Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்தது அமெரிக்கா

Featured Replies

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுமென விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவின் தலைவர் எஸ்.பத்மநாதன் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டிலில் விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டமையை அமெரிக்கா வரவேற்பதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்

சிரேஷ்ட அதிகாரியான கிரேக் சுலிவான், விடுதலைப் புலிகள் சமாதான ரீதியில் தமது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்றார்.

“மோதல்களின் முடிவின்போது மோதல்ப் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்துவைத்திருந்தனர். பொதுமக்களிருக்கும் பகுதிகளிலிருந்து தாக்குதல்களை நடத்திப் பொதுமக்களை ஆபத்துக்குள் தள்ளியிருந்தனர். இந்த உத்திகளையே கடந்த 30 வருடங்களில் அவர்கள் கையாண்டிருந்தனர். ஆனால், லிபியாவைப் பெறுத்தவரையில் அந்த நாடோ அல்லது அமைப்போ தமது பயங்கரவாதப் பதையிலிருந்து மாறியிருந்தது. அவ்வாறான மாற்றமொன்று ஏற்படுமா என்பதையே அவதானிக்கவேண்டியுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

1997ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட அமைப்பு எனச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்வரும் 5 வருடங்களுக்கு விடுதலைப் புலிகள் மீதான தடையுத்தரவை நீக்குவதில்லையெனத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.

கடத்தல்கள், குண்டுத் தாக்குதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள் போன்ற அவர்களின் பயங்கரவாதத் தாக்குதல்களை தாம் கண்டிப்பதாகவும், நாடு கடந்த அரசாங்கமொன்றை ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் கூற்றுக்களை செயற்பாடுகளை கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம். ஆனால் அமெரிக்கா சொல்வதை வேதவாக்காகக் கருத வேண்டிய அவசியமில்லை.

அமெரிக்கா ஒரே பல்லவியைப் பாடிக் கொண்டு திரிகிறது. ஆனால் தான் செய்வதெல்லாம் அதற்குச் சரி.

சமாதான வழியில்.. தீர்வு என்று சொல்கிறது. ஆனால் அது எப்படி சாத்தியம் என்பதை அதனிடமே கேட்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் மக்களினதாகும்.

நாடு கடந்த அரசு என்பது எப்படி சமாதானமற்ற வழி என்று அமெரிக்கா கருதுகிறது என்பதையும் சொல்ல வேண்டும்..??! அதை ஏற்காததற்கான காரணங்களை அமெரிக்கா விளக்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை நீடிப்பு என்பது அவர்களின் சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் விடுதலைப்புலிகளின் அரசியல் செயற்பாடுகள் மீது தனது செல்வாக்கை பிரயோகிக்கும் வகையிலும் அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையே ஆகும். அதுவும் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மெளனித்து வன்முறைகளை கைவிட்ட பின் இவ்வாறான ஒரு அறிவிப்பு வந்திருப்பதை கவனத்தில் கொள்வது நன்று.

சில நடவடிக்கைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரிக்கும் வரை செய்யாமல் இருக்க முடியாது. மக்கள் அங்கீகாரங்கள் மூலம் இவர்களை அங்கீகரிக்கச் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதே நன்று. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காபோன்றன எதிர்த்தால் நாம் கிய்பா வெனிசுலா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் ஆதரவை நாடுவோம்

எடுத்த எடுப்பில் அவர்கள் அங்கிகரிப்பார்கள் என்றில்லை

எல்லாமே கனவுபோல மிகவிரைவாக நடந்தேறியுள்ளது.

நாம் அவர்கள் சொன்னதை கருத்தில் கொள்வேம் அவர்களால் பிழை

பிடிக்க முடியாதவாறு காரியமாற்றவேண்டும்.

முன்னம் கலைஞன் சொன்னமாதிரி இதை அமைப்பது புலிகள்தான் என்பதை

நாம் விதைப்பதாக இருக்கக்கூடாது. ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்

ஒவ்வொரு சொல்லும் இன்னும் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதை நாம் கவனித்தாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தது இதுதான்...

ஜூன் 23 ஆம் திகது கிரேக் சலிவன் சாட்டிங் ஒன்றில் கேள்விகளுக்கு பதிலளீத்திருக்கிறார். இந்த அறிவிப்பு சிறீலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் புளொக்கர் பக்கத்தில் வந்துள்ளது.

http://usembassycolombo.blogspot.com/2009/...maldives-q.html

அதில் தமக்கு சாதகமான கேள்விகளைக் கேட்ட சிங்களப் பேரினவாதத் தரப்பு பலவாறான செய்திகளை பரப்பிக்கொண்டு உள்ளது. சிங்கள அரச தரப்பு செய்தித்தளத்திலேயே தடை நீடிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர தடை நீட்டிப்பு என்று சொல்லப்படவில்லை.

LTTE remains banned in US – State Dept

நான் நினைக்கிறேன் இந்தச் செய்தி லங்காசிறியில் இருந்து சுடப்பட்டுள்ளது என்று. அங்கேதான் தடை நீட்டிப்பு என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள்.

