Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில், வெளிநாட்டுப்பிரசைகளாகவே நாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில்

வெளிநாட்டுப்பிரசைகளாகவே நாம்

நடந்துமுடிந்த ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலின்பின்னான விழைவுகளால் என்மனதில் எழும் சில வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும்....

அதேநேரம் எமது அடுத்த ஐபோப்பாவில் நடக்கவிருக்கும் அல்லது

நாம் பங்குபற்றவிருக்கும் தேர்தல்கள் சம்பந்தமாக நாம் செய்யவேண்டியவை சம்பந்தமாக ஆராய்வதற்கும்

அல்லது அது சம்பந்தமான கருத்தாடல் வேண்டும் என்பதற்காகவும்....

இதனை தனி ஆய்வாக இங்கு முன்வைக்கின்றேன்

அதேநேரம்

எனது கருத்துக்களையும் மன வருத்தங்களையும் எனது எதிர்பார்ப்புக்களையும் முதல் இங்கு வைக்கமுயல்கிறேன்

நேரம்கிடைக்கும்போதெல்லாம் எழுதுவேன்

எனது கேள்விகள்:-

எம்மில் எவ்வளவு பேர் ஐரோப்பிய பிரசாஉரிமை வைத்திருக்கின்றோம்

அதை எதற்காக எடுத்தோம்

கடவுச்சீட்டுக்காக....???

திருப்பிஅனுப்பமாட்டார்கள் என்பதற்காக.....

அல்லது ஐரோப்பிய பிரசை என்று வீம்பு பண்ணுவதற்காக....

அல்லது ஐரோப்பிய பிரசையாக வாழ்வதற்காக...

அல்லது இதை வைத்துக்கொண்டு ஈழத்திற்கு ஏதாவது செய்யலாம் என்பதற்காக....

என...........???

முதலில் இது போன்ற கேள்விகளுக்கு விடைதேவை.

அடுத்து

இப்பிரசா உரிமையை எமக்குத்தரும் நாடுகள் எமக்கு எதற்காக அவற்றை தருகின்றன...?

அல்லது அவற்றை தந்துவிட்டு என்ன எதிர்பார்க்கின்றன...?

அல்லது நாம் யார் என்று கணக்கில் வைக்கின்றன...?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது

இவற்றை பெறும் நாம்

அந்நாடுகள் எதிர்பார்ப்பதுபோல் இருக்கின்றோமா...?

அல்லது எமது தாய்நாடு எதிர்பார்ப்பதுபோல் இருக்கின்றோமா?

அல்லது இரண்டுக்கும் இடையில் பாலமாக இருக்கின்றோமா...?

அல்லது இரண்டுக்கும் துரோகம் செய்து இரண்டும் கெட்டு வாழ்கின்றோமா..?

அல்லது இதனுடைய அதாவது தேசப்பற்று என்பதன் அர்த்தம் புரியாது தூங்குகின்றோமா....???

அதாவது இந்த நாடுகளில் நாம்

பிரசா உரிமையை வைத்துக்கொண்டு....

இந்த மண்ணின் மைந்தர்கள் அனபின்பும்.....

வெளிநாட்டுப்பிரசை என்ற நினைப்பில்

எமக்கு தரப்பட்ட அந்த உரிமையை அவமதிக்கின்றோமா....???

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது கேள்விகளுக்கு தங்கள் பதில் ஆம் என்று இருந்தால்....

நாம் எந்த நாட்டுக்கும் உதவாதவர்கள்

எனது கேள்விகளுக்கு இல்லை என்பது உங்கள் பதிலாக இருந்தால்....

நாம் கடினமாக உழைக்கத்தயாராகவேண்டும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது

இவற்றை பெறும் நாம்

அந்நாடுகள் எதிர்பார்ப்பதுபோல் இருக்கின்றோமா...?

அல்லது எமது தாய்நாடு எதிர்பார்ப்பதுபோல் இருக்கின்றோமா?

அல்லது இரண்டுக்கும் இடையில் பாலமாக இருக்கின்றோமா...?

