Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!

Featured Replies

இந்த கட்டுரையில் இது என்ன புதுசா இருக்கு யாராவது விளக்கம் கொடுங்கப்பா :icon_idea:

எல்லோரும் ஒண்ணிக்கு இக்க வேணுமாம்

மட்டு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகனின் கடிதம்!

மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் என்பதனால் இம்மடல் வழியாக வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் மட்டில் கூடிய கரிசனை செலுத்துவீர்கள் என நான் திடமாகவே நம்புகின்றேன்.

இலங்கைத்தீவில் சுதந்திரத்திற்கு பின்னதான காலப்பகுதியில் பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்கள் பல வேளைகளில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அகிம்சைப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் ஏறக்குறைய சுதந்திரமடைந்து முப்பது வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டது. கடந்த 30 வடங்களுக்கு மேலான காலப்பகுதியில் சிறிது சிறிதாக நமது தேசம் வளர்ந்து இறுதியில் ஒரு தேசத்திற்கு வேண்டிய பெரும்பாலான கட்டமைப்புகளோடு தலைநிமிர்ந்து நின்றது. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத அளவுக்கு நமது விடுதலைப்போராட்டம் பல சாதனைகளை செய்தது. சரித்திரங்களையும் படைத்தது. இதற்கு நமது தேசியத்தலைவர் முதன்மைக்காரணியாக இருந்தார். அவரது உறுதி தளராத கொள்கைக்கும், அயராத உழைப்பிற்கும் சர்வதேசமெங்கிலும் இருந்து எம்மக்கள் பலம் சேர்;த்தார்கள்.

ஆனால், இன்று யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு நாம், சிங்களத்தினதும் சர்வதேசத்தினதும் சதியில் சிக்குண்டு சிதைந்து கிடக்கின்றோம். தலைமைகளை இழந்து தாங்க முடியாத வேதனையில் நாம் இன்று நிற்கின்றோம். சரித்திர நாயகர்களை இழந்தும் ஆயிரக்கணக்கிலான மக்களின் உயிர்களை இழந்த நிலையிலும் தான் சர்வதேசத்தின் பார்வை நமது பக்கம் திரும்பியுள்ளது. ஆயுத ரீதியிலான வரலாற்று வெற்றிகளை நாம் கண்டபோது நடந்திராத சில சம்பவங்கள் எம்மக்கள் இரத்தம் சிந்தியபோது நடந்துள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆயுதப்போர் ஒன்று மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தரும் என்கின்ற வரலாற்றுக்காலத்தை கடந்த நிலையில் இன்று நாம் வாழ்கின்றோம். உலகமும் அந்த நிலைக்கு வந்துவிட்டது.

வரலாற்றில் இப்படியான ஒரு நெருக்கடியை நாம் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் பேசப்படுகின்றது. விமர்சனங்கள் பல எழுகின்றன. வரலாறு நமக்கு வழங்காத சில சாதகமான நிலைமைகள், நமக்குள் ஏற்பட்ட துரோகத்தனங்கள் எனப்பலவற்றை நாம் கூறிக்கொண்டு போகலாம். இவகைளைப்பற்றி இவ்வேளையிலே நாம் ஆராய்வதனை விடுத்து நமது அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு அமையவேண்டும், அடுத்து நாம் என்ன செய்யவேண்டும், அதனை எப்படிச் செய்யப்போகின்றோம் என்பதே நம் முன் இன்று எழுந்துள்ள பெரிய கேள்விகளாக இருக்கின்றன.

நம் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேச அளவில் பேசப்படுகின்ற நிலைக்கு தற்போதூன் வந்துள்ளது எனலாம். அதற்கு நமக்கு முப்பது வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. அந்தளவுக்கு இராஜதந்திர ரீதியில் நாம் பலவீனப்பட்டு இருந்துள்ளோம்.

