Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம் தலைவன் வரவுக்குகாய் காத்திருப்போம்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம் தலைவன் வரவுக்குகாய் காத்திருப்போம்

கவிதை - இளங்கவி

தமிழினத்தின் இன அழிப்பின்

உச்சமான இவ்வருடத்தில்

வைகாசி பதினெட்டு; வழமைபோல்

மகிழ்வின்று விடிகிறது.....

உலகத்தின் குரலொன்று

தமிழனுக்காய் ஒலிக்காதா; எனும்

சின்னஞ்சிறு நம்பிக்கையில்

காலை கடனுமின்றி

கணனியை தட்டுகிறேன்.....

அதிர்ச்சி செய்தியொன்றில்; என்

அனைத்துலகும் இருள்கிறது...!

ஆம்..! தளபதிகள் நால்வர்

மண்ணுக்காய் மரணிப்பு...!

பதைபதைக்கும் நெஞ்சுடனே

நண்பனும் நானுமாய்

பாராளமன்ற சதுக்கம் விரைகின்றோம்.....

கையடக்கத் தொலைபேசியில்

மறுபடியும் கவலையுடன் ஓர் செய்தி.....

எம் தலைவனையும் கொன்றுவிட்டார்

அவன் சடலமுமெடுத்துவிட்டார்.....

ஆம்...! இதுதான் அச்செய்தி

தமிழர் உலகெல்லாம்

உறையவைத்த ஓர் செய்தி.....?

என் உணர்வெல்லாம் மயங்க....

கண்ணில் நீர்த்துளிகள் பெருக...

வாயில் உமிழ் நீரோ காய.....

ஓராமாய் ஒருவார்த்தை

உதிர்ந்து விழுகிறது...!;

உண்மையாடா...? நண்பனின் பதிலும்

கன்ணீராய் கண்களிலே...!

ஆம்..! நம் தலைவன்

சுனாமியே நெருங்காத

சுழல்காற்றின் வடிவமல்லா...

சூழ்ச்சிகள் நெருங்காத

சூரியத் தேவனவனல்லா...

வல்லரசுகள் பார்க்காத

நாம் வணங்கும் சாமியல்லா...

இந்த வல்லூறுகளின் சூழ்ச்சியிலா

வஞ்சகமாய் இறந்திடுவான்....

தெளிந்தேன்; அதன் பின்னர்....

நண்பனையும் தேற்றினேன்....

கண்ணீரில் நின்றோரையும்

கதைகள் சொல்லி ஆற்றினேன்.....

கண்ட பல படங்கள்

போலியென்றும் அறிந்தேன்.....

புரிந்தேன் சதியென்று.....

போராட்ட களத்தில் அவன்

புலலென்றும் தெளிந்தேன்....

புயலை பிடிக்க பூனையால் முடியுமா..?

மலையைப் பிளக்க

மண்வெட்டிதான் போதுமா...?

மடையா..! ராஜபக்ஸ

தமிழர் பிணங்களின் குவியலிலே

உன் சிங்கக்கொடி ஏற்றிவைத்தாய்.....

தோற்கும் உன் சரித்திரத்தை

தொட்டும் வணங்கி வந்தாய்.....

தமிழனைக் கதறவைத்து

வீதியில் வெடிவெடித்தாய்.....

வெற்றுப் பேச்சுக்காய்

உன் வெற்றியும் சொல்லிடுவாய்......

ராஜபக்ஸ ராச்சியமே...!

நம் தலைவன் வருவான்டா...

உனக்கு விடைகொண்டு வருவான்டா...

நமையெல்லாம் மகிழ்விக்க

எம் விடுதலைக்காய் வருவான்டா....

அதுவரைக்கும் பொறுத்திருப்போம்

நம் தலைவன் வரவுக்காய் காத்திருப்போம்....

எங்கள் தலைவன் வருவான்

நம் இதயங்களை நிறைப்பான்...

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

நம் தலைவன் வரவுக்காய் காத்திருப்போம்

எங்கள் தலைவன் வருவான்

நம் இதயங்களை நிறைப்பான்..

.நிச்சயம் நம் தலைவன் வருவான்..........உங்களுடன் நானும் நம் தமிழ் சமூகமும் காத்திருப்போம்

எல்லோர் வேண்டுதலும் அது தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

கனவென்றால் தானே நிறைவேறுமா இல்லையா எனும் கவலை இருக்கும். இது மறுக்க முடியாத நிஜம், பொறுத்திருப்போம் அவன் வருகைக்காய்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காந்தனுக்கு

எங்களின் வேண்டுதல் பொய்க்காது. விரைவில் நல்லதே நடக்கும்

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவன் வரும் போது வரட்டும் வரும் வேளை அவருக்கு தெரியும்..

அதுவரை நாம் என்ன செய்ய போகின்றோம்.......?

இப்படியே வெட்டியாய் பேசியபடிதானா.....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

asan

தலைவனின் செய்தி கேட்டு எழுந்த சோகத்தையும் அதனால் சோர்வடைந்த மனங்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் எழுதப்பட்ட கவிதை, நீங்கள் குறிப்பிட்டதைப் போல எல்லோரும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யவேண்டும், இது தலைவன் எங்களுக்குச் சொன்ன கடமை.

நன்றி இளங்கவி!

