Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் பெரும் வெற்றி விழாவிற்கான ஆயத்தங்கள் - தமிழர்களுக்கு எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் பெரும் வெற்றி விழாவிற்கான ஆயத்தங்கள் - தமிழர்களுக்கு எச்சரிக்கை

திகதி: 16.05.2009 // தமிழீழம்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசங்களை முழுமையாக மீட்டெடுததை பெரும் விழாவாகக் கொண்டாத் திட்டமிட்டுள்ளது சிறிலங்கா அரசு. இந்த வெற்றி விழாவை கொழும்பு உட்பட இலங்கை முழுவதும் வாழும் தமிழ் மக்கள் பெரும் வெற்றி விழாவாகக் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் சிங்களக் காடையர்கள் வெடி கொழுத்துவதற்கு பணம் தரவேண்டும் என வலியுறுத்தி பணத்தினை வாங்கிச் செல்வதுடன், விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டனர் என கேலியும், கிண்டலும் செய்கின்றனர். அத்துடன், சிறிலங்காவின் தேசிய கொடியை நாளை வர்த்தக நிலையங்களில் பறக்கவிட்டு வெற்றியைக் கொண்டாட வேண்டும் எனவும் எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, யாழ்குடாவில் சிறிலங்கா துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினரும், கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் துணை இராணுவக் குழுவினரும் இந்த வெற்றி விழாவினை தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன், கொண்டாடதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, விடுதலைப் புலிகளை முற்றாக தோற்கடித்துவிட்டதாக கூறியுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்பவுள்ளதாக ஜோர்தானில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு இன்று தெரிவித்துள்ளார்.

எனினும், படையினர் எஞ்சியிருக்கும் பகுதிகளை முழுமையாக நாளை கைப்பற்றாது போனால் தனது பயணத்தை ஓரிரு தினங்களுக்கு ஒத்தி வைத்துவிட்டு படையினர் குறிப்பிட்ட பகுதிகளை கைப்பற்றியதாக அறிவித்ததன் பின்னர் நாடு திரும்புவதற்கு மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

சிறிலங்காவின் நிலைமை இவ்வாறிருக்க, பொதுமக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்கு மனிதாபிமான அமைப்புக்களை கொழும்பு அனுமதிக்கவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தமது ஆயுதங்களைக் கீழே வைப்பதுடன், அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கும் பிரித்தானியப் பிரதமர், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த மோசமான போரின் இடையில் அகப்பட்டுள்ள மக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்காக மனிதாபிமான அமைப்புக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் கோர்டன் பிறவுண், இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு ஐ.நா. மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

"சிறிலங்கா அரசாங்கம் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" எனவும் பிரித்தானியப் பிரதமர் கடுமையாக எச்சரித்தார்.

sankathi

தமிழர்களின் உண்மையான அடிமை வாழ்வின் ஆரம்பம் இது. சிங்கள குண்டர்களுக்கு குடைபிடிக்கும் தமிழ் நிர்வாண சாமிகள் இருக்கும்வரை தமிழர் சுதந்திரமாக வாழமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் உண்மையான அடிமை வாழ்வின் ஆரம்பம் இது. சிங்கள குண்டர்களுக்கு குடைபிடிக்கும் தமிழ் நிர்வாண சாமிகள் இருக்கும்வரை தமிழர் சுதந்திரமாக வாழமுடியாது.

மறைமுகமாக சிங்களவனும் இந்தியாகாரனுக்கு அடிமைதான்.....வழமையாக இந்தியாக்காரனை கூலிகள் என்றுதான் கேவலமாக சிங்களவன் நடத்திரவன் ....சிங்கள இறையான்மை கேள்விக்குறி இன்று?

கொழும்பில் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் சிங்களக் காடையர்கள் வெடி கொழுத்துவதற்கு பணம் தரவேண்டும் என வலியுறுத்தி பணத்தினை வாங்கிச் செல்வதுடன், விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டனர் என கேலியும், கிண்டலும் செய்கின்றனர். அத்துடன், சிறிலங்காவின் தேசிய கொடியை நாளை வர்த்தக நிலையங்களில் பறக்கவிட்டு வெற்றியைக் கொண்டாட வேண்டும் எனவும் எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்
.

