Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஜனி காந்த், வைகோ மற்றும் ராம்தாஸ் ஆகியோர் புலிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுள்ளனர் – ரிசாட் பதியூதீன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக போற்றப்படும் ரஜனி காந்த், அரசியல்வாதிகளான வை.கோ மற்றும் ராம்தாஸ் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளில் இயங்கி வரும் தமிழ் வானொலிச் சேவைகள், தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வியாபார முயற்சிகளுக்கு புலிகள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

குறித்த ஊடகங்கள் வெறுமனே இலங்கை அரசாங்கம் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடுத்து, தமிழ் புலம்பெயர் மக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதனை விளக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக எண்ணிக்கையிலான தமிழ் இணைய தளங்கள் புலம் பெயர் தமிழர்களின் பணத்தைக் கொண்டு இயங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொல் திருமாளவன், வை.கோ, ராம்தாஸ் மற்றும் நெடுமாறன் போன்ற தமிழக அரசியல் தலைவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பம் முதலே நிதியுதவிகளை வழங்கி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில தமிழ்த் திரைப்படங்களை இயக்குவதற்காக புலிகள் பணம் வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லண்டனில் உள்ள தமிழர்கள் பெரும் தொகையான பணத்தை செலவிட்டு தமிழகத்தில் திரைப்படங்களை தயாரித்துள்ளதாகவும், ரஜனி காந்திற்கும் இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், ரஜனிகாந்திற்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பது குறித்து அவர் எந்தக் கருத்தக்களையும் வெளியிடவில்லை.

புலம் பெயர் தமிழர்களினால் பயன்படுத்தப்படும் இரத்தம் படிந்த பணத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம் - GTN

Edited by ஜீவா

***

உவையள் சதாம் குசைனிடமும் ,பின்லாடனிடமும் பணம்வாங்கி ஜிகாத் அமைப்புக்கு கொடுத்தை யார் சொல்லுரதாம்

Edited by வலைஞன்
மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

அனர்த்த முகாமைத்துவ மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்காக உலகம் கொடுக்கும் பணத்தை அடித்து கொண்டு மக்களை வாட்டி வதைத்து கொண்டு ஏனையவர்கள் பற்றி கதைக்க என்ன அருகதை உடையவர் இவர்.

புலம் பெயர் தமிழர்களினால் பயன்படுத்தப்படும் இரத்தம் படிந்த பணத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

50 ஆயிரம் மக்களை கொன்றழித்தவர் கொலையாளிகள் வெளிநாட்டு தமிழர்களின் வியர்வை படிந்த பணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.