Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அபிவிருத்தி என்ற பெயரில் சிங்கள குடியேற்றம் வேண்டாம்--பி.ரவிவர்மா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

07/06/2009, 11:17 [செய்தியாளர் தாயகன்]

தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களுக்கு முயற்சி

தமிழர் தாயகத்தை பௌத்த மயப்படுத்தி, சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெறுகின்றன.

வன்னியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி போன்ற இடங்களில் பௌத்த விகாரைகள் நிறுவப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு, மன்னார் உட்பட அனைத்து இடங்களிலும் காவல் நிலையங்களும், படைத் தலைமையகங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

தென் தமிழீழத்தில் தமிழர்களின் பாரம்பரிய பூமியில் பல பௌத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட மட்டக்களப்பு வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாதகலிலும் சிங்கள பௌத்த ஆலயம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன், அதிபர் மகிந்த ராஜபகசவின் மனைவி சிராந்தியும், மகன் நாமலும் நேற்று முன்தினம் காலை திடீரென “சங்கமித்ரவின்” சிலையுடன் அங்கு சென்று, அதனை நிறுவியுள்ளனர்.

பலாலி வானூர்தி நிலையத்திற்குச் சென்ற இவர்கள் இவரும் மிகவும் கடுமையான பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டதுடன், சிங்கள தேசிய கீதம் பாடுவதற்கென மாணவிகள் 6 பேரும் படையினரால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

பதிவு

ஏகாதிபத்தியத்தில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கோட்பாடும் தென்னாசியப் பிராந்திய பெரும் தேசங்களின் பிராந்திய மேலாதிக்கப் போட்டியுமே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாக தோற்கடித்துள்ளது என்று புதிய ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான இ.தம்பையா தெரிவித்துள்ளார்.

வன்னிப்போர் அவலங்கள் அதனால் ஏற்பட்ட கொடூரமான மனிதப் பேரழிவுகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய இனநெருக்கடி தீர்வுக்கான அரசியல் முன்னெடுப்புகள் என்பன

தொடர்பாக வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் மக்கள் மீதான இன்றைய அவல நிலை மைகளுக்கும் அரசியல் பின்னடைவுகளுக் கும் பிரதான காரணம் என்னவென்று கூறு கின்றீர்கள்?

1977ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி 1976ஆம் ஆண்டு முன்வைத்த நடைமுறை சாத்தியமற்ற "தனித் தமிழீழம்' என்ற கோட்பாட்டை இந்திய மேலாதிக்கத்தின் உதவியுடன் அல்லது மேற்குலகின் ஆதரவுடன் அடையலாம் என்ற நம்பிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்கியது. அதனிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பிராந்திய மேலாதிக்க எதிர்ப்பு என்பன இருக்கவில்லை என்பதுடன் அது பன்மைத்துவ அரசியலை ஏற்றுக்கொள்ளாத படியால் மனித உரிமைகள், ஜனநாயகம் என்பவற்றை மதித்திருக்கவில்லை. அதேவேளை தமிழ் மக்கள் மீதான பேரினவாதத்தின் அடக்குமுறை 1978ஆம் ஆண்டிலிருந்து இராணுவ, பொலிஸ் அடக்குமுறையாக முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்ட ஆயுதப் போராட்ட அமைப்புகளில் ஒன்றாக அது இருந்து வந்தது.

சிங்கள, பௌத்த பேரினவாத நடவடிக்கைகளின் ஒரு உயர்ந்த கட்டமாகவே தமிழ் மக்களுக்கு இன்றைய அழிவு நிறைந்த அவல வாழ்க்கை திணிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பேரினவாதத்திற்கு பதிலிறுப்பதாக முன்வைக்கப்பட்ட நடைமுறை சாத்தியமற்ற "தனித் தமிழீழம்' என்ற கோட்பாட்டினை முன்னெடுத்த சகல தமிழ்த் தேசியவாதிகளும் பொறுப்புக் கூற கடமைப்பட்டவர்கள். அதனால் தமிழ்த் தேசியவாத சக்திகள் அனைத்தும் தமிழ் மக்கள் முன்னிலையில் அவற்றின் கடந்த காலம் பற்றிய சுயவிமர்சனங்களை செத பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பின்னடைவான நிலைமையொன்றுக்குள் தள்ளப் பட்டதற்கு ஏகாதிபத்திய சக்திகளா அல்லது சிங்கள பௌத்த பேரி னவாதமா காரணமென்று கருது கின்றீர்கள்?