இனிமேல் இனக்கலவரங்கள் இலகுவாக அரங்கேற்றப்படும் :unsure:

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

மறைமுகமாக சிங்களவனும் இந்தியாகாரனுக்கு அடிமைதான்.....வழமையாக இந்தியாக்காரனை கூலிகள் என்றுதான் கேவலமாக சிங்களவன் நடத்திரவன் ....சிங்கள இறையான்மை கேள்விக்குறி இன்று?

இனிமேல் இனக்கலவரங்கள் இலகுவாக அரங்கேற்றப்படும் :icon_idea:

சிறீலங்கா சிங்கள பெளத்த தேசம் என்றானதன் பின்.. இனமாவது மண்ணாங்கட்டியாவது. அங்கு வாழ்வது.. வளர்வது.. பிறப்பது எல்லாம் சிங்கள இனம் தான்.

புலிகளை அழிக்கிறம் என்ற பன்னாடைகள் தமிழ் மக்களையும் அழிச்சு.. அவங்கட அரசியல் உரிமைகளையும் பிச்சு எறிஞ்சு சின்னாபின்னமாக்கினதை தமிழன் வரலாற்றில் மறக்கமாட்டான்..! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேல் வீதிகள் வீதிய அல்லது மாவத்த ஆக்கப்படும். ஆறுகள் ஓயா எனப் பெயர் பெறும்.ஆலயங்கள் விகாரைகளாக விளிக்கப்படும். தப்பிப்பிழைத்த சில தமிழ் மன்னர்கள் சரித்திரத்தில் இருந்து சமாதியாவர். தமிழன் தமிழ் பேச தயங்கி சிங்களவனாகிப் போவான் இன்னும் 50 வருடங்களில்.

இனிமேல் வீதிகள் வீதிய அல்லது மாவத்த ஆக்கப்படும். ஆறுகள் ஓயா எனப் பெயர் பெறும்.ஆலயங்கள் விகாரைகளாக விளிக்கப்படும். தப்பிப்பிழைத்த சில தமிழ் மன்னர்கள் சரித்திரத்தில் இருந்து சமாதியாவர். தமிழன் தமிழ் பேச தயங்கி சிங்களவனாகிப் போவான் இன்னும் 50 வருடங்களில்.

100 வீதம் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

100 வீதம் உண்மை

புலிகள் வெல்லும். நம்புவோம். என்னிடைய சகோதர சகோதரிகள் எம்மண்ணை காப்பார்கள். இறுதி வெற்றி நமதே.

புலிகள் வெல்லும். நம்புவோம். என்னிடைய சகோதர சகோதரிகள் எம்மண்ணை காப்பார்கள். இறுதி வெற்றி நமதே.

200 % நம்புங்கள்,புதிய பெயருடன் புலிகள் மீண்டும் வருவார்கள்

புலிகள் வெல்லும். நம்புவோம். என்னிடைய சகோதர சகோதரிகள் எம்மண்ணை காப்பார்கள். இறுதி வெற்றி நமதே.

200 % நம்புங்கள்,புதிய பெயருடன் புலிகள் மீண்டும் வருவார்கள்

மாயை

உறவுகளே!

ஏன் இப்படி மனமுடைந்து போகின்றீர்கள்??? முன்பைவிட நம் விடுதலையுணர்வு பன்மடங்கு அதிகரித்திருக்கின்றதே ஒழிய சற்றும் குறையவில்லை.

போராட ஆயுதம் மட்டும் முக்கியமல்ல. அடங்காத விடுதலை உணர்வும், தணியாத தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும்.

கடைசித் தன்மானமுள்ள தமிழன் இருக்கும் வரைக்கும் நம் விதலைப் போராட்டம் ஓயாது.

ஒரு அன்பான, பணிவான வேண்டுகோள்:

தயவுசெய்து நம் விடுதலைப் போராட்டம் தொடர்பான எதிர்மறையான கருத்துக்களை முன்வைப்பதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நம் தலைமை மீது நம்பிக்கை வைத்து , தன்னம்பிக்கையுடன் தன்னெழுச்சி பெறுங்கள்!

நமது பேரெழுச்சிதான் போராட்டத்தினை வழிநடத்தப் போகின்றது.

எனவே ஓயாமல் தொடர்ந்து போராடுவோம்...!

"தர்மம் தன்னை சூது கவ்வும் பின்னர்

தர்மம் வெல்லும்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.