Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ், தமிழீழ மக்கள் பேரவை விடுக்கும் அறிவித்தல்

Featured Replies

பிரான்ஸ், தமிழீழ மக்கள் பேரவை விடுக்கும் அறிவித்தல்

திகதி: 02.07.2009 // தமிழீழம்

தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தவும், நியாயங்களை எடுத்துக்கூறவும், போராட்டத்தின் அடுத்த வடிவமாக '' பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை" என்ற அமைப்பு பிரான்சிலே உருவாக்கப்பட்டிருக்கின்றது.

அவ்வமைப்பு இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் முழு வடிவத்தை கீழே தருகின்றோம்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

உலக சமூகம் கைகட்டி வாய்பொத்தி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்க மிகப் பெரும் மனிதப் படுகொலையை இலங்கைத் தீவிலுள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசு எமது இனத்தின் மீது அரங்கேற்றியுள்ளது.

மனித குலம் வெட்கித் தலைகுனியும் விதமான இனப்படுகொலை 21 ம் நூற்றாண்டில் எமது மண்ணிலேயே அரங்கேறியுள்ளது. நீதிக்கான எமது போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கடந்த ஒன்றரை தசாப்தகாலமாக தமிழர் தயாகத்தில் இயங்கிவந்த தமிழீழ நடைமுறை அரசகட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டு மக்களின் வாழ்வும் வளமும் சீரழிக்கப்பட்டுள்ளது. வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அடிப்படை மனித உரிமைகள், ஐனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குரல்வளைகள் நசுக்கப்பட்டுள்ளது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்த மக்களில் 3 லட்சம் வரையிலானோர் தடுப்பு முகாமில் வெயிலுக்கு நிற்க கூட நிழலின்றி, மழைக்கு ஒதுங்க கூட இடமின்றி கம்பி வேலிகளுக்குள் மனஅழுத்தங்களுடன் சொல்ல முடியாத துன்பச்சுமையுடன் காலத்தை கழித்துக்கொண்டிருக்கின்றனர

இந்த மக்கள் பேரவை எப்போது யாரால் ஆரம்பிக்கப்பட்டது.இது ஆரம்பிக்கப்படுவது தொடர்பாக பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு பொது அறிவித்தல் விடுக்கப்பட்டதா?

எரிமலை சஞ்சிகையில் எழுதினால் தங்களுக்கு புலி முத்திரை குத்திவிடுவார்கள்-அதாவது புலியை வைத்து பிழைப்பு நடத்துவம் ஆனா நாங்கள் புலி எண்டு சொன்னால் எங்கடை ஸ்டேடஸ் குறைஞ்சுபோம் எண்டு சென்ன பிழைப்புவாதிகளும் டக்ளஸ் இங்கே வந்த போது தவறாது அவன் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டு பிரான்சில் புலியை அழிப்பதற்கு என்ன செய்யலாம் என்று ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தவர்களும் தாங்கள் தான் இந்த அமைப்பின் உருவாக்கத்துக்கு முக்கியமானவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிவதை காணக் கூடியதாக இருக்கிறது.

அண்ணைக்காவும் தமிழீழ விடுதலைக்காவும் உண்மையாக உழைத்த இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் ஏராளமான உறவுகளை புறந்தள்ளிவிட்டு இந்த அமைப்பை உருவாக்கியிருப்பது ஏற்கணவே எங்கள் தலைவர் பிரபாகரன்- தேசியத்தலைவர் வாழ்க

என்று கோசம் போட்டுக் கொண்டு அவருக்கு குழிபறித்த கூட்டம் தங்களது கதிரைகளை தக்கவைக்க மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகவே எனக்குப்படுகிறது.அண்ணையினுட

Edited by athiyan

நாடு கடந்த தமீழீழம் என்பதை குழப்பி அடிக்க வந்த இன்னொரு கூட்டம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழம்பியிருக்கும் தமிழ் மக்களை மேலும் குழப்புவதற்காக தொடங்கப்பட்டுள்ள அமைப்பாகவே என்னால் இதைப் பார்க்க முடிகிறது. மக்கள் அனைவரும் எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் நாடு கடந்து தமிழீழ அரசாங்கத்திற்கு தமது ஆதரவினைத் தெரிவிக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.