Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேருந்தில் தமிழில் உரையாடிய தம்பதியர் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேருந்தில் தமிழில் உரையாடிய தம்பதியர் மீது தாக்குதல்

இந்தியாவில் கர்நாடக பேருந்தில் ஊட்டி வந்த தமிழக தம்பதியர்கள் தமிழில் உரையாடியதால் நேற்று இரவு தாக்கப்பட்டுள்ளனர். கர்நாடக காவல்நிலையத்தில் அத்தம்பதியர்கள் புகார் கொடுத்தும் காவலர்கள் வாங்க மறுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி டவுன் பகுதியில் வசிப்பவர் ரமேஷ். இவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் தங்கள் 4வயது பெண் குழந்தையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூர் அருகேயுள்ள கோயில் ஒன்றுக்கு சென்றனர்.நேற்று மாலை மைசூரில் இருந்து ஊட்டி வந்த கர்நாடக பஸ்சில் ஏறினர். பஸ்சின் கடைசி சீட்டில் ரமேஷும், சுதாவும் அமர்ந்திருந்தனர். கடைசி சீட்டில் மொத்தம் 6 பேர் அமர்ந்திருந்தனர்.

பஸ் மைசூருக்கும், குண்டல்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் வந்த போது, பஸ்சில் 3 ஆண் பயணிகள் ஏறினர். அவர்கள், ரமேஷ் மற்றும் சுதாவை தள்ளி அமருமாறும், தாங்கள் உட்கார வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அப்போது சுதாவும், ரமேஷும் இடம் இல்லை. எப்படி அமர்வீர்கள் என்று கன்னடத்தில் கேட்டுள்ளனர். பின், இருவரும் தங்களுக்குள் தமிழில் பேசி வந்தனர்.

இதை கவனித்த சீட் கிடைக்காத சிலர், சுதாவையும், ரமேஷையும் கன்னடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதனால், சுதாவும், ரமேசும் தட்டிக் கேட்டனர். அப்போது 3 பேரும், நீங்கள் குண்டல் பேட்டையைத் தாண்டி ஊர் செல்ல மாட்டீர்கள் என மிரட்டியுள்ளனர். பின், ரமேசும், சுதாவும் அமைதியாக பயணம் செய்தனர்.

பஸ் குண்டல் பேட்டை அருகே வரும் போது, மூவரும் சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். இதை கவனித்த சுதாவின் கணவர், பஸ் டிரைவரிடம் சென்று பஸ்சை காவல் நிலையத்துக்கு விடும்படி கூறினார்.

ஆனால், பஸ் டிரைவர் பஸ்சை காவல் நிலையத்தில் நிறுத்தாமல், ஒரு உணவு விடுதி அருகே நிறுத்தியுள்ளார். அங்கு 10க்கும் மேற்பட்ட நபர்கள் பஸ்சினுள் புகுந்து சுதா மற்றும் ரமேசை காட்டுமிராண்டி தனமாக தாக்கினர். அதில், ஒருவன் சுதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார்.

அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த தேவாலா பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் அந்த நபர்களிடம் தட்டிக் கேட்டார். அப்போது தினேசையும் அவர்கள் தாக்கி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துவிட்டு, அனைவரும் தப்பினர்.

பின், பயணிகள் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடும் படி கூறினர். ஆனால், ஓட்டுநர் பஸ்சை காவல் நிலையத்திற்கு செல்லாமல், குண்டல்பேட்டை பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புகார் கொடுக்குமாறு கூறினார்.

குண்டல்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற சுதா மற்றும் ரமேசிடம் போலீசார் அலட்சியமாக நடந்து கொண்டனர். மேலும், புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.

சுதா, ரமேஷ், தினேஷ் ஆகியோர் அதே பஸ்சில் கூடலு£ர் வந்தனர். கூடலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது, போலீசார் பஸ்சை போலீஸ் ஸ்டேஷன் வரவழைத்து டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த இடம் கர்நாடக மாநிலம் என்பதால் புகாரை குண்டல்பேட்டையில் கொடுக்க வேண்டும் என்று கூறி பாதிக்கப்பட்ட சுதா, ரமேஷ், தினேஷ், பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோரை குண்டல்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் செல்ல அறிவுறுத்தினர். மேலும், குண்டல்பேட்டை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் கூறினர்.

ஆனால், இரவு நேரமாகிவிட்டதால் சுதா, ரமேஷ், தினேஷ் ஆகியோர் புகார் கொடுக்காமல் ஊட்டி திரும்பி விட்டனர்.

