Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் ஏமாற்றப்பட்ட நோர்வே தமிழர் இந்திய கரையில் புலம்பல்!

Featured Replies

7716_1130102525336_1010411925_30490313_7526987_n.jpgமனிதம் - மனித உரிமை அமைப்பு, தமிழகத்தில் அகதியாக வந்து, மாட்டிக் கொண்டுள்ள நார்வே தமிழருக்கு உதவி செய்ய தயாராய் உள்ளது. அவரது நண்பர்கள், கூடுதல் தகவல் அளித்தால், இத்தமிழரை உடனடியாய் காப்பாற்றி, நாடு திரும்ப உதவலாம்.

மாட்டிக்கொண்டுள்ள நார்வே தமிழர் பலச் சந்திரன் பற்றிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நார்வே தமிழர்கள் உதவுவார்களா?

ராமேஸ்வரம்:வெளிநாட்டு பணத்துடன் தனியாக வந்த இலங்கையைச் சேர்ந்த இன்ஜினியரான அகதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவபாலச்சந்திரன்(48). இலங்கையில் தொடர்ந்த சண்டையால், நார்வே சென்ற இவர், ஆஸ்லே நகரில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து, அங்கேயே பணியாற்றி நார்வே குடியுரிமை பெற்றுள்ளார்.

இவர், இலங்கையில் சண்டை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து வவுனியா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தனது சகோதரனை பார்க்க, இரண்டு மாதத்திற்கு முன் இலங்கை வந்துள்ளார்.வவுனியா முகாமில் சகோதரனையும், அவரது மனைவியையும் சந்தித்தபின் இருவரையும் இந்தியாவிற்கு அழைத்துவர முயற்சித்துள்ளார். இலங்கை ராணுவத்தால் சிவபாலசந்திரனுக்கும் பிரச்னை ஏற்பட்டதால், வவுனியாவிலிருந்து மன்னார் வந்து அங்கிருந்து படகில் அகதியாக ராமேஸ்வரம் வந்தார்.

தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன் வந்த அவரிடம் போலீசார் சோதனை செய்ததில், நார்வே நாணயமான குரோனி 4,700, இங்கிலாந்து பவுண்டு 25, அமெரிக்க டாலர் 2,550, இலங்கை பணம் ஒன்றரை லட்சம் மற்றும் ஒரு மொபைல்போன் இருந்தது.

அகதி சிவபாலசந்திரன் கூறும்போது, "வவுனியா முகாமில் உள்ள சகோதரனையும், அவரது மனைவியையும் முகாமில் இருந்து வெளியே அழைத்து வர அங்குள்ள ஏஜன்ட் ஒருவரிடம் ஒன்பது லட்சம் ரூபாய் கொடுத்தேன். பணத்தை வாங்கிக்கொண்டு, என்னையும் இலங்கை ராணுவத்திடம் பிடித்து கொடுத்துவிடுவதாக மிரட்டினார்.

"வேறு வழியின்றி, வவுனியாவிலிருந்து ராணுவத்திற்கு தெரியாமல் மன்னார் வந்து இங்கு அகதியாக வந்தேன். படகு கட்டணமாக ஒன்றேகால் லட்சம் ரூபாய் இலங்கை படகோட்டியிடம் கொடுத்தேன்' என்றார். அவரை போலீசார் விசாரணை செய்து மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நோர்வே குடியுரிமை பெற்றவராயின் இவருக்கு வெளிநாடுகளில் ஏற்படும் பிரச்சினைகளை நோர்வே வெளிநாட்டு அமைச்சின் மூலம் நோர்வே தூதரகத்தினூடாகத்தான் தீர்க்கப்படமுடியும்.

பிரச்சினையின் உள்ளார்ந்தம் பற்றி சரியாக தெரியாமல் தனிநபர்கள் தலையிட்டு ஏதாவது செய்ய முன்வருவதாயின் அவரை நன்கு அறிந்த நண்பர்கள் அல்லது உறவினர்கள்தான் ஏதாவது நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.

