Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வெறுப்பு!!!

Featured Replies

அண்மைய காலமாக, இந்தயாவிற்கும், இந்தயர்களுகும் நீங்கள் காட்டும் வெறுப்பை பார்த்து மிகவும் துயர்யுற்று இதை எழுதுகிறேன்.

இதே பாரத பூமியில் தான் உங்கள் சகோதரர்களான நாங்களும் இருகிரோம். எங்கள் மேல் உங்கள்ளுக்கு வெறுப்பு இருக்கலாம் அதற்காக நாங்களும் மேலும் துன்ப பட வேண்டும் என்று நினைகீரீர்கள? ஒரு தனி பட்ட ஒரு அரசு செய்த விளைவிற்கு நாங்களும் இறக்க வேண்டுமா???

அட, இவ்வளவு நாட்கள் நான், நமது தமிழினம் பெரும் எண்ணிகையில் இருக்கிறது, நமக்கு எதாவது ஒரு துயரம் ஏற்படும் போது, நீங்கள் எல்லோரும் இருகீரீர்கள என்று தப்பாக நினைத்து விட்டேன்.... மிகவும் மன வேதனையுடன் எழுதுகிறேன்!!!

வெறுப்பு எல்லார் மீதிலும்தான் காட்டப்படுகின்றது. இந்தியா மீது தமிழர்களுக்கு காலம் காலமாக கோபம் இருந்துகொண்டே இருக்கும். மேலும் தனது சுயதேவைக்காக தாயகத்தில் ஆயுதபோராட்டத்தை வளர்த்துவிட்டது இந்தியாதானே. இப்போது தேவை மாறியுள்ளதால் தலைகீழாக நிற்கின்றது.

அண்மைய காலமாக, இந்தயாவிற்கும், இந்தயர்களுகும் நீங்கள் காட்டும் வெறுப்பை பார்த்து மிகவும் துயர்யுற்று இதை எழுதுகிறேன்.

இதே பாரத பூமியில் தான் உங்கள் சகோதரர்களான நாங்களும் இருகிரோம். எங்கள் மேல் உங்கள்ளுக்கு வெறுப்பு இருக்கலாம் அதற்காக நாங்களும் மேலும் துன்ப பட வேண்டும் என்று நினைகீரீர்கள? ஒரு தனி பட்ட ஒரு அரசு செய்த விளைவிற்கு நாங்களும் இறக்க வேண்டுமா???

அட, இவ்வளவு நாட்கள் நான், நமது தமிழினம் பெரும் எண்ணிகையில் இருக்கிறது, நமக்கு எதாவது ஒரு துயரம் ஏற்படும் போது, நீங்கள் எல்லோரும் இருகீரீர்கள என்று தப்பாக நினைத்து விட்டேன்.... மிகவும் மன வேதனையுடன் எழுதுகிறேன்!!!

இந்தியர்களான வடக்கதியர்களுக்கு உங்கள் மீது அக்கறை கிடையாது, தமிழர்களை அவர்கள் சிறந்த நண்பர்களாக சேர்ப்பது கூட மிகவும் அரிது. இதை இங்கே கண் கூடாகவே கணக்கூடியதாக இருக்கிறது....

அவ்வளவு ஏன் உங்கள் மக்களின் பெருண்பாண்மையானவர்களுக்கு இந்திய தமிழ் மக்கள் மீது அக்கறை கிடையாது...

இதில் நாங்கள் அக்கறை பட்டு மட்டும் எதுவும் மாறி விடப்போவதில்லை...

"எனக்கு தெரிந்த சீக்கியர் ஒருவர் கேட்டார் தமிழ் நாட்டை பற்றி ..... 86 வயதான அந்த முதலமைச்சர்ரை விட்டால் அவர்களுக்கு வேறு நல்ல ஆழுமை உள்ள தலைவரே கிடையாதோ எண்று...