மூலம்: மீனகம்.கொம்

Edited by விடியல்

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா இது? மானாட மயிலாட இன்னும் நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கா? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னையா இது? மானாட மயிலாட இன்னும் நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கா? :lol:

மானாட மயிலாட , ஜோடி நம்பர் ஒன் , அசத்தப்போவது யாரு இவற்றை பார்க்கவே தமிழ்நாட்டிலுள்ளவர்களுக்கு நேரமில்லை. இதைப்பற்றி கவலைப்பட எப்படி இயலும் அப்பிறவிகளால்.

சிறிதளவு கூட உணர்வு இல்லாத தமிழ்நாட்டு மக்களை நாம் இனியும் நம்பினால் நமக்கு நாமே குழி பறித்துக்கொள்வதற்கு சமமே,

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ரொம்பவும் இழிச்சவாயன் ஆகப் போய் விட்டான் .

ஒரு சீக்கியன் ஒஸ்ரியாவில் செத்தால் பஞ்சாப்பில் நாலு புகையிரதம் , 25 பஸ் என்று பஞ்சாப் பத்தி எரியுது ,

இன்னுமொரு சீக்கியன் அவுஸ்திரேலியாவில் செத்தால் , எதிர்க்கட்சி தலைவர் அத்வானியிலிருந்து அமிதாப்பச்சன் மட்டும் குரல் கொடுக்கிறார்கள் ,

தமிழன் இந்தியாவில் தாக்கப்பட்டாலும் , இலங்கையில் ஒரு நாளில் 25,000 கொல்லப்பட்டாலும் கேட்க ஒரு நாதி இல்லை . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்றா சக்க அர்றா சக்க

அந்த தமிழர்களை அடித்தே கொன்றிருந்தாலும் தமிழக மக்கள் கன்னடர்களை மன்னித்துவிடுவார்கள். நாங்கள் இந்தியர்களென்று.

சூடு சொரணை இல்லாத மக்களை காண தமிழகம் வரலாம்.

தமிழக காவல்துறையே தமிழர்களுக்கு எதிராக இருக்கும்பொழுது கர்நாடக காவல்நிலையத்திற்கு அவர்கள் சென்றதும் தவறே.

Edited by aazhikkarai

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ரொம்பவும் இழிச்சவாயன் ஆகப் போய் விட்டான் .

ஒரு சீக்கியன் ஒஸ்ரியாவில் செத்தால் பஞ்சாப்பில் நாலு புகையிரதம் , 25 பஸ் என்று பஞ்சாப் பத்தி எரியுது ,

இன்னுமொரு சீக்கியன் அவுஸ்திரேலியாவில் செத்தால் , எதிர்க்கட்சி தலைவர் அத்வானியிலிருந்து அமிதாப்பச்சன் மட்டும் குரல் கொடுக்கிறார்கள் ,

தமிழன் இந்தியாவில் தாக்கப்பட்டாலும் , இலங்கையில் ஒரு நாளில் 25,000 கொல்லப்பட்டாலும் கேட்க ஒரு நாதி இல்லை . :lol:

பலருடைய சப்பைக்கட்டு தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை என்பது..! அப்படிப் பார்த்தால் சீக்கியனுக்கும் நாடில்லையே? (இந்திக்காரன் வேறு, சீக்கியன் வேறுதானே..!)

இன்னுமொரு குறூப் சொல்லும், ராஜீவ் காந்தியைப் போட்டுத்தள்ளினதாலதான் தமிழனுக்கு மதிப்பில்லை எண்டு..! அவற்ற அம்மாவைப் போட்டுத்தள்ளின சீக்கியன் நல்லாத்தானே இருக்கிறான்?

ஆக, ஈழத்தமிழன் சீரழிந்த காரணம் அவனது புகழாசை. இந்த ஆசையினால்தானே ஈழத்தையே சிங்களவனிடம் அன்று அடகுவைத்தார்கள்..! மலையகத்தமிழரை கவனியாது விட்டார்கள்..!!

தமிழகத் தமிழன் சீரழியக் காரணம் பொருளாசை..! அதுதான் அவனை உணர்வற்றவன் ஆக்குவது..! அதுதான் அவனை துரோகி ஆக்குவது..! அதுவே அவனை மானங்கெட்டவன் ஆக்குவதும் கூட‌..!