நமது வீர மறவர்களின் கனவை நாம் நனவாக்க வேண்டும். எம்மக்களுக்கான உரிமையை நாம் எம் தலைமையின் விருப்பப்படி பெற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான ஏதுவான சில வழிமுறைகள் சிலவற்றை இன்று காணமுடிகின்றது. அதற்கு ஆயுதப்போர் மட்டும் தான் ஒரே வழி என்ற கருத்தினை நாம் மீண்டும் ஒருதடவை மீள்பார்வை செய்யவேண்டிய நிலையில் இருகின்றோம். அதாவது, எம்மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஆயுதவழி ஒரு உந்துதலை ஏற்படுத்தும் என்பதோடு அதனை விடவேகமாக ராஜதந்நிதர ரீதியிலான நகர்வுகள் அமையவேண்டும். இன்றுள்ள உலக நிலைமைகளையும் ஒருதடவை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் வாக்கெடுப்பு நமக்கு சாதகமாக இல்லை தான். இதில் வெற்றிதோல்வி என்பதனை விடுத்து நமது பிரச்சினை ஜ.நா. வரைக்கும் வந்துள்ளது என்பதில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அத்தோடு மட்டுமல்ல, சிறிலங்கா அரசுக்கு எதிராக வாக்களித்த நாடுகளையும், ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் நாம் பார்க்கவேண்டும். உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கக்கூடிய அமெரிக்கா தலைமையிலான அணி இன்று தமிழர்களின் பக்கம் ஓரளவு இருக்கின்றது என்பதனையிட்டு நாம் ஆறுதலடையவேண்டும். இன்றுள்ள நிலையில் இவைதான் நமக்கு சாதகமான நிலை. போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக சிங்களம் மார்தட்டி வெற்றிக்கழிப்பில் இருக்கி;ன்ற நிலையில் சிங்கள தேசத்தின் அடுத்த கட்ட நகர்வையே இன்று சர்வதேசம் எதிர்பார்த்துள்ளது. சிங்களம் எம் மக்களுக்கு கௌரவமான ஒரு தீர்வை முன்வைக்காது என்பது நம்க்குத்தெரியாத ஒன்றல்ல. ஆனால், அது சர்வதேசத்திற்கு தெரியும் காலம் வரும் வரையில் நாம் உறுதி தளராத மனவுறுதியுடன் பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்க அதற்கு முன்னதாக நாம் சிங்களத்தின் சிறைக்குள் அகப்பட்டுக்கிடக்கும் எம் மக்களைப்பற்றியும் எம் போராளிகள் பற்றியும் உடனடியாக கரிசனை செய்யவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். போதிய உணவு இன்றியும் சரியான மருத்துவ வசதிகள் இன்றி மக்களும் போராளிகளும் சிங்களத்தின் சிறையில் அகப்பட்டு கிடக்கின்றார்கள். விடுதலைத்தாகத்தோடு களமாடிய நம் உறவுகள் இன்று சிங்களப்படையினரின் கூட்டிற்குள் அகப்பட்டு தினம் தோறும் அவலப்படுகின்றார்கள். காயப்பட்டிருந்த அவர்களின் நிலை என்ன? வேறு வழியின்றி சரணடைந்த போராளிகள் பற்றி எந்த தகவல்களும் இல்லாத நிலையில் நாம் வெட்டிப்பேச்சு பேசி காலத்தை கடத்துவதனைவிடுத்து ஆக்கபூர்வமான செயற்படுகளை இன்னும் காலம் தாழ்த்தாது செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தப்பணிகளில் தளத்திலுள்ள எங்களைவிட புலத்திலுள்ள உங்களால் செய்யப்படவேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன. இவ்வேளையில் நாம் நமக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளையும், விமர்சனங்களையும் புறந்தள்ளி ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். அப்போதுதான் சாவின் விளிம்பிலுள்ள நம் உறவுகளை காப்பாற்றமுடியும். இதற்கு சர்வதேசத்தின் உதவிகளைப்பெறக்கூடிய வழிகளை ஆராய்ந்து செயற்படவேண்டும்.

இங்கு படையினருடன் போராடி அவர்களுக்கு உயிர் இழப்புக்களை ஏற்படுத்துவது பெரியகாரியமல்ல. அதனால் எதுவுமே இப்போதைக்கு நடக்காது. கடந்த இரு தசாப்தகாலத்தில் படையினருக்கு எல்லாவழிகளிலும் நாம் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம். அதனால் என்ன நடந்தது?

