Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த சகோதரர்களிடம் சிக்கித் தவிக்கும் இலங்கையின் ஊடகத்துறை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த சில வாரங்களாக சில வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் சில பத்திரிகைகளும் பல ஊடகவியலாளர்களுக்கும் புலிகளுக்குமான தொடர்பு பற்றி சாடை மாடையாக தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்த ஊடகவியலாளர்கள் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் செயற்பட்டார்கள் என்றும் கூற இந்த ஊடகங்கள் தயங்கவில்லை.

அண்மைக்காலங்களில் அரசாங்கத்திற்கெதிராக ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டனர். தொலைக்காட்சி நிறுவனங்கள் இக்குற்றச்சாட்டை முன்வைக்கும் போது ஊடகவியலாளர்களின் கண்டனக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோ நாடாக்களையே ஓளிபரப்பின. அதன் போது ஒளிபரப்பப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்களால் அந்த ஊடகவியலாளர்கள் அச்சத்துடன் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

அரசாங்கத்தின் தடுப்புக்காவலிலுள்ள புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் புலிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்ட ஊடகவியலாளர்களின் பெயர்ப்பட்டியலை கொடுத்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

தொலைக்காட்சி நிறுவனங்கள் பாதுகாப்புச் செயலாளர், இராணுவ தளபதி, கடற்படைத்தளபதி, விமானப்படைத்தளபதி காவற்துறைமா அதிபர் ஆகியோரிடம் நேர்காணலை மேற்கொண்ட போதும் அவர்கள் தம்மிடம் இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக பொதுமக்களிடம் இந்த ஊடகவியலாளர்கள் குறித்த சந்தேகம் வளர ஆரம்பித்துள்ளது.

இவ்விடயம் சம்பந்தமான ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக ஜுன் முதலாம் திகதி ஊடகவியலாளர் குழு ஒன்று ஜனாதிபதியை அலரி மாளிகையில் சந்தித்தது.

இலங்கைப் பத்திரிகையாளர் நிறுவனத்தைச் சேர்ந்த வருண கருணாதிலக, குமார் நடேசன், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த பிரசன்ன பொன்சேகா, சுதந்திர ஊடகவியலாளர் இயக்கத்தைச் சேர்ந்த சூலவன்ச சிறிலால், ராவய ஆசிரியர் விக்டர் ஐவன் ஆகியோர் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றிருந்த குழவில் முக்கியமானவர்கள்.

இச்சந்திப்பு விக்டர் ஐவனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இது ஒரு சினேகபூர்வ சந்திப்பாக இருந்தது. உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் குறித்து அதன் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார். குறிப்பாக சுதந்திர ஊடக இயக்கத்தின் நிதி விவகாரங்கள் தொடர்பாகக் கேட்டறிந்தார். சுதந்திர ஊடக இயக்கத்தின் நிலைமைகள் தொடர்பாக அதன் முன்னாள் இணைப்பாளர் உவிந்து குருகுலசூரிய தனக்கு விளக்கியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தமது அமைப்பு தற்போது புதியவர்களால் நடாத்தப்பட்டு வருகிறது என்றும், கணக்கு விவகாரங்கள் தற்போது கணக்காய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதன் பின்னர் இந்த ஊடகவியலாளர் குழுவினர் அரச ஆதரவு வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளால் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். குறிப்பாக ஐரிஎன் தொலைக்காட்சியில் விமசும நிகழ்ச்சியின் போது புலிகளிடம் பணம் வாங்கிய ஊடகவியலாளர்கள் பற்றிய செய்தியை ஒளிபரப்பும் போது உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் போத்தல ஜயந்தவின் படத்தை வெளியிட்டதையும் இதனால் போத்தல ஜயந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அவருடைய நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளனர். குறிப்பாக அவரது குடும்பத்தார் கூட பொது மக்களால் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊடக அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா, அமைச்சர் டளஸ் அழகப்பெருமா மற்றும் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பிரச்சினை குறித்து முறையிட்ட பின்னரும் அரச ஊடகங்களில் இந்தப்பிரச்சாரம் தொடர்வதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டனர்.

எனக்கு போத்தலவை நன்றாகத் தெரியும். அவர் ஒரு அப்பாவி. அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூட இதனை எனக்குத் தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி பதிலளித்திருக்கிறார். அத்தோடு போத்தலவிற்குப் காவற்துறைப் பாதுகாப்பு வழங்கும்படியும் ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

போத்தலவிற்கு சொந்தமாக வாகனங்கள் எதுவுமில்லை. அவர் தனிப்பட்ட வாகனங்களைப் பாவிப்பதில்லை. அவர் பேருந்திலேயே பிரயாணிப்பவர். அப்படியானால் அவர் பிரயாணம் செய்யும் எல்லா பேருந்துகளுக்கும்; நீங்கள் காவற்துறைப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

போத்தலவிற்குத் தேவையான பாதுகாப்பை எவ்வாறாயினும் நாம் வழங்குவோம் என்று ஜனாதிபதி அவ்விடத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இணைப்புச் செயலாளர் சஜின் வாஸ் குணவர்த்தன, தேசதிய ஆசிரியர் வசந்த பிரியராமநாயக்கா, மற்றும் மகிந்த இலப்பெருமா, சுதத் சில்வா ஆகியோரும் இக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதியுடன் இருந்துள்ளனர்.