இந்த சிங்களத்தை இன்னும் திட்டித் தீர்த்தாலும் தகும்.

எங்களது ஆதங்கமாய் உங்களது வரிகள் வெளிப்பட்டிருக்கின்றன.

தலைவன் வருவான்! அவன் வரட்டும் என்று காத்திருக்காமல், நம் வரலாற்றுக் கடமையினை செய்து முடிப்போம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வரிகள் இளங்கவி அவர்களே,

உணர்விலும் உயிர் மூச்சிலும் கலந்திருக்கும் எங்கள் தலைவன்...இடியென வந்த செய்தி கேட்டு இடிந்து போனது நிஜம். !! அவன் புயலையும் வென்றவன் என்று உணர்ந்த பின் தெளிந்தேன் என்பதும் நிஜம்.

இந்த உயிர் இன்னும் துடிப்பதால்.....'எம் தலைவன் எம்மோடு இருக்கின்றான் என்பதே நிஜம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thamilthangai

எங்கள் அனைவரின் விருப்பமும் விரைவில் நிறைவேற வேண்டும், அதே நேரம் நம் தலைவன் எங்களுக்கு சொல்லிய கடமைகளை தொடர்ந்து செய்வோம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கார்த்திகை 27 தலைவரை பார்ப்போம்

அதுவரை காத்திரு தமிழா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்தியனுக்கு

நீங்கள் குறிப்பிட்டது போல எங்கள் கடமைகளை தொடர்ந்து செய்வோம் எங்கள் மக்களுக்கு விடிவு ஏற்படும் வரை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈ- குட்டிக்கு

நிச்சயமாக எல்லோரும் காத்திருப்போம். நன்றிகள்

இளங்கவி,

உங்கள் கவித்துவத்திற்கு நான் எதிரானவனல்ல.

கடவுள் பார்த்துக் கொள்வார், தலைவர் பார்த்துக் கொள்வார் என்று இதுவரை சோம்பேறிகளாக இருந்தோம். உண்மையோ பொய்யோ, தலைவர் வருவார் என்ற மாயையை உண்டாக்குவது எந்த விதத்திலும் எம்மை உயர்த்தப் போவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லிசான்

மன்னிக்கவும், இந்தக் கவிதை நான் எழுதிய நம் தலைவனைப் பற்றி பல வதந்திகளும் வந்து மக்கள் மனங்கலெல்லாம் சோர்வடைந்து இருந்த நேரம் எங்கள் போராட்டம் எந்தக கணத்திலும் ஓய்ந்துவிடக்கூடாது எனும் நல்ல நோக்கத்துடனே எழுதப்பட்டது.

ஆனால் அதற்குப்பின் எத்தனையோ செய்திகள் அறிவிப்புகள் எல்லாம் வந்தும் எங்கள் மனம் சோராமல் இன்றுவரை அதே உத்வேகத்துடன் எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதே இனிமேல் எங்களின் எழுச்சி யாராலும் எந்தக் காரணத்தாலும் நிற்காது என்பதை புலப்படுத்தி நிற்கிறது. தலைவன் தொடங்கிய போராட்டம் எங்கள் கைக்கு மாற்றப்பட்டு விட்டது, அதுவே தலைவனினதும் புலிகளினது விருப்பமாகவும் இருந்தது.

எனவே இக்கவிதை எழுதப்பட்டு பத்து நாள் கழித்து பார்க்கும் போது எவருக்குமே புரியாத மர்மமாக இருக்கும் ஒரு விடயத்தில் எமது மக்களை ஒரு மாயையில் வைத்திருப்பது போல தோன்றக்கூடும்.

அத்துடன் மக்கள் தங்கள் இறை வளிபாட்டின் போது என்றுமே பார்திராத ஓர் கடவுளை கும்பிட்டு பல வரங்கள் கேட்பார்கள், கடவுளே எல்லாத்தையுன் நடத்துகிறார் எனவும் நம்புவார்கள். அப்படியிருக்க நாம் நிஜத்திலே கண்ட தமிழினத்தை காக்க வந்த கடவுளைப்போன்ற ஓர் மனிதன் மீண்டும் வருவான் எனும் நம்பிக்கையில் அவன் தந்த கடமைகளை செய்வது இறை நம்பிக்கையிலும் பார்க்க முன்னேற்றமான விடயமென்பது என் தாழ்மையான கருத்து.

மேலும் உங்கள் கருத்துக்கும் நன்றிகள்

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் நல்லதே நடக்கும்

பேசுறது தமிழ் ஆனால் தலைவர் இல்லையாம் என்டு ஆட்டமும் பாட்டியுமாக ஒரு கூட்டம் அலைஞ்சி திறியுது

இந்த நக்கி பிழைக்கும் நாய் கூட்டத்தின் மத்தியில் தான் என்ணைப்போன்ற பல உறவுகளும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் நிச்சயமாக தலைவன் வருவான் என்ற நம்பிக்கையிள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பிக்கு

ஆம் எல்லோரின் விருப்பம் அதுதான்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kili tiger

துரோகிகளின் கூட்டத்தினாலே தானே இவ்வளவு உயிரிழப்புக்களும், பல சிக்கலும்..

நம்பிக்கையுடன் போராடுவோம் வெற்றி நிச்சயம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.