இன்றுள்ள நிலையில் முதலில் பாதிக்கப்பட்டுள்ள நாம் உறவுகளை பாதுகாக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் பத்மநாதன் அண்ணர் சில முக்கியமான செயற்பாடுகளிலும் ராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிகின்றேன். தற்போதுள்ள நிலையில் அவரின் கரங்களைப் பலப்படுத்துவோம். வெளியுறவுத்துறைக்கு பொறுப்பாக தேசியத்தலைவர் அவர்கள் பத்மநாதன் அண்ணர் அவர்களை நியமித்து அவர் செயற்பட்டு வந்தநிலையில் தொடர்ந்தும் அவரது பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுக்க நாம் ஒத்துழைப்பது தவறல்ல. எனவே அவரின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம். அதற்கு பின்னர் முதலில் என்ன செய்யவேண்டும் என்று அடையாளம் கண்டுகொண்டு அடுத்த கட்டம் பற்றி சிந்திப்போம். அதனால், நாம் தலைவரின் பாதையிலிருந்து விலகிவிட்டதாக நீங்கள் நினைக்காதீர்கள். அவரின் வழியில் தொடர்ந்து பயணிக்க என்றும் நாம் தயாராகவே உள்ளோம். எந்த மக்களுக்காக நாம் களமாடினோமோ அந்த மக்கள் இன்று நம்மீது சிலவிடயங்களில் வெறுப்புணர்வுகளையும் காட்ட முற்படுகின்றார்கள். காரணமறிந்து செயற்பட நாம் முன்வரவேண்டும். அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் போது நாங்களும் எங்கள் முடிவுகளை மாற்றி ஒன்று சேர்ந்து புலத்திலுள்ள உங்களுக்கு களமாடி பலம் சேர்ப்போம் என்பதனை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகின்றேன். அத்தோடு களத்திலுள்ள மக்களின் தியாகங்களினால்த்தான் புலத்திலுள்ள மக்களை ஒன்றுசேர்க்கமுடியும், எழுச்சி கொள்ளச் செய்யமுடியுமென்றால் அதற்கு எம்மக்கள் தயாராகவே உள்ளார்கள்.

இறுதியாக ஒன்றை ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன். மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் முரண்பட்டு தற்போதுள்ள கட்டமைப்புக்களை சிதைத்து மக்கள் மனங்களிலிருந்து புறக்கணிக்கப்படுவோமாக இருந்தால் அது நாம் எமது தலைமைக்கும் எம் மக்களுக்கும் செய்யும் வரலாற்றுத்துரோகமாகவே இருக்கும். பொறுப்புணர்வுடன் முடிவுகளை எடுத்து நமது தலைமை காட்டிய பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம். நம் தலைமையை நாம் உண்மையாகவே நேசிப்பவர்களாக இருந்தால் ஒன்றுபட்டு எம்மக்களுக்கான உரிமையை மீட்டெடுப்போம்.

என்றும் அன்புடன்…

——

(பா.தயாமோகன்)

Thanks www.orunews.com

Edited by Bond007

தேசிய தலைவருக்கே வழிகாட்டிறாங்கப்பா...??!

வழுதி என்ற எல்லாம் அறிந்த ஞானி அவர்களே..

உங்களின் வாய்ப்பாட்டை "முன்னால் செல்லுங்கள் நான் பின்னால் வருகிறேன்" என்று தலைவர் சொன்னதாகச் சொல்லிக் கொள்கிறீர்கள்.

தலைவரின் வழியில் தலைவரில் பாதையில் வரிந்து நின்ற போராளிகளுக்குத்தான் தெரியும் தலைவர் எத்தனையோ சமர்க்களங்களை தானே முன்னின்று நடத்த துடித்ததும் போராளிகளின் தளபதிகளின் பலமான வேண்டுகோள்களைக் கூட தலைவர் ஏற்க மறுத்து கள மாடிய சரித்திரமும் உண்டு.

ஒரு விடயத்தை தெரிந்து கொண்டு எழுத வேண்டும். நேராக எழுதுவதாக எதிர்மறைக் கருத்துக்களை ஊட்டும் புதினத்தின் செயலை கண்டிக்கின்றேன்.

தலைவரின் கொள்கைகளை அவரின் தலைமைதான் காத்தது என்றால் அதை எவரும்.. மறுதலிக்க முடியாது.

