Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறு வெற்றி்டங்களை விட்டுச் செல்வதில்லை

Featured Replies

`புதியன புகுதலும் பழையன கழிதலும்` என்பது முன்னெப்தையையும் விட தமிழ் மக்கள் தற்சமயம் தாரக மந்திரமாக கொள்ளவேண்டி அரசியல் அரிச்சுவடியாக போயுள்ள அவலத்தையும் தண்டனையையும் வரலாறு எமக்கு திணித்துள்ளது.

நான்காவது `ஈழப்போர்` முடிவு மூன்று லட்சம் எம் தமிழ் மக்களை முகாம்களுக்குள் முடக்கியுள்ளது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை அரசியல் கைதிகளாக அரச படையினர் இன்னும் உயிருடன் வைத்துள்ளனர். வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அரசியல் சூனியத்துக்குள் தமிழ் மக்கள் மூழ்கியுள்ள இன்றைய சூழலில் நாம் நடந்து வந்த பாதையை மட்டும் அல்ல எமது இலக்கு குறித்தும் மீள்பார்வைகள் செய்ய வேண்டியுள்ளது.

மூன்று லட்சம் மக்களினதும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அரசியல் கைதிகளின் எதிர்காலத்தை விட, அவர்களின் இயல்பு நிலையான வாழ்வைவிட, அவர்களின் வருகைக்காக ஏங்கிக் காத்திருக்கும் வன்னி மண்ணைவிட `புலம் பெயர்` தமிழர் அரசியல் வேறொன்றில் அக்கரை கொள்ளுமாயின் `அவர்கள்` குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.

அடுத்து, இலங்கை பாராளுமன்ற சட்டவாக்கத்துக்குள் அரசியல் செய்யும் தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் வெட்டிப்பேச்சில் காலத்தைக் கழிக்க இனியும் என்ன தேவையுள்ளது?

அரசியல் திர்வுக்கு பின்னால்தான் வன்னி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்களாயின் அந்த அரசியல் தீர்வின் பலான்கள் மக்களை போய் சென்றடையாது.

ஆக, தமிழ் தேசிய கூட்டமைப்பு முகாம்களில் முடங்கியுள்ள மூன்று இலட்ச மக்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு கொண்டு செல்ல கூடிய வகையில் தனது சமகால அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஊடகங்களுக்கு சூடான செய்திகளை கொடுக்க மட்டும் கொழும்பு வாழ்வை பயன்படுத்தாது மக்கள் மீள்குடியேற்றத்துக்கு ஆளும் அரசுக்கு `ஆக்கபூர்வமான அழுத்தத்தைக்` கொடுக்க முன் வர வேண்டும்.

`ஆக்கபூர்வமான அழுத்தம்` என்பது வெறும் எதிர்ப்பரசியல் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

எமது தமிழ் கட்சிகளின் பிரமுகர்களில் பலர் சட்டம் அறிந்த சட்டத்தரணிகள்.

நடந்து முடிந்த கொடுமைகளுக்கு அவர்களாலேயே நீதிதேடமுடியவில்லையென்றால் பிறகு இவர்களின் கல்வியறிவால் என்ன பயன்?

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியானது விடுதலைபுலிகளை சார்ந்த கட்சியாகவே அரசாங்கம் நினைத்து செயற்படுகின்றது ஆகையால் இவர்களால் எதுவும் செய்யமுடியாது இவர்களும் இலங்கையரசின் பயங்கரவாதிகளின் பெயர் பட்டியல்களில் இருப்பதால் இந்த கூட்டமைப்பால் எதுவும் செய்யமுடியாது அறிக்கைகளை தவிர

மீண்டும் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமானால் ஆளுங்கட்சியுடன் இணைந்து செயற்படவேண்டும் அவர்களுடன் சேர்ந்தால் நம் மக்களால் இவர்கள் தேச துரோகிகளாக ஆக்கபடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியானது விடுதலைபுலிகளை சார்ந்த கட்சியாகவே அரசாங்கம் நினைத்து செயற்படுகின்றது ஆகையால் இவர்களால் எதுவும் செய்யமுடியாது இவர்களும் இலங்கையரசின் பயங்கரவாதிகளின் பெயர் பட்டியல்களில் இருப்பதால் இந்த கூட்டமைப்பால் எதுவும் செய்யமுடியாது அறிக்கைகளை தவிர

