Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகாம்களில் உள்ள புலி உறுப்பினர்கள் விடுதலை செய்தால் மீண்டும் பயங்கவாரம் தலை தூக்கும்.

Featured Replies

புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்தால் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்க சந்தர்ப்பம் ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவ ஆதித்யா தெரிவித்துள்ளார்.

புலி உறுப்பினர்களை விடுதலை செய்தால் மீண்டும் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிடக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் 16000 விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தற்போது புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அப்பாவி அகதிகளிடமிருந்து தமிழீழ விடுலைப் புலிகளை வேறுபடுத்திய பின்னரே மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழ் புத்தி ஜீவிகள் இலங்கை நிலவரத்தை தெளிவாக புரிந்து வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில புலி ஆதரவாளர்கள் மற்றும் ஊடகங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இந்த போலியான செய்திகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகள் மட்டுமே நம்பும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல்களின் போது விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு பலத்த தோல்வி ஏற்பட்டதாகவும், தாம் 80,000 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் வாழும் புலம் பெயர் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்து வடக்கை அபிவிருத்தி செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.paranthan.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா அரசினது, அரசபயங்கரவாதத்திற்குத் துணைபுரிய ஐரோப்பிய ஒன்றியம் அனுமதிக்கிறதா? இது தொடர்பான கேள்விகளை அனைத்து நாடுகளையும் சேர்ந்த ஐ.ஒ உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க ஆங்கிலம், பிரான்ஸ், யேர்மன் மொழிகளிலான மடல்களை மொழிபுரிந்தவர்கள் தயாரித்து இணைத்தால் அதனை தமது பகுதியின் ஐ.ஒ. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புவதூடாக இவரது இனவாத முகத்தினை அம்பலப்படுத்த உதவலாம். இதனூடாக இவரது பகுதி மக்களுக்கும் இவரை அம்பலப்படுத்தலாம். யாராவது செய்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதம் என்பதை உச்சரிக்க வெளிக்கிட்டதும்... அதன் மூலம் உலகை ஆக்கிரமிக்க வெளிக்கிட்டதும்.. மேற்குலக நாடுகளே.

சிறீலங்காவில் அவர்கள் மேற்கொண்ட பயங்கரவாத அணுகுமுறை அல்லது கொள்கை வகுப்பு வெற்றி கண்டிருப்பதால்.. அவர்களுக்கு தமது கொள்கையின் வெற்றியை இட்டு மகிழ வேண்டிய தருணங்களும் இருக்கின்றன.

விடுதலைப்புலிகள் அமைப்பின் சில போர் யுக்திகள் குறிப்பாக கரும்புலிகள் பாவனை என்பது இதே பயங்கரவாத உச்சரிப்போடு மேற்குலகம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தோல்வியைத் தழுவ நிற்பந்தித்துள்ளது என்ற கசப்பை அவர்கள் இலகுவில் மறக்கமாட்டார்கள். அப்படியாக உள்ள நிலையில் அவர்களுக்குள்ள ஒரே நிம்மதி விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியே..!

மேற்குலகைப் பொறுத்தவரை அவர்களே இந்தப் பூமிப்பந்தின் மூளைகள். மற்றவர்கள் அவர்களைப் பின்பற்றும் மந்தைகள்..! இந்த அடிப்படைப் பாகுபாட்டை நாம் தான் சரிவர விளங்கிக் கொள்வதில்லை..! விளங்கிக் கொண்டால்.. இப்படியான கேள்விகள் எழாது.

நாம் எமது மூளையை பாவிக்காமல் விட்டதால் எமது சுயநலத்தால் எமது மூளைகளை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள்.. அந்த இடைவெளியில் தமது மூளையைப் பாவித்து தங்களை கெட்டிக்காரர்களாக இனங்காட்டிக் கொள்ள விளைந்துள்ளனர். அதையே ஐரோப்பிய ஒன்றியமும் செய்திருக்கிறது. இந்தியாவும் செய்திருக்கிறது. சீனாவும் செய்திருக்கிறது.

இதே தேசங்கள்.. 2000ம் ஆண்டு ஆனையிறவு வீழ்ச்சியின் பின் என்ன சொன்னன.. என்பதையும் எண்ணிப் பாருங்கள். நாம் எமது தலைவரை அவரின் எண்ணங்களைப் பலப்படுத்தாமல் விட்டதனால் அடையும்.. பலாபலன்களே இவை..! மீள முடியாத நிலைக்கு எம்மை படுகுழியில் தள்ளிவிட துடிக்கின்றனர்.. கொள்கை வகுப்பாளர்கள். அதன் மூலம்.. தம்மை வெற்றி பெற்ற பிதாமகர்களாகக் காட்டிக் கொள்ளத் துடிக்கின்றனர். அப்படியே ஆகட்டும்..! :lol::rolleyes:

Edited by nedukkalapoovan

பலாபலன்களே இவை..! மீள முடியாத நிலைக்கு எம்மை படுகுழியில் தள்ளிவிட துடிக்கின்றனர்.. கொள்கை வகுப்பாளர்கள். அதன் மூலம்.. தம்மை வெற்றி பெற்ற பிதாமகர்களாகக் காட்டிக் கொள்ளத் துடிக்கின்றனர். அப்படியே ஆகட்டும்..! :lol::rolleyes:

தேசிய இனங்களின் வீழ்ச்சியை திட்டமிட்டே பல நூற்றாண்டுகளுக்கு முதலே மேற்குலகு செய்துள்ளது.பல தேசிய இனங்களின் ராசதனிகளை அழித்து அதன் அரசர்களையும் கொலை செய்து தங்களது அரசியல் கொள்கைகளை தினித்தது.

பல்கலாச்சாரத்தில் மக்கள் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் சில மாதிரி நாடுகளை உருவாக்கி விட்டு சென்றுள்ளது

மலேசியாவுக்கு ....சிங்கப்பூர்

இந்தோனேசியாவுக்கு....ஈஸ்டிமோர

Edited by Jil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.