அதுக்கு நான் சொன்னேன் அவர் நல்லது நிறைய செய்து இருக்கலாம் எண்று..

அதுக்கு எதிர் கேள்வி கேட்டார் அப்ப வேறு யாரும் வந்து அவரை போல நல்லது செய்யபவர் கிடையாதோ , இல்லை அவர் அப்படி என்ன தமிழ் நாட்டை சிங்கப்பூர் மாதிரியா ஆக்கி இருக்கிறார் எண்று..??

அவர் நல்ல கவிஞர் நல்ல பேச்சாளர் அவர் சொன்னால் தான் மக்கள் ஏற்று கொள்கிறார்கள் அதனால் தான் எனும் போது.. அவர் சொன்னார் தமிழர்கள் ஏமாறும் முட்டாள்கள் எண்று பதில் சொன்னார்...

மீண்டும் நான் தெரியாதது போல பதிலாக ஒரு கேள்வியை கேட்டேன் பஞ்சாப்பில் என்ன மாதிரி இளையாவர்களா அதிகாரத்தில் இருக்கிறார்கள் எண்று... அதோடுதான் மனிதன் அடங்கினான்...

அவர்களின் ஏளனத்துக்கு ஒரு சிறு உதாரணம் மட்டும் தான் இப்படி பல உதாரணங்கள் இருக்கின்றன...

மாலையாளிகள் தொடங்கி வட இந்தியர் வரை எல்லாரும் தமிழர்களை இழிவு படுத்துவதை கண்கூடாக காணக்கிடைக்கின்றது.... அவ்வளவுக்கு தமிழர்கள் பச்சோந்திகள் தமது நலனில் மட்டும் அக்கறை கோண்டவர்களாக பலரும் இருக்கிறார்கள்...

இவ்வளவு ஏன் ...

பிரித்தானிய பாராளு மண்றம் முன் நடக்கும் போராட்டத்துக்கு என்னுடன் ஒரு குஜராத்தி இஸ்லாமியரும் இரண்டு பாக்கிஸ்தானிகளும் தாங்களாக முன் வந்து என்னுடன் வந்து இருந்தார்கள்.... ஆனால் நான்கு இந்திய தமிழர்களை நானாக கேட்டேன் வருகிறிர்களா எண்று.... அவர்கள் சொன்ன பதிலும் ஒதுங்கிய விதத்தையும் இங்கு விபரிக்க விருப்பம் இல்லை...

அந்த இந்திய தமிழர்களுடன் காணும் போது ஒரு புன்னகை கூட வருகுது இல்லை....

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மைய காலமாக, இந்தயாவிற்கும், இந்தயர்களுகும் நீங்கள் காட்டும் வெறுப்பை பார்த்து மிகவும் துயர்யுற்று இதை எழுதுகிறேன்.

இதே பாரத பூமியில் தான் உங்கள் சகோதரர்களான நாங்களும் இருகிரோம். எங்கள் மேல் உங்கள்ளுக்கு வெறுப்பு இருக்கலாம் அதற்காக நாங்களும் மேலும் துன்ப பட வேண்டும் என்று நினைகீரீர்கள? ஒரு தனி பட்ட ஒரு அரசு செய்த விளைவிற்கு நாங்களும் இறக்க வேண்டுமா???

அட, இவ்வளவு நாட்கள் நான், நமது தமிழினம் பெரும் எண்ணிகையில் இருக்கிறது, நமக்கு எதாவது ஒரு துயரம் ஏற்படும் போது, நீங்கள் எல்லோரும் இருகீரீர்கள என்று தப்பாக நினைத்து விட்டேன்.... மிகவும் மன வேதனையுடன் எழுதுகிறேன்!!!