லங்காசிறி

LTTE Remains Banned க்கும் US Extends Ban on LTTE க்கும் உட்கருத்தில் எவ்வளவு வித்தியாசம்? இந்த லட்சணத்தில் நாங்கள் ஊடகம் நடத்துகிறோம்..! :):)

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீதான தடை மேலும் 5 வருடங்களுக்கு நீடிப்பு : அமெரிக்கா

வீரகேசரி இணையம் 6/24/2009 1:00:47 PM -

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் விடுதலை புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.

1997ஆம் ஆண்டு முதல் விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா தடை செய்திருந்தது.

இந்தத் தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீக்குவதில்லையென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி கிரேக் சுலிவான், தெரிவித்துள்ளார்.

கடத்தல்கள், குண்டுத் தாக்குதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள் போன்ற அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தாம் கண்டிப்பதாகவும், நாடு கடந்த அரசாங்கமொன்றை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீதான தடை மேலும் 5 வருடங்களுக்கு நீடிப்பு : அமெரிக்கா

வீரகேசரி இணையம் 6/24/2009 1:00:47 PM -

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் விடுதலை புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.

1997ஆம் ஆண்டு முதல் விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா தடை செய்திருந்தது.

இந்தத் தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீக்குவதில்லையென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி கிரேக் சுலிவான், தெரிவித்துள்ளார்.

கடத்தல்கள், குண்டுத் தாக்குதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள் போன்ற அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தாம் கண்டிப்பதாகவும், நாடு கடந்த அரசாங்கமொன்றை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதபார்றா.. இன்னொரு செய்தி..! லைவ் சாட்டிங்கில் சொன்னதெல்லாம் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அறிவிப்பாகிப் போச்சு..! :)

புலிகள் தடையை எடுத்துவிடுவார்கள் எண்டு சொல்லவரவில்லை. ஆனால் சிங்களவனின் மௌபீம லக்பீம வரிசையில் எங்கட ஊடகங்களும் இருக்கு..! அவன் திரிச்சு சொல்லுறதுதான் எங்களுக்கும் சேதி..! இதைக் கொண்டுவந்து இங்க போடாதீங்கப்பா..! ஒவ்வொரு முறையும் நாங்கள் கூகிள் பண்ணி செய்தியின் உண்மைத்தன்மையைப் பரிசோதித்துக் கொண்டிருக்க‌ முடியாது. :blink:

அமெரிக்கன் அதிகாரபூர்வமா அறிவிச்சால் கொண்டுவந்து போடுங்கோ..! சிங்களவனின்ர சோர்வடைய வைக்கிற பிரச்சாரமா இருந்தால் அதை இங்க கொண்டு வராதேங்கோ..! :)

நடந்தது இதுதான்...

ஜூன் 23 ஆம் திகது கிரேக் சலிவன் சாட்டிங் ஒன்றில் கேள்விகளுக்கு பதிலளீத்திருக்கிறார். இந்த அறிவிப்பு சிறீலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் புளொக்கர் பக்கத்தில் வந்துள்ளது.

http://usembassycolombo.blogspot.com/2009/...maldives-q.html

அதில் தமக்கு சாதகமான கேள்விகளைக் கேட்ட சிங்களப் பேரினவாதத் தரப்பு பலவாறான செய்திகளை பரப்பிக்கொண்டு உள்ளது. சிங்கள அரச தரப்பு செய்தித்தளத்திலேயே தடை நீடிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர தடை நீட்டிப்பு என்று சொல்லப்படவில்லை.

LTTE remains banned in US – State Dept

நான் நினைக்கிறேன் இந்தச் செய்தி லங்காசிறியில் இருந்து சுடப்பட்டுள்ளது என்று. அங்கேதான் தடை நீட்டிப்பு என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள்.

லங்காசிறி

LTTE Remains Banned க்கும் US Extends Ban on LTTE க்கும் உட்கருத்தில் எவ்வளவு வித்தியாசம்? இந்த லட்சணத்தில் நாங்கள் ஊடகம் நடத்துகிறோம்..! :huh::unsure:

உங்களை மாதிரி நாலும் படிச்ச மனிசர் இருக்கிறதால பல உண்மைகளை அறியக்கூடிதாக் கிடக்கு

இல்லாட்ட உந்த கறுப்பியக்காவிர ஈ அடிச்சான் கொப்பியை நம்பினா நாமம்தான்.

புலிகள் மீதான தடை மேலும் 5 வருடங்களுக்கு நீடிப்பு : அமெரிக்கா

வீரகேசரி இணையம் 6/24/2009 1:00:47 PM -

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் விடுதலை புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.

1997ஆம் ஆண்டு முதல் விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா தடை செய்திருந்தது.

இந்தத் தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீக்குவதில்லையென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி கிரேக் சுலிவான், தெரிவித்துள்ளார்.

கடத்தல்கள், குண்டுத் தாக்குதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள் போன்ற அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தாம் கண்டிப்பதாகவும், நாடு கடந்த அரசாங்கமொன்றை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

டங்குவார் உண்மையைக் கண்டு பிடித்தபின்பும் நீங்கள் இந்தச் செய்தியை ஏன் இணைக்கிறீர்கள்?. செய்தியை இணைக்கும் முன்பு ஏன் இணைக்க வேண்டும் என்று யோசித்து விட்டு இணையுங்கோ. சிங்களவனின் பிரச்சாரத்துக்கு துணை போக வேண்டாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.