அவர் டெல்லியில் உள்ள நோர்வே தூதரகத்துடன் தொடர்பை ஏற்படுத்தினால் இலகுவாக உதவி செய்வார்கள்.

நோர்வேயில் பொறியியல் படித்தவர் என்றால் சரளமாக நோர்வேயிய மொழி கதைப்பார்.

http://www.norwayemb.org.in/info/Embassy.htm

டில்லியில் உள்ள நோர்வே தூதரக இணையவலை. தொலைபேசி எண்கள்ள் எல்லாம் உள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வவுனியா முகாமிலிருக்கும் சகோதரனை மீட்டுச் செல்வதற்காக நோர்வேயிலிருந்து வந்த ஒருவரிடம், உதவி செய்வதாக கூறி ரூ.9 இலட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்ட முகவர், குறித்த நபரை இராணுத்திடம் பிடித்து கொடுத்து விடுவதாக மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

மன்னாரிலிருந்து படகில் இராமேஸ்வரத்தை வந்தடைந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவபாலச்சந்திரன் (48) என்பவரே இவ்வாறு கூறியுள்ளார்.

தனுஸ்கோடி பொலிஸ் நிலையத்திற்கு வந்த அவடம் பொலிஸார் சோதனை செய்ததில், நோர்வே நாணயமான 4,700 குரோனர், இங்கிலாந்து பவுண்டு 25, அமெரிக்க டொலர் 2,550, இலங்கை பணம் ஒன்றரை இலட்சம் மற்றும் ஒரு மொபைல்போன் ஆகியன இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின்போது, இவர் இலங்கையில் தொடர்ந்த சண்டையால், நோர்வே சென்று, அந்நாட்டு குடியுமை பெற்றுள்ளார். இலங்கையில் சண்டை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து வவுனியா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தனது சகோதரனைப் பார்க்க, இரண்டு மாதத்திற்கு முன் இலங்கை வந்துள்ளார்.

வவுனியா முகாமில் சகோதரனையும், அவரது மனைவியையும் சந்தித்தபின் இருவரையும் இந்தியாவிற்கு அழைத்துவர முயற்சித்துள்ளார். அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டதால், வவுனியாவிலிருந்து மன்னார் வந்து அங்கிருந்து படகில் அகதியாக இராமேஸ்வரம் வந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் சிவபாலசந்திரன் கூறும்போது, வவுனியா முகாமில் உள்ள சகோதரனையும், அவரது மனைவியையும் முகாமில் இருந்து வெளியே அழைத்து வர அங்குள்ள முகவர் ஒருவரிடம் ஒன்பது இலட்சம் ரூபாய் கொடுத்தேன்.

பணத்தை வாங்கிக்கொண்டு, என்னையும் இராணுவத்திடம் பிடித்து கொடுத்து விடுவதாக மிரட்டினார்.

வேறு வழியின்றி, வவுனியாவிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாமல் மன்னார் வந்து இங்கு படகில் வந்துவிட்டேன். கட்டணமாக ஒன்றேகால் இலட்சம் ரூபாய் இலங்கை படகோட்டியிடம் கொடுத்தேன் என்றார். அவரை விசாரணை செய்த பொலிஸார் மண்டபம்

முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலதிக செய்திகளுக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் மனித உரிமை அமைப்பு தற்சமயம் இவரிற்கும் நோர்வே தூதரகத்திறகுமான தொடர்பினை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாக அந்த அமைப்பின் ஒருவரான அக்கினி சுப்பிரமணியம்.. அவர்கள் என்னுடன் கதைத்தபொழுது குறிப்பிட்டிருந்தார்..அந்த நபரின் உறவினர்கள் யாராவது வெளிநாடுகளில் இருந்தால் அவரிற்கு உதவிசெய்யவே அல்லது வேறு அவரைப்பற்றிய வேறு தகவல்கள் பெறவிரும்பினால் மனிதம் அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தரமுடியும்..

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.