மேலாதிக்க அல்லது ஏகாதிபத்திய ஆதரவின்றி தனிநாடு என்பது சாத்தியமில்லை என்பதையும் அவ் வாறான உதவியுடன் தமிழ் மக்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் ஏகாதிபத்தியத்தின், மேலாதிக்க சக்திகளின் அடிமைகளாக்கப்படுவர் என்பதையும் நாம் சுட்டிக்காட்டியுள் ளோம்.

9/11இற்குப் பிறகு ஆயுதப் போராட்டங்கள் மிகவும் வரையறுக் கப்பட்டுள்ளன. அவை பற்றிய புரிதலும் தந்திரோபாயங்களும் உதாசீனம் செயப்பட்டுள்ளன.

ஏகாதிபத்தியத்தில் "பயங்கர வாதத்திற்கு எதிரான போர்' என்ற கோட்பாடும் தென்னாசிய பிராந்திய பெரும் தேசங்களின் பிராந்திய மேலாதிக்கப் போட்டியும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாக தோற்கடித்துள்ளன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பேச்சாளர் கே.பி.30 வருட ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்துவிட்டது அல்லது தோல்வியடைந்துள்ளதாக தெரி வித்துள்ளார். அரசாங்கம் பயங்கரவாதம் தோற் கடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கிறது.

இந்நிலையில் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியது யாதெனில், இந்நிலைமைக்கு காரணமாக தேசிய இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் பிரதான பிரச்சினையாக இருக்கிறது.

பேரினவாத அரசியல் கட்சிகளால் தொடர்ந்தும் சிறுபான்மை, பெரும்பான்மையென்ற பேரினவாத கருத்துகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பாக?

இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்ஸிம், மலையகத் தமிழ் ஆகிய நான்கு தேசிய இனங்களும் ஆதிவாசிகள், பறங்கியர் போன்ற சமூகங்களும் இருக்கின்றன. இது யதார்த்தம். எண்ணிக்கையில் கூடியவர்கள் குறைவானவர்கள் என்று தேசிய இனங்கள் இருக்கலாம். அந்த அடிப்படையில் இங்கு சிறுபான்மை இனங்கள் என்பது மட்டுமல்ல பெரும்பான்மை இனம் என்பதும் இருப்பதாக கொள்ளாத இனங்களுக்கிடையேயான சமத்துவமான ஒரு சூழலே தோற்றுவிக்கப்பட வேண்டும்.

அரசியல் தீர்வை காண்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடமாக இருக்க வேண்டும். அதனை எல்லா அரசியல் கட்சிகளும் இணைந்து காணவேண்டும் என்று பொதுவாக கூறுகின்ற போக்கு இருக்கக்கூடாது. அரசியல் தீர்வை காண்ப தாக திடமாகக் கூறுவதுடன் அதனை காண்பதற்கான நடவடிக்கைகளை ஒரு குறுகிய கால அட்டவணையுடன் செயற்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை என்பது தனியே தமிழ் மக்களின் பிரச்சினை என்பதைவிட தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினையாக விளங்கிக்கொண்டு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு சிங்கள மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியமாகும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு கௌர வமான தீர்வு என்பது ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்தை வெற்றி கொண்டுவிட்டதென்ற மனோநிலையில் காணமுடியாது.

விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதாக கூறிக்கொண்டு தமிழ் மக்களை புண்படுத்தும் வகையிலான தற்போதைய வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடர்பாக?

இராணுவ நடவடிக்கைகளினால் தமிழ் மக்கள் படுகின்ற துயரங்களுக்கு மத்தியில் நடத்தப்படும் வெற்றிக் கொண்டாட்டங்கள் அவர்களை மேலும் விளிம்பு நிலைக்கு தள்ளுவதாகவே இருக்கும். இதனால் ஐக்கிய உணர்வோ, ஒருமைப்பாடோ ஏற்பட முடியாது.

பலர் உயிரிழந்துள்ளனர்! ஆயிரக்கணக்கா னோர் முடமாக்கப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர், கைது செயப்பட்டுள்ளனர் இது பாரிய பேரவலமாகும். தமிழ் மக்கள் பயப்பீதிக்குள்ளாகியவர்களாக இருக்கின்றனர்.

யுத்தத்திற்கு பிந்திய நடவடிக்கைகள் யாவும் இராணுவ நிர்வாகத்திலன்றி சிவில் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பை மட்டும் மையப்படுத்திய நடவடிக்கைகளினால் தமிழ் மக்கள் இயல்பு வாழ்வைப் பெறமுடியாத சூழ்நிலையே தொடரும்.