அல்லது இரண்டுக்கும் துரோகம் செய்து இரண்டும் கெட்டு வாழ்கின்றோமா..?

அல்லது இதனுடைய அதாவது தேசப்பற்று என்பதன் அர்த்தம் புரியாது தூங்குகின்றோமா....???

அதாவது இந்த நாடுகளில் நாம்

பிரசா உரிமையை வைத்துக்கொண்டு....

இந்த மண்ணின் மைந்தர்கள் அனபின்பும்.....

வெளிநாட்டுப்பிரசை என்ற நினைப்பில்

எமக்கு தரப்பட்ட அந்த உரிமையை அவமதிக்கின்றோமா....???

வேதனையான , வெட்கப்படும் படியான உண்மைகளை கூறியுள்ளீர்கள் விசுகு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கேள்விகளைத்தான் கேட்டிருக்கிறீர்கள் விசுகு.

நாங்கள் வாழும் நாடுகளின் உள்நாட்டு அரசியலில் பங்குபற்றுவதும்

கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதுவும் முக்கியமானது.

இதன்மூலம் அவர்களுடன் ஏற்படும் புரிந்துணர்வு

எமது தாயக அரசியலிற்கு வலுச்சேர்க்கும்.

ஆனால் இன்று போனால் நாளை பலன்கிடைக்காது.

மெதுவாகத்தான் மாற்றங்கள்வரும்.

ஆனாலும் நாம் தளராது செயற்படவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தங்களிருவரினதும் கருத்துக்களுக்கு....

நாம் எப்போ அடுத்தபடிக்கு தாவப்போகின்றோம்

எமக்குக்கிடைத்த இந்த அரிய வாய்ப்பை எப்போ எமக்காக அல்லது அவர்களுக்காகவாவது பயன்:படுத்தப்போகின்றோம்

அதற்கு என்ன செய்யவேண்டும் என்று ..... எப்போ தொடங்கப்போகின்றோம்

  • 4 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாயநாடுகளின் மாநாட்டில்  எமது வாக்கு பலம் டபெற்றுள்ளதை மகிந்தவே சுட்டிக்காட்டி இருப்பதால்.....

இதை இங்கு எடுத்து விடுகின்றேன்

 

பேசலாம்...

  • 3 weeks later...

அண்ணா,

கனடாவில் 4 வருடத்தில் குடியுரிமை பெறலாம்.

இதனால் கல்வி கடன் பெறுவது மற்றும் வேலை பெறுவது இலகு.

இங்கு பிரதமர் மாநாட்டுக்கு போகாமல் நிப்பாட்டும் அளவிற்கு ஈழ தமிழர் வாக்குபலம் பெற்றிருக்கிறார்கள்.

கனடாவின் முதல் 25 நிறுவனங்களில் நானும், எனது நண்பர்களும் வேலை பார்க்கிறோம். பல ஈழதமிழர்கள் வேலை பார்க்கிறார்கள். எப்போதும் சக தொழிலாளிகளுக்கு பிடித்த இனம் நாம் தான்.

பல மேல்மட்ட நிறுவன தொழில்களில் முன்னேறி இருக்கிறோம். கணக்கியல், மருத்துவம், பொறியியல், மென்பொருள், உணவாக தொழில்களில் கொடிகட்டி பறக்கிறோம்.

பல்லாயிரகணக்கான இரண்டாம் தலைமுறை இளையோர் எல்லா துறை வியாபாரங்களிலும் கால் பதிக்க தொடங்கி உள்ளார்கள்.

எல்லா பல்கலையிலும் ஈழத்தமிழர் படிக்கிறார்கள்.

எல்லோரும் 5 இலட்சம் டொலருக்கு குறையாமல் வீடுகள் வைத்திருக்கிறார்கள்.

அரசியலிலும் நகர, மாகாண மற்றும் நாட்டு அரசியலில் கால் பதித்துவிட்டோம்.

ஒரே ஒரு குறை எம் அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் கனடிய நாட்டுக்கு தொண்டுகள் செய்வது குறைவு.

மற்றும் தொழில்களில் முகாமைத்துவ வேலைகளில் நம்மவர் குறைவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.