நான் நினைக்கவில்லை.. தலைவரை பிரதியீடு செய்யக் கூடிய எவரும் எனி வருவார்கள் என்று. ஆனால் தமிழர்களைப் பிரதிநிதிப்படுத்த ஆட்கள் வரலாம். ஆனால் அவர்கள் தலைவர் போல் இருக்கமாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம்..! :icon_idea:

என்னைப் பொறுத்தவரை சிறீலங்காவில் எனி ஜனநாயமும் இல்லை சுதந்திரமும் இல்லை தமிழர்களுக்கு..!

Edited by Panangkai

தலைவர் வீர மரணமடைந்து விட்டார் என நம்பும் உறவுகளே

நீங்கள் தலைவருக்கு செய்ய வேண்டிய உண்மையான அஞ்சலி அழுவதும் மற்றவர்களை நம்பவைத்து அழவைப்பதுமல்ல. தலைவர் உங்களிடம் ஒப்படைத்த தாயக மீட்பினை முழு மூச்சுடன் முன்னெடுப்பதும் முகாங்களில் அவலங்களின் மத்தியில் வாடும் மக்களையும் போராளிகளையும் காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுதலுமேயாகும். அதுவே நீங்கள் உண்மையிலேயே எமது தலைவன் மீது வைத்துள்ள பாசத்திற்கும் மரியாதைக்கும் சான்றாகும் . அதை விடுத்து தலைவர் உயிரோடுள்ளார் என்போரை துரோகிகளாக்குவதும் அதன்மூலம் மக்கள் போராட்டங்களை சீர்குலைப்பதுமே உண்மையான துரோகத்தனங்களாகும்.

நாங்கள் தலைவர் உயிரோடுள்ளார் என நம்புகின்றோம். அது தலைவர் மீளவும் போராடி தமிழீழத்தை மீட்டுத்தரவேண்டும் என்பதற்காக அல்ல. எதற்காக தலைவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தியாகம் செய்தாரோ அந்த சுதந்திர தமிழீழத்தை எமது தலைவர் கட்டாயம் காணவேண்டும். தாயக விடுதலைப்போரில் காவியமான போராளிகள் மக்களின் ஆசியோடு தமிழீழத்தை ஆட்சிசெய்யவேண்டும் என்ற நோக்கோடுதான் .

அதற்கான பொறுப்பை புலம்பெயர் தமிழர்கள் தோளில் தாங்கிவிட்டோம். தொடர்ந்து போராடுவோம். தமிழீழத்தை அடைவோம். அதை எமது தலைவனுக்கு பரிசளிப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

மீளவும் சொல்கின்றேன்

தமிழனாக பிறந்ததிற்கு தலைவர் தன் கடமையை செய்துவிட்டார். நாம்தான் இன்னும் இன்னும் அவரின் தலையில் பொறுப்பை கட்டத்துடிக்கின்றோம்

தற்போதைய தேவை எம்மக்களிற்கான விடிவு அதை நாம்தான் பெறவேண்டும். கட்டாயம் அவர் தன் கடமையை காலநேரம் சரியாக அமையும்போது செய்வார். அதுவரை நாம் எமது கடமையை செய்வோம்

தலைவர் வீர மரணமடைந்து விட்டார் என நம்பும் உறவுகளே

நீங்கள் தலைவருக்கு செய்ய வேண்டிய உண்மையான அஞ்சலி அழுவதும் மற்றவர்களை நம்பவைத்து அழவைப்பதுமல்ல. தலைவர் உங்களிடம் ஒப்படைத்த தாயக மீட்பினை முழு மூச்சுடன் முன்னெடுப்பதும் முகாங்களில் அவலங்களின் மத்தியில் வாடும் மக்களையும் போராளிகளையும் காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுதலுமேயாகும். அதுவே நீங்கள் உண்மையிலேயே எமது தலைவன் மீது வைத்துள்ள பாசத்திற்கும் மரியாதைக்கும் சான்றாகும் . அதை விடுத்து தலைவர் உயிரோடுள்ளார் என்போரை துரோகிகளாக்குவதும் அதன்மூலம் மக்கள் போராட்டங்களை சீர்குலைப்பதுமே உண்மையான துரோகத்தனங்களாகும்.

