Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் மத்தியில் புலிகள் மீதான ஆர்வம் தலைதூக்க ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் நடமாட்டம் அற்றுப்போயுள்ள நிலையிலும் தமிழக மீனவர்கள் மீது படையினர் நடத்திவரும் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதையடுத்து, புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் தமக்கு பாதுகாப்பு அரண்களாக செயற்பட்டனர் என்ற அபிப்பிராயம் தமிழக மீனவர்கள் மத்தியில் தற்போது தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு, பெரும்பாலான தமிழக கடலோர மீனவ கிராமங்களில், விடுதலைப் புலிகள் ஆதரவு குறைந்து சென்றது. ஆனால் தற்போது, இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ந்து வந்த மோதல் தமிழக மீனவர்கள் மீது திசை திருப்பப்பட்டுள்ளது. இதனால் தமிழக மீனவர்கள், விடுதலைப்புலிகள் தங்களுக்கு அரணாக இருந்து வந்ததாக நினைத்து, மீண்டும் புலிகள் மீது இரக்கமும், பாசமும், பரிவும் காட்ட ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக, தமிழக கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் அதைச் சார்ந்த நகரங்களில் புலி ஆதரவு அரசியல்வாதிகள் உரமேற்றி வருவதும், மறைமுகமாக ஆரம்பித்துள்ளது.

படையினரின் தாக்குதல்கள் நிலைமையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராவிட்டால், மீண்டும், தமிழக கடலோரங்களில் இருந்து விடுதலைப் புலிகள் ஆதரவு எழும் அபாயம் உள்ளது

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=17178

  • கருத்துக்கள உறவுகள்

படையினரின் தாக்குதல்கள் நிலைமையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராவிட்டால், மீண்டும், தமிழக கடலோரங்களில் இருந்து விடுதலைப் புலிகள் ஆதரவு எழும் அபாயம் உள்ளது

இதனால் வீரகேசரிக்கு ஆத்திரமா? இல்லை ஆதங்கமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரகேசரியை நம்ப முடியாது

அதைத்தான் நானும் நினைத்தேன்.. தமிழக கடலோரங்களில் இருந்து விடுதலைப் புலிகள் ஆதரவு எழும் அபாயம் உள்ளதாம்!!

இதனால் வீரகேசரிக்கு ஆத்திரமா? இல்லை ஆதங்கமா?
  • கருத்துக்கள உறவுகள்

இது ஆரம்பமே...

பாகிஸ்தான் மற்றும் சீனாவின், இந்தியாவைத் துண்டாடும் கோட்பாடு, அன்றேல் தென்னகத்து கடற்பிராந்தியங்களை தாக்குதல் வலையமாக்குதல் போன்ற திட்டங்களின் ஒருபகுதியே இவை. இதன்மூலம் தென்னக்த்தின் கரையோரப் பிரதேசங்களில் இந்திய ஒருமைப்பாட்டின் மீதான நம்பிக்கையத் தகர்ப்பதும் அதன்பின்பு தமக்கு சார்பானவர்களை இனங்கண்டு, தம்முடன் ஒத்துழைப்பதற்கு ஆயுத்தப்படுத்தல், இவைமூலம் இந்தியாவில் கலவரங்களை உருவாக்கி அந்நாட்டைச் சின்னாபின்னமாக்குதல். இக்குறிக்கோளுடனான திட்டங்கள் எப்போதோ நடைமுறைப்படுத்தப்பட்டு அவை தற்போது பயன் தர ஆரம்ம்பித்துள்ளன. இவை அனைத்தும் "பஸீர்வலி" எனும் பாகிஸ்தானிய உளவுத்துறையைச் சேர்ந்தவர், சிறீலங்காவின் பாகிஸ்தானுக்குரிய தூதராக நியமனம் பெற்று வரும்போதே ஆரம்பித்துவிட்டன. கோவிந்தா கோ கோ கோவிந்தா.......

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான்காரணோ அன்றேல் சீனாக்காரணோ எனது ஊருக்கு வந்து அங்கிருந்து இந்தியாவை நோக்கி அணுகுண்டினை ஏவப்போகிறேன் சிறிது விலத்தியிரு எனக்கூறினால் விலத்தியிருப்பதென்ன தாராளமாக போடு அதுவும் இலக்கு கோபாலபுரமாக இருக்கவேண்டும் (அங்குதானே கருனாநிதித் தாத்தா வாழ்கிறார்)னான் எங்காவது காடு வனாந்தரம் போய்விடுகிறேன் போட்டபிறகு வருகிறேன் எனக் கூறிவிடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா வீரகேசரியோடு போறிங்க? இது தினமலர்ல வந்த செய்தி...

வழமைபோல தன்னோட புலி எதிர்ப்பு ஈழத்தமிழர் எதிர்பை மீண்டும் ஒரு முறை கக்கி இருக்கிறது தினமலர்....

மான் செத்தால் யானை செத்தால் அதை தன்னுடைய பக்கங்களிலே அடித்து பிடித்து செய்தியாக போடுகின்ற தினமலருக்கு இலங்கையிலே இவ்வளவு படுகொலைகள் நடந்ததே அவைகளை வெளிகொண்டுவரவேண்டும் என்ற மனிதாபிமானம் சற்று கூட இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய வீரகேசரியின் செய்திப்பிரிவில் பல மழையகத்தமிழர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் பலர் இந்திய விசுவாசம் உடையவர்கள். அதாவது றோவின் புத்திமதியில் வேலை செய்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.