  • கருத்துக்கள உறவுகள்

பலருடைய சப்பைக்கட்டு தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை என்பது..! அப்படிப் பார்த்தால் சீக்கியனுக்கும் நாடில்லையே? (இந்திக்காரன் வேறு, சீக்கியன் வேறுதானே..!)

இன்னுமொரு குறூப் சொல்லும், ராஜீவ் காந்தியைப் போட்டுத்தள்ளினதாலதான் தமிழனுக்கு மதிப்பில்லை எண்டு..! அவற்ற அம்மாவைப் போட்டுத்தள்ளின சீக்கியன் நல்லாத்தானே இருக்கிறான்?

ஆக, ஈழத்தமிழன் சீரழிந்த காரணம் அவனது புகழாசை. இந்த ஆசையினால்தானே ஈழத்தையே சிங்களவனிடம் அன்று அடகுவைத்தார்கள்..! மலையகத்தமிழரை கவனியாது விட்டார்கள்..!!

தமிழகத் தமிழன் சீரழியக் காரணம் பொருளாசை..! அதுதான் அவனை உணர்வற்றவன் ஆக்குவது..! அதுதான் அவனை துரோகி ஆக்குவது..! அதுவே அவனை மானங்கெட்டவன் ஆக்குவதும் கூட‌..!

தமிழன் ஒற்றுமையின்மை என்பதும் முக்கிய காரணம் டங்குவார் . சரியான நண்டுக் கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஒற்றுமையின்மை என்பதும் முக்கிய காரணம் டங்குவார் . சரியான நண்டுக் கூட்டம் .

அட.. அதைச் சொல்லவும் வேணுமோ எண்டிட்டு விட்டிட்டன்..! :lol:

சாதி எமக்குள் பெரிய பிரிவினையை ஏற்படுத்தியதையும் மறக்க முடியாது. புலிகளின் வளர்ச்சியின் பின் சாதியின் தாக்கம் ஈழத்தில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை..! ஆனால் தமிழகத்தில் இன்னும் அந்த நிலை ஏற்படவில்லை என்பது ஒரு சோகம்..!

இல்லாவிட்டால், தெற்கிலே மீனவர்களைக் கொன்று குவித்தபோது கண்டுகொள்ளாத சென்னைவாசிகள், ஒரு திருடன் அங்கு அகப்பட்டபோது அடித்துக் கொன்றதை என்னவென்று சொல்வது. மீனவர்களை தங்கள் இனமாகக் கருதவில்லை என்பதைத்தானே..!

தங்கள் பொருளுக்கு சேதாரம் என்றவுடன் வரும் உணர்வு, காவிரித் தண்ணீர் இல்லாமல் உழவன் எலிக்கறி சாப்பிடும்போது வருவதில்லை என்பதும் ஒரு பெரும் சோகம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சுடும். அதுதான் உண்மையும் கூட. முதல்வர் அவர்கள் எம்மைக் காப்பதிருக்கட்டும் தமிழகத் தமிழர்களையாவது காப்பாறு;றுவாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை சுடும். அதுதான் உண்மையும் கூட. முதல்வர் அவர்கள் எம்மைக் காப்பதிருக்கட்டும் தமிழகத் தமிழர்களையாவது காப்பாறு;றுவாரா?

கர்நாடகாவில் உதயா டிவி மற்றும் சன் குழும தொலைக்காட்சிகளும் மற்றும் ஏனைய தொழில்களும் கருணா(நிதி) குடும்பத்தினருக்கு ஓடுகின்றன. கோடிக்கணக்கான பணம் முக்கியமா இல்ல தமிழர்கள் முக்கியமா?

நம் மக்கள் நித்தம் நித்தம் கொல்லப்படும் வேளையில் இந்திய பிரதமருக்கும் கடிதம் எழுதுகிறார். சென்ற வாரம் கூட கடிதம் எழுதுகிறார்.

ஆனால் அவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் பதவி வாங்க விமானம் மூலம் நேரில் செல்கிறார்.

இப்படி இருக்கும்பொழுது தமிழக தமிழர்களை பற்றி சிந்திக்க கருணா வுக்கு எப்படி எண்ணம் வரும்.

நான் நினைக்கிறேன். தமிழக தமிழர்களையும் காக்க வேண்டிய பொறுப்பு நம்முடையதுதான் போலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே வடக்கத்தையான்,யாழ்ப்பாணத்தா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேருந்தில் செல்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு என்ன நடந்தாலும் செல்வந்த ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.