Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் பணியாற்றிய பிரித்தானிய பெண்ணை விடுவிக்குமாறு கோரிக்கை

Featured Replies

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிய மருத்துவமனையில் பணியாற்றிய பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ்வாணி ஞானகுமார் என்ற தமிழ் பெண்ணை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் சர்வதேச ஊடகமொன்றில் வெளியான செய்தியாவது:

பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ்வாணி ஞானகுமார் (வாணி) என்ற மருத்துவப் பணியாளர் வவுனியாவில் உள்ள தடைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரை விடுதலை செய்வதற்கு இராஜதந்திர வட்டாரங்களின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர்.

வவுனியா தடை முகாமில் வாணி தடுத்து வைக்ப்பட்டுள்ளதாகவும் அவர் அங்கிருந்து தமக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டதாகவும் அவரின் சகோதரி சுபா மோகனதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரின் தொலைபேசி அழைப்பு இடை நடுவில் நின்றுவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரித்தானிய குடிமகனான வாணி உயிரியல் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர். அவர் கடந்த சில மாதங்களாக வன்னியில் இயங்கிவந்த தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றி வந்திருந்தார்.

மே மாதம் 12 ஆம் நாள் அவர் மருத்துவமனையில் பணியாற்றியதை தமிழ் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியிருந்தது.

அவரின் விடுதலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் இயன் டங்கன் சிமித் என்பவரின் உதவியையும் நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய மருத்துவ பணியாளரின் பாதுகாப்பு குறித்து பிரித்தானிய அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேச்சு

வீரகேசரி இணையம் 5/31/2009 12:45:46 PM - இலங்கையில் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்த லண்டன் கிழக்கு சிங்போர்ட் பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ பணியாளரான தமிழ்வாணி ஞானகுமார் என்பவர் வவுனியாவில் உள்ள முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த பிரித்தானிய மருத்துவ பணியாளரின் பாதுகாப்பு குறித்து பிரித்தானிய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய பிரஜை வவுனியாவில் உள்ள மெனிக் பார்ம் முகாமில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகாரம் மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். .

தமிழ்வாணியை விடுவித்து அவரை பிரித்தானியாவுக்கு அனுப்புவது குறித்து தாம் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் தொடர்பான தகவல்களின் முன்னேற்றம் குறித்தும் தாம் தமிழ்வாணியின் குடும்பத்தினருக்கு அறிவித்து வருவதாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்வாணி கடந்த 19 ஆம் திகதி தன்னுடன் தொலைபேசியில் உரையாடியாதாக அவரது சகோதரியான 29வயதான சுபா மோகனதாஸ் தெரிவித்துள்ளார். தான் இந்த முகாமில் இருப்பதாகவும் தன்மை வெளியில் எடுக்குமாறு கோரியதுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டதாக சுபா கார்டியன் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.