நாங்கள் தலைவர் உயிரோடுள்ளார் என நம்புகின்றோம். அது தலைவர் மீளவும் போராடி தமிழீழத்தை மீட்டுத்தரவேண்டும் என்பதற்காக அல்ல. எதற்காக தலைவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தியாகம் செய்தாரோ அந்த சுதந்திர தமிழீழத்தை எமது தலைவர் கட்டாயம் காணவேண்டும். தாயக விடுதலைப்போரில் காவியமான போராளிகள் மக்களின் ஆசியோடு தமிழீழத்தை ஆட்சிசெய்யவேண்டும் என்ற நோக்கோடுதான் .

அதற்கான பொறுப்பை புலம்பெயர் தமிழர்கள் தோளில் தாங்கிவிட்டோம். தொடர்ந்து போராடுவோம். தமிழீழத்தை அடைவோம். அதை எமது தலைவனுக்கு பரிசளிப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே நடந்தவை கசப்பானவையானாலும் நடந்தவை நடந்தவையே....... ஆகவே இனி நடப்பது பற்றி சிந்திப்பதே சிறந்தது!

தலைவர் இருந்தாலும் அதை மறைக்க வேண்டிய ஒரு கடமை நம்முன்னே இருக்கின்றது தலைவனின் இலட்சியம் வெல்வதே எமது ஆசை.

தடயங்கள் அவ்வப்போது எமக்கு தரப்படுகின்றன ஆகவே உண்மைகளை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது ஆகவே. தற்போதைக்கு தலைவரை மறைப்பதற்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள்

வருகின்ற கார்த்திகை 27 எல்லாவற்றிற்கும் பதில் தரும். அதுவரை நான் நமது வரலாற்றுக் கடமையை சரிவர செய்வோம்.

அவர் சொன்னார்... இவர் சொன்னார் என்று கதிகலங்க வேண்டாம். அவரது வழிகாட்டல் எப்பொழுதும், எம்மை வழிநடத்தும்.

எனக்கொரு சந்தேகம்...

தலைவரை கொன்றுவிட்டதாக அறிக்கைவிட்ட சிங்களமே குழம்பிப்போய் நிற்கும்போது, நம்மவர்களில் சிலர் மட்டும் ஏன் இந்த விதண்டாவாதப் போக்குடன் இருக்கின்றார்களோ தெரியவில்லை???!!!

quote name='ragunathan' date='Jun 10 2009, 06:12 AM' post='522198']

பலர் சொல்லிவிட்டார்கள்...அவர் இறந்துவிட்டார் என்று! ஆனாலும் மனம் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று விடாப்பிடியாக நிற்கிறது. நான் விரும்பினாலும்கூட அது விடுவதாயில்லை. எத்தனையோ முறை முயன்று பார்த்துவிட்டேன், வேண்டுமென்றெ எனக்கு நானே "தலைவர் இனி இல்லை" என்று சொல்லியும்பார்த்துவிட்டேன். ஆனால் எதையுமே மனம் நம்பத் தயாராக இல்லை. திரும்பத் திரும்ப அவர் இன்னும் இருக்கிறார் என்று சுற்றிச் சுற்றி வருகிறது. பின்னர் ஒருவாறு என் முன்னால் அமர்ந்துகொண்டே, "நீ யோசிக்க வேண்டாம், தலைவர் எங்களை விட்டுப் போகவில்லை" என்று எனக்கே அறிவுறையும் ஆறுதலும் கூறுகிறது .

இனி எவராலும் கூட, ஏன், என்னாலும் கூட எனது மனதைத்திருத்த முடியாது! அந்த எண்ணம் எனக்கு மூளை பிழைக்கும் வரை என்னுடனேயே இருக்கும். இது சரி, பிழை, யதார்த்தம், உணர்வு....என்ற எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டுத் தொடர்ந்து எனக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

ஒன்று மட்டும் விளங்குகிறது ! மனிதர்களுக்குத்தான் சாவு ! அது கடவுளுக்கு வருவதில்லை !இது மனதுக்குத் தெரிகிறது...பாலாய்ப்போன மூளைக்குத் தெரியவில்லையே !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

வருகின்ற கார்த்திகை 27 எல்லாவற்றிற்கும் பதில் தரும். அதுவரை நான் நமது வரலாற்றுக் கடமையை சரிவர செய்வோம்.

