Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் முடிவடையவில்லை என்பதை மக்கள் யாழ். வவுனியா தேர்தலின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் - இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இணையம் - பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடனும் சமத்துவத்துடனும் தமிழ் மக்கள் வாழ வேண்டும். இதற்காக நாம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றோம். ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டாலும் அரசியல் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிந்துவிட்டன எனக் கூறி வரும் அரசாங்கத்தின் கூற்றைப் பொய்ப்பித்து உண்மை நிலையை உலகுக்கு எடுத்துக்காட்டத்தக்க வகையில் தமிழ் மக்கள் யாழ்ப்பாணம், வவுனியா நகர சபைகளுக்கான தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார வைபவத்தில் உரையாற்றுகையில் கேட்டுக்கொண்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து வவுனியா நகரில் நடைபவனி பிரசாரத்தை ஆரம்பித்து வைத்து அவர் உரையாற்றினார். வேட்பாளர் ரதன் தலைமையில் இந்த வைபவம் வவுனியா கண்டி வீதியில் நடைபெற்றது. அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்த நாட்டில் ஏனைய மக்களுடன் சமத்துவமாக சம உரிமைகளுடன் தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாகிய ஆயுதப் போராட்டம் இப்போது முடிவடைந்துவிட்டது. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை.

ஆயுதப்போராட்டத்தை முறியடித்ததுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிவடைந்துவிட்டன அவர்களுக்குப் பிரச்சினைகள் இல்லை என கூறி வரும் அரசாங்கம் அதனையே உண்மையான நிலையென்று உலகத்திற்குக் காட்டவும் முயற்சித்து வருகின்றது. இதற்குத் தமிழ் மக்கள் இடம்கொடுத்துவிடக் கூடாது. இந்த நாட்டில் எமக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தி்லும், வவுனியாவிலும் மக்கள் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்ற எமது வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.

வரலாற்று ரீதியாக நாட்டில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் எமது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, நாங்கள் சமத்துவத்துடன் வாழ வேண்டும். இதற்காகவே நாங்கள் போராடி வருகிறோம்.

இந்த முக்கியமான கால கட்டத்தி்ல் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் மூலம் எதனை வெளிப்படுத்தப் போகின்றார்கள் என்பதை சர்வதேச நாடுகள் உட்பட அனைவரும் உற்றுப்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். ஆகவே உண்மையான நிலைப்பாட்டை இந்தத் தேர்தலின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வாழ் மக்களின் கைகளிலேயே உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்த வைபவத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ்.எஸ்.கனகசபை, என்.சிவசக்தி ஆனந்தன், எஸ்.நோகாராதலிங்கம் (விநோ) ஆகியோருடன் முதன்மை வேட்பாளர் எஸ்.என்.ஜி.நாதன் உட்பட்ட ஏனைய வேட்பளர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஆதரவாளர்கள் சகிதம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கு வேட்டையிலும் ஈடுபட்டார்கள்.

அத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பொதுமக்கள் தரப்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் விரிவான விளக்கமளித்தார்.

இந்த முக்கியமான கால கட்டத்தி்ல் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் மூலம் எதனை வெளிப்படுத்தப் போகின்றார்கள் என்பதை சர்வதேச நாடுகள் உட்பட அனைவரும் உற்றுப்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். ஆகவே உண்மையான நிலைப்பாட்டை இந்தத் தேர்தலின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வாழ் மக்களின் கைகளிலேயே உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது
.

வாக்களப்பெருமக்களே உங்கள் வாக்குகளை வீட்டுச் சின்னத்திற்கு போட்டு எங்கள் சுயநிர்னய உரிமைக்கான போராட்டத்தை உலகுக்கு எடுத்துகாட்டுங்கள்

வீடு வரை உறவு காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ என்று தத்துவம் பேசிகொன்டு இருக்காமல் ,வாக்குச் சாவடிக்கு போய் உங்கள் வாக்குகளை வீட்டுச்சின்னத்திற்க்கு போடுங்கள்

Edited by Jil

.