மீண்டும் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமானால் ஆளுங்கட்சியுடன் இணைந்து செயற்படவேண்டும் அவர்களுடன் சேர்ந்தால் நம் மக்களால் இவர்கள் தேச துரோகிகளாக ஆக்கபடுவார்கள்

தமிழ்தேசியக் கூட்டமைப்பும் இலங்கையின் பயங்கரவாதப் பட்டியலில இருக்கா? :icon_idea:

தமிழ்தேசியக் கூட்டமைப்பும் இலங்கையின் பயங்கரவாதப் பட்டியலில இருக்கா? :icon_idea:

இதுவரைக்கும் பயங்கரவாதப்பட்டியலில் இல்லை

கேட்டா போடாமலா இருபாங்கள் பெருமக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசியக் கூட்டமைப்பும் இலங்கையின் பயங்கரவாதப் பட்டியலில இருக்கா? :icon_idea:

இருக்கு ஆனால் வெளியில் சொல்லப்படவில்லை [இலங்கை அரசின் புலனாய்வு துறையின் பட்டியல்]

அண்மையில் வன்னியில் கைது செய்யப்பட்ட பாராழுமன்ற உறுப்பினர், இனம் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியானது விடுதலைபுலிகளை சார்ந்த கட்சியாகவே அரசாங்கம் நினைத்து செயற்படுகின்றது ஆகையால் இவர்களால் எதுவும் செய்யமுடியாது இவர்களும் இலங்கையரசின் பயங்கரவாதிகளின் பெயர் பட்டியல்களில் இருப்பதால் இந்த கூட்டமைப்பால் எதுவும் செய்யமுடியாது அறிக்கைகளை தவிர

மீண்டும் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமானால் ஆளுங்கட்சியுடன் இணைந்து செயற்படவேண்டும் அவர்களுடன் சேர்ந்தால் நம் மக்களால் இவர்கள் தேச துரோகிகளாக ஆக்கபடுவார்கள்

ஆளும் கட்சிக்கு எதிரான ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒரு இணக்கத்துக்கு வருவதன் மூலம் ஆளும் கட்சிக்கு `ஆக்கபூர்வமான` அழுத்தத்தைக் கொடுக்கலாம். இலங்கையில் உள்ள ஏறக்குறை அனைத்து சிறுபான்மையின கட்சிகளும் ஆளும் கட்சிக்கு எதிரான நிலையிலேயே உள்ளன. அதனை சரிவர பயன்படுத்தி அரசியல் பேரம்பேசும் சக்தியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீவு தழுவியதாக பெருப்பித்துக் கொள்ளவேண்டும்.

அடுத்த ஜனாதிபதி அல்லது பாராளுமன்ற தேர்தலில் ஒரு தீர்மானகரமான சக்தியாக தமிழர் தரப்பு மற்றைய சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து எழுந்தால் `அரசியல் கைதிகளாக` உள்ள எம்மவர் அனைவருக்கும் ஒரு விடிவு கிட்டும்.

  • தொடங்கியவர்

எமது தமிழ் கட்சிகளின் பிரமுகர்களில் பலர் சட்டம் அறிந்த சட்டத்தரணிகள்.

நடந்து முடிந்த கொடுமைகளுக்கு அவர்களாலேயே நீதிதேடமுடியவில்லையென்றால் பிறகு இவர்களின் கல்வியறிவால் என்ன பயன்?

வணங்காமுடி,

தமிழர் உரிமைகள் சட்டம் தெரிந்த வின்னர்களைவிட அரசியல் தெரிந்த தலைமைகளால் மட்டுமே பெற்றுக் கொடுக்க வாய்ப்புள்ளது.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் யாழ் கருத்து களத்தில் `சமாதானம்` தமிழர் ஆயுதப்போராட்டத்தில் வகிக்கும் பங்கு குறித்து விரிவாக விவாதித்தும் இருந்தேன். அப்போது, நாரதர், குறுக்காலபோவான் இன்னும் பலர் அந்த விவாவத்தில் ஈடுபட்டோம்.

இப்போது சாத்திரி, சாந்தி ரமேஸ், நெல்லையன் போன்றோர் ஒரு புதிய திசையில் தமது பர்வையை திருப்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது

காத்திரமான விவாதங்கள் இன்னும் எம்முள் நடக்காது இருப்பது ஆரோக்கியமானது அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.