நண்பரே,

நானும் தமிழ்நாட்டில் வசிக்கும் ஒரு தமிழன்தான். உங்களுக்கு போதிய அளவு அனுபவம் இல்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1. நீங்கள் கடைத்தெருவுக்கு போனாலும் சரி, தொழிலுக்கு போனாலும் சரி, வட இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்தி பேசும் மக்களுக்கு தமிழர்கள் என்றாலே இளக்காரம்தான். ஓரளவு படித்த, நல்ல வேலையிலுள்ள தமிழர்கள் இதிலிருந்து தப்பிக்கலாமே தவிர, மற்றவர் நிலை மிகவும் பரிதாபம்தான். சென்னையிலிருந்து மும்பைக்கு செல்லும் ரயிலில், இரவு உணவுக்காக ஆர்டர் எடுக்க வரும் உணவகத்தில் வேலை செய்யும் பையனில் ஆரம்பிக்கிறது இந்த இளக்காரம். உங்களுக்கு இந்தி தெரியவில்லை என்றால் , 'சாப்பாட்?' என்று கேவலமாக சொல்லிவிட்டு ஒரு கேவலமான இளிப்பை காட்டுவான். நம் பக்கத்திலுள்ள இந்தி பேசும், அதுவரை நம்முடன் சிநேகமாக பழகிவந்த இந்தி பேசுபவர்கள், ரசித்து சிரிப்பார்கள். இது ஏதோ எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவமாக கருத வேண்டாம்.

ராஜ்ஜிய சபை உறுப்பினர் திரு.திருநாவுக்கரசர் அவர்களும், 'கருணாநிதி வீட்டு பிள்ளைகள் இந்தி தெரிவதால் வட நாட்டில் பிழைத்துகொள்வார்கள் . வேலை தேடி வட நாடு போகும் தமிழன், ரயில் ஆந்திரா தாண்டியவுடன் சாப்பாட்டிற்காக கூட கீழே இறங்குவதில்லை. யாரும் மதிப்பதில்லை.' என்று கூறியுள்ளார். எனக்கு ஏற்பட்ட அனுபவம் இவருக்கு எப்படி தெரிந்தது?

2. முன்னாள் வெளியுறவு துறை செயலாளர் திரு ஏ.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள்,

'இலங்கையில் தமிழர்களுக்கு நடப்பது போன்ற கொடுமை குஜராதிகளுக்கோ, பீகாரிகளுக்கோ, மகாராஷ்ட்ரா மக்களுக்கோ நடந்திருந்தால் இந்நேரம் இந்தியா இலங்கையின் மீது போர்டுத்திருக்கும்' என்று ஒரு செவ்வியில் கூறியுள்ளார்.

இலங்கை சகோதர சகோதரிகளை காக்க வேண்டி எத்தனை கண்டன முறை ஊர்வலம் சென்றோம்? எத்தனை முறை வேண்டுகோள் விடுத்தோம்? யார் காதிலாவது விழுந்ததா? அல்லது விழுந்த மாதிரி காட்டிகொண்டார்களா? குஜராத்திக்கோ, பீகாரிக்கோ இது நடந்திருந்தால் அவர்கள் இவ்வாறுதான் கேளா செவியினராக இருந்திருப்பார்களா? ஏ.பி.வெங்கடேஸ்வரன் கூற்றுப்படி இலங்கை மீது போர் தொடுத்திருப்பார்கள். அப்போது இனபிரச்சினை இலங்கையின் உள்விவகாரமாக இருந்திருக்காது. அவ்வளவு ஏன், வங்காள தேசத்தை உறவாக்கிய இந்திரா ஏன் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்கி கொடுக்கவில்லை? கொஞ்சம் பயிற்சிகளும், ஆயுதங்களும்தானே கொடுத்தார்? வங்காளிகளுக்கும் இதே போன்று செய்திருக்கலாமே? எல்லாம் இன உணர்வுதான் காரணம். தமிழன் நன்றிமிகுந்தவன். 'காலத்தினால் செய்த உதவி ' சிறிதாயினும் பெற்றுக்கொண்டு குறைகூறாமல் இருந்தான். நடந்தவைகளை சீர்தூக்கி பார்க்கும்போது, இலங்கை தமிழனுக்கு இருந்த பெருந்தன்மை எனக்கு இல்லை. அதனால் குற்றத்தை குற்றம் என்றே கூறுகிறேன்.

