Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழரின் ஆத்மாவின் எதிர்பார்ப்பு

Featured Replies

''ஈழத் தமிழரின் ஆத்மாவின் எதிர்பார்ப்பு''

இந்தியாவை 20 அல்லது 30 நாடுகளாக துண்டாட சீனாவுக்கு யோசனை ---- இணையதள கட்டுரை - ஷான்-லீ

சீனா சிறிது முயற்சி மேற்கொண்டால்' கூட்டாட்சி நாடு' என்று பெருமை பேசி வரும் இந்தியாவை 20 அல்லது 30 நாடுகளாக துண்டாட செய்துவிடலாம் என சீனாவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு நிபுணர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னை குறித்த 13 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற அதே தினத்திலேயே சீனாவுக்கு சர்வதேச மற்றும் இராணுவ விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்கி வரும் சீன சர்வதேச யுத்த தந்திர ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைய தளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

ஷான் லீ என்பவர் எழுதிய அந்த கட்டுரையில்இவரலாறு கூறுவது போன்று இந்தியாவை ஒரே நாடு என்று கூறமுடியாது என்றும்இ இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு இந்து மதத்தையே பிரதானமாக நம்பியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவை சாதியை அடிப்படையாக கொண்ட" இந்து மத நாடு " என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ள லீ சீனாவின் சொந்த நலன் மற்றும் ஒட்டுமொத்த ஆசியாவின் வளர்ச்சி ஆகியவற்றுக்காக இந்தியாவை 20 அல்லது 30 நாடுகளாக துண்டாட செய்யலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சாதி பிளவுகளை மனதில் கொண்டு அஸ்ஸாமியர்கள்இ தமிழர்கள் மற்றும் காஷ்மீரிகள் போன்ற வேற்று தேச அடையாளங்கள் கொண்ட சக்திகளுக்கு ஆதரவளித்து அவர்களுடன் சேர்ந்து இந்தியாவை எளிதாக பல நாடுகளாக சிதறுண்டுப் போகச் செய்துவிடலாம் என்றும் குறிப்பாக சுதந்திர அஸ்ஸாம் கோரி வரும் உல்ஃபா அமைப்புக்கு சீனா ஆதரவளிக்கலாம் என்றும் அந்த கட்டுரையில் சீனாவுக்கு யோசனை கூறியுள்ளார் லீ.

மேலும் இந்தியாவை பல நாடுகளாக உடைப்பதற்கு பாகிஸ்தான் நேபாளம் மற்றும் பூடான் போன்ற நட்பு நாடுகளின் உதவியையும் சீனா கோரலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பா போன்று இந்தியா பல நாடுகளாக உடைந்தால் அதன் மூலம் இந்தியாவில் காணப்படும் சாதி அமைப்பு ஒழிந்துஇ பிராந்தியங்கள் வளர்ச்சியை நோக்கி செல்லும் என்றும்இ அதுமட்டுமல்லாது தெற்காசியாவில் சமூக சீர்திருத்தத்தையும் அடைய முடியும் என்றும் அந்த கட்டுரையில் லீ மேலும் கூறியுள்ளார்.

ஈழதேசம்.கொம் குழு

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவைப் புறந்தள்ளி இந்துத்துவமென்னும் போலி முகத்திற்கு அஞ்சி வங்காள விரிகுடாவில் தன்மானமிழந்து நிற்கிறது தமிழ்த் தேசியம். சீனா போன்ற பெருவல்லரசுகள் இந்த இழிநிலையைப் போக்கத் திடசங்கற்பம் பூண்டு இந்தப் பிராந்தியத்தில் தமிழ்த் தேசியம் எழுச்சிபெற உதவினால் தமிழ்த்தாய் நிச்சயம் நன்றிப் பெருக்கோடு உலகமுள்ளவரை சீனாவை நினைவு கூருவாள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தகாலப்பகுதியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்க நிகழ்வில் பொருளியல் பேராசிரியர் திரு வரதராஜன், பொருளியல் ஆசிரியர் திரு குமாரவேல், யோகரத்தினம் யோகி மற்றும் பல கல்விமான்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள் அக்கருத்தரங்கின் முடிவில் தீர்மானகாக் ஒரு பொழிப்புரை வழங்கப்பட்டது அதுவெதுவெனில் "இந்தியா எனும் உபகண்டம் இன அடிப்படையிலான சிறு சிறு நாடுகளாகப் பிளவுபடுமாகவிருந்தாலே தமிழீழம் சாத்தியமானதாகும், இவை நடந்தேறுவதற்கு பலவருடங்கள் தேவைப்படலாம் அனால் இந்திய உபகண்டம் நிச்சயமாகப் பிளவுபட்டேயாகும் என்பதை ஆணித்தரமாக அவர்கள் கூறினார்கள்.

அதற்கான ஆரம்பம் இப்போதல்ல எப்போதோ தொடங்கி விட்டது.

இன்னுமொரு செய்தி, எமது தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் இந்தியாவில் இருந்த காலப் பகுதியில், சோவியத் யூனியன் துண்டாடப்படவில்லை. ஆனால் அங்கு பல களமாற்றங்கள் ஆரம்பமாகத் தொடங்கியிருந்தது இதனைப்பற்றி தேசியத்தலவர் தனது கருத்தில் "இதே நிலை சோவியத் ஒன்றியத்தில் தொடருமாகவிருந்தால், அந்நாடு துண்டு துண்டாக விரவிலேயே பிளவுபட்டுப் போகும் எனக் கூறியிருந்தார். அப்போது திரி அன்ரன் பாலசிங்கம் அண்ணர் அவர்களும் உடனிருந்து அவரது கருத்தினை அவதானித்திருந்தார். சிறிதிகாலத்தில் அந்நாடு சிதறுண்டுபோனது. பின்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிப் போராளிகட்கு பாலா அண்ணர் அரசியற் பாடமெடுக்கும்போது தலைவர் கூறிய கருத்து சாத்தியப்பட்டதியும் அப்போதே தலைவரிற்கு உலக அரசியலின் ஒழுங்குமுறையை அவதனிக்கக்கூடிய அறிவாற்றலிருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நண்பர்களே எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரவாகரன் அவர்களது சீரிய சிந்தனையின்மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஏற்கனவே தலைவரால் தீர்மானித்த பாதையிலேயே பயணம் செய்கிது தனது இலக்கினையடையுமென்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.