

இதேநேரம் நேற்று வியாழக்கிழமை முதல் இன்று காலை வரை இடம்பெற்ற தாக்குதல்களில் 102 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 156 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

http://www.pathivu.com/news/1692/54/32-43.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.