அவர் சொன்னார்... இவர் சொன்னார் என்று கதிகலங்க வேண்டாம். அவரது வழிகாட்டல் எப்பொழுதும், எம்மை வழிநடத்தும்.

எனக்கொரு சந்தேகம்...

தலைவரை கொன்றுவிட்டதாக அறிக்கைவிட்ட சிங்களமே குழம்பிப்போய் நிற்கும்போது, நம்மவர்களில் சிலர் மட்டும் ஏன் இந்த விதண்டாவாதப் போக்குடன் இருக்கின்றார்களோ தெரியவில்லை???!!!

நண்பர்களே வீணான வதந்திகளை பரப்பாதீர்கள் அத்தோடு வீணாண எதிர்பார்புகளையும் கைவிடுங்கள். கார்த்திகை27 ல் தலைவர் வர வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை. நாம் 30 ஆயிரத்துக்கு அதிகமான மக்களையும் 7ஆயிரத்துக்கு அதிகமான போராளிகளையும் 2 வருடத்திற்குள் புதைத்திருக்கிறோம்..... அதையெல்லாம் ஒரு அரசியல் தளத்தை நாம் அமைப்பதற்காகவே அந்த விலைகளை கொடுத்தோம் அதற்கான சான்றுகள் வராதிடத்து அரசியல் தளங்களை நாம் அமைக்காவிடத்து தலைவர் தோன்றி எமக்கு இன்னமும் பின்னடைவுகளை தோற்றுவிக்லாமே தவிர ஆவது ஒன்றுமில்லை. ஆகவே இனிமேல் காலத்தில் தலைவர் தோன்றாமல் கூட போகலாம் ஆனால் எமது போராட்டம் ஒய்ந்திடலாகாது என்பதை நாம் போராடியே காட்ட வேண்டும். சர்வதேச அரசியல் தளமொன்றை அமைப்பதற்கு எம்மால் ஆன அனைத்தையும் செய்வோம். உரியவர்களே தலைவரை மறைப்பதற்கு தம்மாலனவற்றை செய்கின்றார்கள் அவர்களை துரோகிகளாக்காது பார்த்துக்கொள்வோம் அவர்களுக்கும் எமது கரங்களை எட்டும்வரை நீட்டுவோம்..... வீணாண கோபங்களால் வார்த்தைகளை கொட்டி ஆவதற்கு ஒன்றுமில்லை. சர்வதேச அரசியல் தளம் அமைக்க நாம் போராடுவோம் ஒவ்வொரு புல தமிழரும் இனி புலிகளே எனும் நிலையை நாம் தோற்றவேண்டும் எமது ஆயுதம் வார்தை கணங்களாகவும் பேனாக்களாகவும் இருக்கட்டும். அடுத்த சந்ததிக்கு போதிய அறிவுரைகளுடன் களத்தில் நிறுத்துவோம். சத்தியம் எம்பக்கம் இருக்கின்றது...... அகவே சந்தேகம் வேண்டாம் வெற்றியும் நமதே.

ஆராஜகங்கள் தலைதூக்கும் போது புதிய அரசுகள் தோன்றும் அதை யாராலும் தடுக்க முடியாது. தற்போதைய உலகமாற்றம் எமக்கு சாதகமாக இருக்கின்றது வீணாணன வாதங்களை புறந்தள்ளி நல்லதை பேசி நன்மையே செய்வோம் வாரீர்.

leader_20090610004.jpg

கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.

தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?...

அல்லது - 'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?...

அல்லது - வெளிநாட்டுப் பயணங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா?...

அல்லது - உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?...

அல்லது - கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?..

அல்லது - தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?..

எனக்கு எதுவும் தெரியாது.

ஆனால் - கடைசிக் காலத்தில் - குழப்பங்கள் ஏதுமற்று அந்த மனிதர் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார் என்பதை என்னால் உணர முடிகின்றது.

தி.வழுதி

புதினம்

:( தலைவர் நினைத்திருப்பார் உங்களை மாதிரி ஆய்வு எழுதி எழுதியே போராட்டம் இப்படி போய்விட்டுதே என்று தான் நினைத்திருப்பார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.