நீங்கள் காரணம் சொல்லலாம், புலிகள் ராஜிவை கொன்றார்கள் என்று. சீக்கியர்கள் இந்திராவை கொன்றார்கள். பிரான்சு நாட்டில் சீக்கியர்கள் டர்பன் வைக்க கூடாது என்று சொன்னவுடன் மன்மோகன் சிங்க் விழுந்தடித்துக்கொண்டு ஓடிசென்று பேச்சு வார்த்தை நடத்தினார். தமிழன் உயிர் சீக்கியன் மயிரை விடவும் கேவலமா?

3.அண்மையில் உலகமயமாக்கலுக்கு முன்பு வரை, காமராஜர் காலத்திற்கு பின் எந்த ஒரு பெரிய தொழிற்சாலையும் தென்னிந்தியாவில் அமைக்கப்படவில்லை, அதுவும் தமிழ்நாட்டில் அமைக்கப்படவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

4. இந்திய சரித்திரத்தில் வீரத்தில் முதலிடத்தில் வைத்து போற்றப்படும் ராஜராஜ சோழனின் சிலையை பாராளுமன்ற வளாகத்தில் வைக்க வட நாட்டு எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

5. 'இலங்கையில் தமிழ் பெண்கள் அவர்களை காக்க சென்ற இந்திய அமைதி காப்பு படையினராலே கற்பழிக்கப்படுகிறார்கள்' என்று எம்.ஜி.ஆர. அவர்கள் அழாக்குறையாக சொன்னபோது, ராஜிவ் காந்தி சொன்ன பதிலை இங்கு என்னால் வெளியிட முடியவில்லை என்று மனம்வெதும்பி புலவர் புலமைப்பித்தன் குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டியில் கூறினார், அப்படியானால் எவ்வளவு கேவலமான வார்த்தைகளை கூறியிருப்பார்? எம்மின பெண்கள் அவ்வளவு கேவலமானவர்களா?

6.

'போரின் இறுதி கட்டத்தில் இந்தியா எவ்வித நெருக்குதலும் கொடுக்கவில்லை. ஆதரவே கொடுத்தது.இந்த்யாவின் உதவி இல்லாமல் புலிகளை (இன விடுதலையை) அழித்திருக்க முடியாது. இந்தியாவுக்கு நாங்கள் நன்றிகடன் பட்டுள்ளோம் ' என்று ராஜபக்ச சொன்னானே? இந்தியா எந்த உதவியும் செய்யவில்லை என்ற பொய்யை திரும்ப திரும்ப சிதம்பரம் முதல்கொண்டு அனைவரும் சொன்னார்களே?

இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீன போர், மற்றும் கார்கில் போரின்போதும் இந்தியாவிலேயே அதிகம் நிதி வசூலித்து கொடுத்தோம். நமது சினிமா நட்சத்திரங்கள் காயம் பட்ட வீரர்களுக்காக அவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்களே? கையில், காதில், மூக்கில் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுத்தார்களே? அதற்கு நன்றிகடனா எம்மின படுகொலை?

இன உணர்வுகொள்ளுங்கள். அதுதான் நம்மை காக்கும். அல்லது துரோகியாய் நில்லுங்கள். இரண்டும் கெட்டான் நிலை வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறு தொகை தமிழ் நாட்டு மக்கள் ஈழதமிழர்களுக்காக குரல் கொடுத்தார்கள். தீக்கிளித்தார்கள்.அவர்களுக்

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு சிறு தொகை தமிழ் நாட்டு மக்கள் ஈழதமிழர்களுக்காக குரல் கொடுத்தார்கள். தீக்கிளித்தார்கள்.அவர்களுக்

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.