Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13வது அரசியல் சாசனத் திருத்தத்தின்மூலம் நாடு காட்டிக் கொடுக்கப்படவுள்ளது – சரத்பொன்சேகா – கோபத்தை தணிக்க ராஜபக்ஸ சகோதரர்கள் முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசாங்கம் 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய கூட்டுப்படை தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேக்கா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

சரத் பொன்சேக்கா மின்னஞ்சல் மூலம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். 13வது அரசியல் திருத்தம் மூலம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், இலங்கையில் வாழும் சகல இனங்களின் எதிர்பார்ப்பிற்கு முரணாகவே இதனை நாட்டு மக்கள் மீது சுமத்தியிருக்கின்றன.

13வது அரசியல் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், போரினால் வெற்றிகொள்ள முடியாதுபோன ஈழத்தை அவர்களுக்கு வழங்குவதாக அமைந்துவிடும் என சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். தான் சிறிய வயது பாடசாலை மாணவனாக இருந்தபோது இலங்கையை ஒன்றிணைத்த மன்னனான துட்டகைமுனு மாமன்னன் குறித்து கேட்டறிந்துகொண்டதாகவும் தற்போது நாட்டு மக்கள் சுவாசிக்கும் இந்த சுதந்திரமும் மகிழ்ச்சியும் அன்று துட்டகைமுனு இலங்கை மண்ணுக்கு பெற்றுக் கொடுத்ததாகவும் அவர் தமது தாய் மண்ணுக்குச் செய்த கொடையையே தாம் உள்ளிட்ட படையினர் செய்துள்ளதாகவும் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டு;ள்ளார். எனினும், எதிர்காலத்தில் இந்த சுதந்திரம் இலங்கையரை போய்விடுமோ என்ற பாரிய அச்சத்தில் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரிவினைவாதம் வேறு வழியில் முன்நோக்கி வந்து கொண்டிருகின்றது.இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிலிருந்து தமது தாய் மண்ணைப் பாதுகாப்பதே இலங்கையர் தமது முழுமையான இலக்காகக் கொள்ளவேண்டும். தாம் பிரிவினைவாதத்தைத் தோற்கடித்து தமது நாட்டின் பிரதான அரசியல் நீரோட்டத்தை வலுப்படுத்தியதாகவும் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன், நாட்டைப் பிரிப்பது தொடர்பாக அரசியல்வாதிகள் வேறுவிதமாக செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இதற்காக அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வான 13வது திருத்தம், இலங்கை பெற்ற யுத்த வெற்றியைக் காட்டிக் கொடுப்பதாக அமையும். அத்துடன், இந்த விடயம் இறுதியில் நாட்டிற்குள் பிரிவினை உருவாக்குவதாக ஏதுவாக அமைந்து விடும்.

நாட்டின் முன்னாள் அரசியல்வாதிகள் 1987ம் ஆண்டில் இந்தியாவின் தாளத்திற்கு ஆடியதைப் போன்று தற்போதைய அரசியல்வாதிகளும் தமது சுயநலத்திற்காக ஆடுவதற்கு முயற்சித்தால், அண்மையில் இலங்கை பெற்றுக்கொண்ட யுத்த வெற்றியானது முழுமையாக மழுங்கடிக்கப்பட்டு, அது பயனற்றதாகி விடும் இலங்கையின் அயல்நாடு இந்த விடயத்தில் ஆபத்தான அனர்த்தமாக அமைந்துள்ளது.

இந்தியா, இலங்கைக்கு ஒருபோதும் நல்லெண்ணத்துடன் உதவிகளை செய்ததில்லை. அவர்கள் அனைத்தையும் சுயநலத்திற்காகவே மேற்கொண்டனர். இதன்மூலம் இலங்கைக்குள் குறுகியகால அல்லது நீண்டகால பிரச்சினையை உருவாக்குவதை மாத்திரமே அவர்கள் செய்தனர். பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை போரிட்ட சந்தர்ப்பத்தில், இந்தியாவிடம் உதவுமாறு கோரியபோது நடந்தவற்றை எவரும் மறக்க முடியுமா? அவர்கள் தென்னிந்தியாவின் அழுத்தங்களுக்கு அஞ்சினர்.அவர்களின் உதவியை எதிர்பார்த்த இலங்கையின் நீண்டகால நட்பிற்கு இந்திய மதிப்பு கொடுக்கவில்லை.

இலங்கையில் பயங்கரவாதத்தை முழுமையாக துடைத்தெறிவதற்காக உதவிய, பாகிஸ்தான், சீனா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மேலும் சில நாடுகளுக்கு இலங்கை நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளது. 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தனக்கு மாத்திரமல்லாது நாட்டின் சகல மக்களின் எதிர்பார்ப்பிற்கும் முரணானதாக அமைந்துவிடும் என தெரிவித்துள்ள சரத் பொன்சேக்கா, இந்த நிலையைத் தடுக்க வெற்றிகொண்ட இந்த மண்ணைப் பாதுகாப்பதற்காக மிக உயரிய தியாகங்களைச் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் கைகோர்த்துக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளைத் தடுப்பதற்காகவும் எவ்வாறான அர்ப்பணிப்புக்களைச் செய்யவும் தான் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோபத்தில் இருக்கும் சரத் பொன்சேக்காவை, மீண்டும் நட்புறவாக்கி கொள்ள ராஜபக்ஷ சகோதர்கள் முயற்சி:

ராஜபக்ஷ சகோதர்களுடன் கோபத்தில் இருக்கும் ஜெனரல் சரத் பொன்சேக்காவை, மீண்டும் நட்புறவாக்கி கொள்ளும் நோக்கில், இராணுவ சேவை அதிகாரச் சபை தலைவர் பதவியை சரத்பொன்சேக்காவின் மனைவியான அனோமா பொன்சேக்காவுக்கு வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியிடம் யோசனை ஒன்றை முன்வைத்திருப்பதாக அலரி மாளிகைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேக்கா இராணுவத் தளபதியாக கடமையாற்றிய போது, இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவியாக பணியாற்றிய அனோமா பொன்சேக்கா, இராணுவத்தினர், அவர்களது குடும்பங்கள் மற்றும் போரில் உடல் அங்கவீனமான இராணுவத்தினருக்கும் பாரிய சேவைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிரந்த தலைவர் ஒருவர் இல்லாமலேயே இராணுவ சேவை அதிகார சபை இயங்கி வருகிறது. அதன் பதில் தலைவராக ஜெனரல் பாலித பெர்ணாந்து பணியாற்றி வருகிறார். அவர் விளையாட்டு உள்ளிட்ட வேறு துறைகளில் பணி சுமைகளை கொண்டுள்ளதால், இராணுவ சேவை அதிகாரச் சபைக்கு நிரந்தர தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கவனம் செலுத்தியுள்ளதுடன், அந்தப் பதவியில் சரத் பொன்சேக்காவின் மனைவியை நியமிக்குமாறு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்தும் மேலும் இரண்டு அல்லது ஒரு வருடம் இராணுவத் தளபதியாக பதவியில் நீடிக்க விரும்பிய ஜெனரல் சரத் பொன்சேக்காவை, அந்த பதவியில் இருந்து அகற்றி, அதிகாரங்கள் அற்ற கூட்டுப்படை தலைமை அதிகாரியாக நியமித்தமை மற்றும் அவரது பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் குறைக்கப்பட்டமை தொடர்பாக சரத் பொன்சேக்கா, ராஜபக்ஷ சகோதரர்களுடன் முரண்பாடுகளை கொண்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

மூலம் - GTN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.