Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனோ மணேசனின் வாகனத் தொடரணி மீது தொண்டமான் ஆதரவாளர்கள் கடும் தாக்குதல்: பலர் படுகாயம்

Featured Replies

சிறிலங்காவில் ஊவா மாகாண சபைக்காக நடைபெறும் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பயணம் செய்த வாகனத் தொடரணி மீது ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கடுமையான தாக்குதலினை நேற்று நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆறுமுகம் தொண்டமானின் ஆதரவாளர்கள் நன்கு திட்டமிட்டு நடத்திய இந்தத் தாக்குதலின் போது மனோ கணேசன் அவரது மெய்ப்பாதுகாவலர்களால் அந்த இடத்தில் இருந்து உடனடியாக பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதால் காயம் எதுவும் இன்றித் தப்பித்துள்ளார். இருந்த போதிலும் அவரது ஆதரவாளர்கள் பலர் படுகாயமடைந்திருக்கின்றனர். வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

பசர வீதியில் உள்ள மடுல்சீமைப் பகுதியில் வைத்தே மனோ கணேசன் பணயம் செய்த வாகனத் தொடரணி மீது நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இ.தொ.கா.வின் உள்ளுர் தலைவர்களில் ஒருவரான ரமேஸ் என்பவர் தலைமையில் மது போதையில் வந்த ஒரு குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக மனோ கணேசனின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனோ கணேசனின் ஊவா மாகாண சபைக்கான பிரச்சார பேருந்து வாகனத்தையும் காடையர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் அவரது கட்சிப் பணியாளர்கள் பலர் இருந்ததாகவும் அவர்களில் பலர் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வாகனத்தில் இருந்த கட்சிப் பதாதைகள், கட் அவுட் போன்றன கிழித்தெறியப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தின்போது தான் பயணம் செய்த ஜீப் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இருந்தபோதிலும் தனது மெய்ப்பாதுகாவலர்கள் தன்னை அந்தப் பகுதியில் இருந்து அவசரமாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றிவிட்டதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

தாக்குதலில் ஈடுபட்ட காடையர்கள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை புகழ்ந்து முழக்கங்களை எழுப்பிக்கொண்டே தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மடுல்சீமையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட மனோ கணேசனும் அவரது குழுவினரும் பசறையை நோக்கி வாகனத் தொடரணியில் திரும்பிக்கொண்டிருந்த போதே வீதியில் காத்திருந்த இந்தக் குழுவினர் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்களில் மூவர் பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியினர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.