இதற்குச் சற்றுப் பின்னர் அமைச்சர்களான டளஸ் அழகப்பெருமாவும், ஊடக அமைச்சர் பிரியதர்சன யாப்பாவும் அலரி மாளிகைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு வந்த டளஸ் அழகப்பெருமா செய்தியொன்றையும் கொண்டு வந்தார். போத்தல ஜயந்த அன்று மாலை இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என்பது தான் அந்தச் செய்தி.

காவற்துறை மா அதிபருக்கு இதனைத் தெரிவிக்குமாறு ஜனாதிபதி தனது செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு உத்தரவிட்டார். இதன்படி லலித் வீரதுங்க பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு போத்தல ஜயந்த இன்று மாலை ஐந்தரை மணியளவில் நுகேகொட எம்புல்தெனிய என்ற இடத்தில் வைத்து வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். எனத் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்த காவற்துறை மா அதிபர் போத்தல தாக்கப்பட்ட பின்னர் ஹொத்தட்டுவ பகுதியில் தூக்கி வீசப்பட்டிருந்ததாகவும் தற்போது அவர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போத்தலவை ஜனாதிபதி நன்கறிந்தவர் என்பதால் அவர் அதிர்ச்சியடைந்ததாகவும் நேசன் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான போத்தலவிற்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுக்குமாறு ஊடக அமைச்சரிடம் தெரிவித்த ஜனாதிபதி, காவற்துறை மா அதிபரிடம் விசேட விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதன் பின்னர் இந்த ஊடகவியலாளர் குழு அரச ஊடகங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊடகவியலாளர்களுக்கெதிரான பிரச்சாரத்தை நிறுத்த உத்தரவிடுமாறு ஜனாதிபதியிடம் கேட்டது. அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி புலிகளிடம் பணம் வாங்கிய ஊடகவியலாளர்களின் பட்டியல் தமக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவ்வாறானால் அந்தப்பட்டியலை வெளியிடுங்கள் என்று ஜனாதிபதியிடம் இவ்வூடகவியலாளர் குழு கேட்டது. இந்தப்பட்டியலை நாங்கள் வெளியிட்டால் பலஊடகவியலாளர்கள் இந்த நாட்டில் இருக்க முடியாது என்று ஜனாதிபதி அதற்குப் பதிலளித்தார்.

அது உண்மையாக இருக்கக் கூடும். காவற்துறையிலும் இராணுவத்திலும் உள்ள சிலர் கூட புலிகளிடம் பணம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அது போல ஊடகவியலாளர்களிடமும் சிலர் இருக்கக்கூடும். போத்தல போன்ற ஊடகவியலாளர்களைப் பாதகாப்பதற்காகவெனினும் அவ்வாறு பணம் வாங்கிய ஊடகவியலாளர்களின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று ஊடகப்பிரதிநிதிகள் வற்புறுத்தினர். இதன்பின்னர் இது தொடர்பான அறிக்கை ஒன்றை விடுக்குமாறு ஊடக அமைச்சரிடம் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதனைத் தவிர தனிப்பட்ட ஒவ்வொரு ஊடகவியலாளர் குறித்தும் ஜனாதிபதி உரையாடினார்.

நாட்டில் இடம் பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்தும், ஐக்கிய தேசியக்கட்சியின் உள்ளக விடயங்கள் குறித்தும் ஆகக்குறைந்தது வாரமொருமுறையாவது மறைந்த லசந்த விக்ரமதுங்க சந்தித்து உரையாடுவார் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, அண்மையில் ஜெனிவாவில் இடம் பெற்ற ஐநாவின் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசேட அமர்வின் போது சுனந்த தேசப்ரிய இலங்கைக்கெதிராக வாதாடியது குறித்து தனது கவலையையும் வெளியிட்டார்.

இந்தியா, சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் எமக்கு ஆதரவாக நிற்கும் போது நாம் மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும், போர்க்குற்றங்கள் புரிந்ததாகவும் சொல்வது நாட்டிற்கு இழைக்கும் துரோகம் அல்லவா என ஜனாதிபதி கேள்வியெழுப்பினார்.

சுனந்த தேசப்ரிய தற்போது சுதந்திர ஊடக இயக்கத்தில் முக்கியமான பதவி ஒன்றிலும் இல்லை என்றும், அவர் பிரான்செசன் இன்ரநசனல் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் சார்பாகவே ஜெனிவாவில் பேசினார் என்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் தற்போதைய இணைப்பாளர் சூலவன்ச சிறிலால் விளங்கப்படுத்தினார்.

சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவனாகவும். சுதந்திர ஊடகவியலாளராகவும் அறியப்படுகின்ற சுனந்த அவ்வாறு பேசுவது ஆபத்தானது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

http://www.globaltamilnews.net/tamil_news....10579&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.