Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''இளைஞர்களின் ரோல் மாடல் பிரபாகரன்''!-பிரகாஷ்ராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

''இளைஞர்களின் ரோல் மாடல் பிரபாகரன்''!-பிரகாஷ்ராஜ்

சனிக்கிழமை, மே 23, 2009, 15:03 [iST]

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, கண்ணா பிரபாகரன்தான்டா சுத்த ஆண்மகன், உன்னோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்த தகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், 'நான் ஈழத்தில் பிறந்திருந்தால் நிச்சயம் பிரபாகரன் பின்னால்தான் விசுவாசமாக நின்றிருப்பேன்' என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது...

"பிரபாகரனைப் போய் சிலர் சர்வாதிகாரின்னு சொல்றாங்க. சொந்த மக்களையே கொன்று குவித்த ஹிட்லரா அவர்?... தன் மக்களுக்காக களத்தில் நின்று 30 ஆண்டுகளுக்கும் மேல் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சுத்த வீரன் பிரபாகரன். தாக்குறது அல்ல அவர் நோக்கம்... தற்காப்புதான்.

அவர் என்ன வல்லரசு ஆசையில் உலகம் பூரா வலிந்து தாக்குதல் செய்து நாட்டைப் பிடிக்கவா முயற்சி பண்ணார்?.. கால காலமா தாங்கள் வாழ்ந்த மண்ணை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க போர்க்களம் புகுந்தவர்.

அவர் வாழ்க்கையை நினைத்தால் சிலிர்க்கிறது. எத்தனை நேர்மை... எளிமை... வீரம்...! இந்த இனத்தின் பெருமை பிரபாகரன்.

கொண்ட கொள்கை, லட்சியம் வெல்ல தன் உயிரைப் பணயம் வைத்து எப்போதும் கழுத்தில் சயனைடு குப்பியுடன் காட்சி தந்த பிரபாகரன் தான் இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ரோல்மாடல். நாமெல்லாம் நேதாஜி, பகத் சிங் பத்தி படிச்சிதான் தெரி்ஞ்சிக்கிட்டோம். ஆனா பிரபாகரன் என்ற சுத்த வீரனைப் பார்த்து வளர்ந்தோம்.

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், இதோ பார்... இந்த மாவீரன்தான்டா உன் ரோல்மாடல் என்று காட்டி வளர்த்திருப்பேன்...

பிரபாகரனைப் போல் அர்ப்பணிப்பு குணம் உள்ள ஒரு பெரும் தலைவனைப் பெற்றெடுத்ததே ஈழத் தமிழ் மண்ணுக்குள்ள பெருமையா நான் பார்க்கிறேன்.

'வன்னியில் 5 புலி இறக்கிறார்கள்... 50 புலிகள் பிறக்கிறார்கள்' என்ற கவிதை நூறு சதவிகிதம் உண்மையானது என்று கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

thatstamil

பிரகாஷ்ராஜிற்கு புரிந்ததைப் போல இந்த உலகத்திற்கே புரியவேணும் என்று ஆசைப்படுகின்றோம்.

யாதார்த்தமான கருத்துக்களைத் தெரிவித்ததற்கு ஈழத்தமிழர்களின் மனமார்ந்த நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'வன்னியில் 5 புலி இறக்கிறார்கள்... 50 புலிகள் பிறக்கிறார்கள்' என்ற கவிதை நூறு சதவிகிதம் உண்மையானது

'வன்னியில் 5 புலி இறக்கிறார்கள்... 50 புலிகள் பிறக்கிறார்கள்' என்ற கவிதை நூறு சதவிகிதம் உண்மையானது

இப்படி சொல்லியே அழிஞ்சு போனோம் :icon_mrgreen:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி சொல்லியே அழிஞ்சு போனோம் :lol:

இல்லை நண்பரே,

காலம் விதித்தபடி ஆயிரம் ஆயிரம் வீரர்கள் உயிரை துச்சமென மதித்து தாயக விடுதலைக்கு போராடினர். "மாற்றம் ஒன்றுதான் மாறாதது" என்ற கூற்றின்படி உலகம் இப்போது எப்படி மாறியிருக்கிறது என்று நாம் கவனிக்க தவறிவிட்டோம், பாலா அண்ணன் போன்ற மெத்தப்படித்த மேதாவிகள் படித்து படித்து சொன்னபோதும் கேட்க மறுத்தோம்.

கொடுமைகளின் எதிர்விளைவாய் சுதந்திர வேட்கை கொண்ட வீரர்கள் உதித்துக்கொண்டேதானிருப்பார

  • 2 weeks later...
கொடுமைகளின் எதிர்விளைவாய் சுதந்திர வேட்கை கொண்ட வீரர்கள் உதித்துக்கொண்டேதானிருப்பார

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

58ஆம் இனக்கலவரத்தை பார்க்காமலே ,அந்த ஆண்டு பிறந்த எம்தலைவர்.......................தலைவர் பிறந்தது ..............1954......november 26

58ஆம் இனக்கலவரத்தை பார்க்காமலே ,அந்த ஆண்டு பிறந்த எம்தலைவர்.......................தலைவர் பிறந்தது ..............1954......november 26

பிழை திருத்தியுள்ளேன் சுட்டிகாட்டியமைக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.