சுதந்திரமான நடமாட்டமும் கருத்துப் பரி மாற்றமும் அவசியமாவதுடன் சமூக, அரசியல் நடவடிக்கைகளை சுதந்திரமாக செயக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். இதில் ஒரு பன்மைத்துவம் அனுமதிக்கப்பட வேண்டும்.

நாட்டை மீளக்கட்டியெழுப்புவது என்பது வீதிகள், பாலங்கள் போடுவதோ வடக்கு, கிழக்கில் பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் போடுவதோ அல்ல. அபிவிருத்தி பற்றிய தீர்மானங்கள் நடவடிக்கைகளில் மக்களின் பங்களிப்பை உறுதிசெயுமாறு மக்களின் கைகளுக்கு அதிகாரம் கொண்டு செல்லப்பட வேண்டும்.

மீள்குடியேற்றம், மீளமைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் அரசியல்தீர்வு காணப்ப டும் என்பது இழுத்தடிப்பாகவே இருக்கும். அந்நடவடிக்கைகளை செயும்போது சமாந்த ரமாக அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அரசியல் தீர்வு என்பது 13ஆவது திருத்தச் சட்டத்தை பூரணமாக அமுல்படுத்துவதன்றி தேசிய இனங்களுக்கு ஆகக்கூடிய சுயாட்சியை உறுதி செயுமாறு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.

மீள் குடியேற்றம், மீளமைப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக அவர்களின் சொந்த இடங்களுக்கு சென்று குடியேற அனுமதிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கையை மீளமைத்துக் கொள்ள போதிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.

அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய வேண்டும், அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளை நீக்க வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், ஏ9 வீதி மக்களின் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட வேண்டும், போக்குவரத்தில் இருக்கும் பாஸ்முறை நீக்கப்பட்டு நடமாட்டம் உறுதிசெயப்பட வேண்டும், நாடெங்கும் தமிழ்மொழியையும் அரச கரும மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும், வடக்கு, கிழக்கில் பூரணமான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும், அபிவிருத்தியென்ற பேரில் வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட பேரின குடியேற்றங்களை செய்வதைக் கைவிட வேண்டும்.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

  • கருத்துக்கள உறவுகள்

ஏகாதிபத்தியத்தில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கோட்பாடும் தென்னாசியப் பிராந்திய பெரும் தேசங்களின் பிராந்திய மேலாதிக்கப் போட்டியுமே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாக தோற்கடித்துள்ளது என்று புதிய ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான இ.தம்பையா தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு என்பது 13ஆவது திருத்தச் சட்டத்தை பூரணமாக அமுல்படுத்துவதன்றி தேசிய இனங்களுக்கு ஆகக்கூடிய சுயாட்சியை உறுதி செயுமாறு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.

மீள் குடியேற்றம், மீளமைப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக அவர்களின் சொந்த இடங்களுக்கு சென்று குடியேற அனுமதிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கையை மீளமைத்துக் கொள்ள போதிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.

அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய வேண்டும், அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளை நீக்க வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், ஏ9 வீதி மக்களின் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட வேண்டும், போக்குவரத்தில் இருக்கும் பாஸ்முறை நீக்கப்பட்டு நடமாட்டம் உறுதிசெயப்பட வேண்டும், நாடெங்கும் தமிழ்மொழியையும் அரச கரும மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும், வடக்கு, கிழக்கில் பூரணமான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும், அபிவிருத்தியென்ற பேரில் வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட பேரின குடியேற்றங்களை செய்வதைக் கைவிட வேண்டும்.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

ஒன்றும் வேண்டாம் இதிலுள்ள சாதாரண விடயங்களையாவது சிறிலங்கா நடைமுறைப்படுத்துமானால் பெரிய விடயமாகும். எங்கே இப்போது பயங்கரவாதம் முடிந்து விட்டதே. பிறகென்ன தயக்கம். புதியஜனநாயகம் பேசுவோரே எங்கே உங்களால் ஒரு துரும்பையாவது பாதிக்கப்பட்டோருக்காக நகர்த்தமுடியுமானால் நன்மையே. பார்ப்போம்.

வாழ்த்துகள் !

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன தயக்கம். புதியஜனநாயகம் பேசுவோரே எங்கே உங்களால் ஒரு துரும்பையாவது பாதிக்கப்பட்டோருக்காக நகர்த்தமுடியுமானால் நன்மையே.

கழுதைக்கு தெரியுமா

கற்பூரவாசனை???

சொல்பவன் சொன்னால்

கேட்பவனுக்கு மதியென்ன????

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.