Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தமிழ்நாட்டு கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

"இன்று விடுதலைப் புலிகள் அமைப்பு அந்நாட்டில் அழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த அமைப்பை ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பாகக் கருதுவதில் அர்த்தமிருக்கப்போவதில்லை" எனத் தெரிவித்த திருமாவளவன், "எனவே விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசாங்கம் முழுமையா நீக்க வேண்டும்" எனவும் கோரிக்கைவிடுத்தார்.

நல்ல விடையம் தான்.... ஆனால் தலைவர் நலமா இருக்கிறார், கெதில வருவார், அடுத்த ஈழப் போர் தொடங்கும் என்று சொல்லிக்கொண்டு... பிறகு, தடை எடுக்கும் படி போராட்டம் நடத்தினால் என்ன அர்த்தம்??

தொட்டிலையும் கிள்ளிவிட்டு சீ... பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுறது என்று சொல்லுவினமே அது போல இருக்கு...

விடுதலைப்புலிகள் இருந்தாலும் ஆயிரம் பொண்,இல்லாட்டியும் ஆயிரம் பொண் .தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கு.

(வன்னி மக்களுக்கு நீர் என்ன செய்தீர் என்று கேட்பவர்களுக்கு ...இன்று ஊண்டியலில் 10 ரூபா போட்டனான் இப்படி ஒவ்வோரு நாளும் காசு ஊண்டியலில் போட்டு ,வன்னிமக்கள் மீள் குடியமர்ந்தபின்பு அவர்களுடைய வீட்டை போய் கொடுப்பேன் இன்னும் 10வருடம் சென்றாலும் )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தமிழ்நாட்டு கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

:unsure::wub:<_<

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியில் உள்ள இறுதிப் பகுதியானது, (இந்தியாவுக்கு............) இதனையே சிங்கள அரசும் விரும்புகிறது. தமிழினத்தைத் திட்டமிட்டு அச்சுறுத்தி நாட்டைவிட்டுக் கலைப்பதூடாகத் தமிழினக் குடிப்பரம்பலை இல்லாமற் செய்வதூடாக தமிழரது பாரம்பரியத் தாயகத்தை கபளீகரம் செய்கிறது. செய்துவருகிறது. குறிப்பாக ஒவ்வொரு இடப்பெயர்வும், தமிழினம் தனது நிலத்தினை இழப்பதாகவே அமைந்துள்ளது. 21 வயது நிரம்பிய மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞனுக்கு (தற்போது)இன்றுவரைதனது ஊரைத் தெரியாது. இது போன்று எந்தனை இளையோர் ஏக்கத்தோடு வாடியபடி வாழ்கிறார்கள்.

தமிழக அரசியல்வாதிகளே உங்களிடம் ஒரேயொரு கேள்வி. தயவுசெய்து இப்போதாவது உங்களது கட்சிகளை விட்டுவிட்டு தமிழினம் பற்றிச் சிந்திப்பீர்களாயின் பயனுடையதாக இருக்கும். இற்றைக்கு 1017 ஆண்டுகளின் முன் அருமொழிவர்மனென்ற முதலாம் ராஜராஜனைப் போன்று 20ம் நூற்றாண்டில் பிரபாகரன் என்ற அந்தப் பேருண்மையின் வழிகாட்டலில் ஏற்பட்ட எழுச்சியை உலகத் தமிழினம், குறிப்பாகத் தமிழகத் தலைமைகள் சரியாகப் பயன்படுத்தியிருப்பின் இன்று தமிழருக்கானதொரு தேசம் அமைந்திருக்கும். ஆனால் உங்களது இழுபறிகளும் எம்மின அழிவுக்கு வகைசெய்துள்ளது என்ற கசப்பான உண்மையின் ஊடாகப் புதியதொரு பரிணாமத்தையடைய முயல்வதே பொருத்தமானது. ஆனால் இன்றும் கட்சியரசியல் பற்றிய சிந்தனைகளே மேலோங்கி நிற்பதானது நாம் தெளிவு பெறவில்லையென்பதையே சுட்டி நிற்கிறது. கேவலம் பதவிகளுக்காக, கதிரைகளுக்காகத் தமிழினம் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்ற சிந்தனையே எம்மைச் சீரழித்துச் சின்னாபின்னப்படுத்துகிறது. வேண்டாம்! தமிழக மண்ணில் அப்துல் ரகூப்பும் முத்துக்குமாருக்களும் பிறந்ததே பெருமை. அந்த ஈகங்களின் மண்ணில் ஈனத்தனமான அரசியலுக்காக ஈழத்தமிழினத்தினது வாழ்வோடு விளையாடியது போதும். ஆனால் இதே வேளையில் நாங்கள் மலையாளிகளாகவோ, கன்னடர்களாகவோ இருந்து, மலையாள தேசத்தையோ, கன்னட தேசத்தையோ கோரியிருப்பின் இந்திய வெளியுறவில் சாத்தியமாகியிருக்கும் என்பதோடு எங்கள் தேசியத் தலைவனை செங்கள வரவேற்பு அளித்திருக்கும் இந்தியா. கன்னடர்களும் மலையாளிகளும் அரசியல் ஆண்மையாளர்கள் அதனால்தான் தண்ணியைக் கூடத் தராமல் தண்ணிகாட்டமுடிகிறது.

தமிழகமே போதும். நாங்கள் போராடுவது இரு நாட்டவருக்குமே என்பதில் இ(ஹி)ந்தியம் தெளிவாக இருக்கிறது. அதனால்தான் எம்மையழித்து உங்களுக்குப் பாடம் புகட்ட முனைந்துள்ளது. இனியாவது நீதிக்கான போராட்டத்தில் கட்சிகளுக்கப்பாலான தமிழ்த் தேசியத்தைக் காக்க ஒன்றிணைவதே அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்காக அல்லும்பகலும் உழைத்த ஈழத்துப் பெரியவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்குப் புத்தி சொல்ல வந்துவிட்டார்கள். வாழ்த்துக்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.