வாக்களப்பெருமக்களே உங்கள் வாக்குகளை வீட்டுச் சின்னத்திற்கு போட்டு எங்கள் சுயநிர்னய உரிமைக்கான போராட்டத்தை உலகுக்கு எடுத்துகாட்டுங்கள்

வீடு வரை உறவு காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ என்று தத்துவம் பேசிகொன்டு இருக்காமல் ,வாக்குச் சாவடிக்கு போய் உங்கள் வாக்குகளை வீட்டுச்சின்னத்திற்க்கு போடுங்கள்

அவர்கள் ஓட்டும் போடவேண்டும் ..... சண்டையும் போடவேண்டும் ... நாங்கள் மட்டும் கணணியில் தத்துவங்கள் பேசிக்கொண்டு .... ஜல்லியடித்துக்கொண்டு திரிவோம்!

அவர்கள் ஓட்டும் போடவேண்டும் ..... சண்டையும் போடவேண்டும் ... நாங்கள் மட்டும் கணணியில் தத்துவங்கள் பேசிக்கொண்டு .... ஜல்லியடித்துக்கொண்டு திரிவோம்!

எங்கள் செத்த வீடு இனி இந்த அகதிநாடுகளில் தான்.

அங்கிருக்கும் மக்கள் தங்கள் வாழ்வுக்கான அரசியல் தீர்வுக்கு நாங்களும் உதவலாம். மற்றும்படி நாங்கள் போய் வோட்டும் போடேலாது , துவக்கும் தூக்கேலாது.

நான் அகதியாய் ஓடி வந்திட்டன்.

அவர்கள் ஓட்டும் போடவேண்டும் ..... சண்டையும் போடவேண்டும் ... நாங்கள் மட்டும் கணணியில் தத்துவங்கள் பேசிக்கொண்டு .... ஜல்லியடித்துக்கொண்டு திரிவோம்!

சிங்களவன் போரபோக்கில புலத்தில் இருக்கிற புண்ணாக்குகளை தவிர மற்ற எல்லாத்தமிழரையும் தமிழ்பிரதேசத்தையும் சிங்களமயமாக்கி போட்டுதான் விடுவான் ,

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் இந்த தேர்தலையே புறக்கணிக்க வேண்டும்!

இந்த அரசியல்வாதிகளால் எமது மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைக்கு நீதி வாங்கித்தர முடிந்ததா? அல்லது முகாம்களில் தினமும் கொல்லப்படுகின்ற இன்றைய நிலையைத்தான் மாற்ற முடிந்ததா? சிங்களம் உலகுக்கு தமிழர்களிற்கு அமைதி, தேர்தல் மூலம் அவர்களின் பிரதினிதிகளை தெரிந்தெடுப்பதின் மூலம் அரசியல் அபிலாசைகள் நிறைவேறிவிட்டதாகக் காட்ட முயல்கிறது.

எமது மக்கள் தாமாகவே தனித்து பல அச்சுறுத்தலுக்கு மத்தியில் தனித்து

நின்று வன்னி மக்களின் அவலத்தை போக்க அரசுக்கு எதிராக தனி மனித உரிமை மீறல் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் இவர்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து எந்த உதவியும் வழங்கப்படவில்லை என்ற வருத்தமான உண்மைதான் மிஞ்சுகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் போரபோக்கில புலத்தில் இருக்கிற புண்ணாக்குகளை தவிர மற்ற எல்லாத்தமிழரையும் தமிழ்பிரதேசத்தையும் சிங்களமயமாக்கி போட்டுதான் விடுவான் ,

புலத்தில இருக்கிறவை பலர் மேற்கிந்தியாத்தீவுகள், தென்னாபிரிக்கா, மோரிசியஸ், பிஜி போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களைப் போல தமிழ் தெரியாமல் தமிழ் பெயரற்று வாழப்போகிறார்கள். 2, 3 சந்ததிகளுக்குப் பின்பு இவர்களை இந்திய வம்சாவளியினர் என்று தான் வேறு நாட்டவர்கள் கூப்பிடப் போகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.