Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனிக்கு ஒரு விரதம்

Featured Replies

வணக்கம் எல்லோருக்கும்

நாளைய சனி எல்லாச் சனி நாட்களிலும் விசேடமானது. அதாவது சனியனுக்காக விரதம் பிடிக்கும் நாள். யாருக்காவது சனியன் பிடித்திருந்தால் அல்லது பிடிக்கப்போவதாய் இருந்தால் அதற்காக விரதம் பிடித்து மன்றாடி அவரை எங்களை விட்டு போகச் சொல்லியோ அல்லது தயவு செய்து எங்களிடம் வரவேண்டாம் என்று சொல்லி எள்ளு எண்ணையில் விளக்கு எரிக்கும் நாள். இதனை தொடர்ந்து நான்கு சனி கிழமைகளில் அனுஷ்டிப்பார்கள். இந்த எள்ளு எண்ணை எரிப்பதை நீங்கள் நவராத்திரி புiஐ தொடங்கும் முன் எரிக்கவேண்டும். நவராத்திரி புiஐ தொடங்கினால் எள்ளு எண்ணை எரிப்பது நன்றன்று.

அது சரி சனி பெருமானுக்கு ஏன் எள்ளு எண்ணையில் விளக்கு எரிக்கவேண்டும்? உங்களில் யாருக்கவாது விபரம் தெரியுமா?

உவர் சனியனுக்கும் எனக்கும் நீண்டநாள் தொடர்பு பிறந்ததில் இருந்தே என்நோடதான் திரியிறார் என்ர உற்ற நண்பண்

நீண்ட நாள் லவ் இப்பிடி திடீர்ரென களட்டி விடச்சொன்னா எப்பிடி? எதுக்கும் பாப்பம் இஞ்ச நாலய்ந்து பெரிசுகள் தள்ளாடுகினம்தானே ஏதாவது உருப்படியா சொன்னா கேட்டுப்பார்பம்...

சனியன் எண்டது பிள்ளை வேறை யாருமில்லை சில பேருக்கு வாழ்க்கைத் துணை வடிவிலும் சில பேருக்கு சினேகிதங்கள் வடிவில் மேலும் சிலருக்கு வேலைத்தளத்தில மேலதிகாரிகள் வடிவிலும் வரும் இதுக்கு எள்ளு எண்ணெய் ஒண்டும் சரிவராது சும்மா பம்மாத்து வேலை நானும் சனி விரதமிருந்து எள்ளெண்ணை எரித்து சனியனை கழட்டிவிடத்தான் அம்மன் கோயிலுக்கு போனனான்... ஆனா அங்கை வேறை ரூபத்திலை என்னை சனியன் பிடிச்ச கதையை யாரிட்டை சொல்லி அழுகிறது (முதல் முதல் பொண்ணம்மாக்காவை அங்கைதான் கண்டனான்)

  • தொடங்கியவர்

ஐய்யோ முகத்தார் அப்படிச் சொல்லாதைங்கோ! பொன்னம்மாக்கா தான் பாவம். அவா முருகன் மாதிரி எனக்கு கணவரை தா என்று கும்பிட அம்மன் கோயிலுக்கு போயிருப்பா. இடையில் சனியன் நான் சொல்வது சானிஷ்வரன் மாதிரி நீங்கள் எல்லோ போய் அவாவின் காலை பிடித்து விட்டிர்கள். என்றாலும் பொன்னம்மாக்கா ஸ்மார்ட் தான் சனிஸ்வரனையே வைத்து நல்ல வேலை வாங்கின்றா

அப்ப கடவுள் பெம்பிளையளுக்கு நல்லதைச் செய்யிறார் எங்கிறீங்க...எங்களை கண்டுக்கிறாரே இல்லை...ஓ கடவுளும் ஆம்பிளைதானே பிறகு எங்கை எங்கடை பக்கம் நிக்கப் போகிறார் இதோடா பொண்ணம்மாக்கு... முருகன் இதுக்கு அவ வள்ளி . தெய்வானை மாதிரி எல்லோ இருக்க வேணும் இது பாத்தா...........???

  • தொடங்கியவர்

என்ன முகத்தார் பொன்னமக்கா வள்ளி அல்லது தெய்வானை மாதிரி இருந்தபடியால் தானே அம்மான் கோயிலுக்கு போய் அம்மனை தரிசனம் செய்யமால் பொன்னமாக்கவை தரிசனம் செய்தனீங்கள். ஏன் இப்ப கூறை கூறுகிறீர்கள்?

என்ன சுன்னாகம்சந்தையடியிலை ஒரே சத்தமாக்கிடக்குது வியாபாரம்களைகட்டுதுபோல...

என்ன சுன்னாகம்சந்தையடியிலை ஒரே சத்தமாக்கிடக்குது வியாபாரம்களைகட்டுதுபோல...

அதுவா பிள்ளை வேறை யெண்டுமில்லை உவ RaMa சந்தைக்கு எள்ளும் எண்ணெயையும் விற்க வந்தவ.. அதிலை சின்னப் பிரச்சனை நீங்க ஒண்டும் டென்சன் ஆகாதைங்கோ...

நானும் சனி விரதமிருந்து எள்ளெண்ணை எரித்து சனியனை கழட்டிவிடத்தான் அம்மன் கோயிலுக்கு போனனான்

அம்மன் கோயில்ல நவகிரகம் இருக்குமா :roll: எனக்கு சரியாக தெரியவில்லை,

எல்லோரும் கவனம்.கோயிலுக்கு போகும்போது குதிக்காலை நன்றாக கழுவுங்கள்.

சனிக்கு ஒரு விரதம்

இது என்னண்டு வாழ்த்து,துயர்பகிர்வுக்கு வந்தது.

சனி எல்லாரையும் விட்டு போறான் எண்டு ரொம்ப :lol: ? அல்லது :lol: ?

:(:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மன் கோயில்ல நவகிரகம் இருக்குமா :roll: எனக்கு சரியாக தெரியவில்லை,

ஒம் அம்மன் கோயிலில் நவக்கிரகங்கள் இருக்கின்றன ? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் பிடித்திருப்பன் ஆனால் சுவிசில் காகம் இல்லை முறையாக காகத்துக்கு சோறு வைத்துத் தான் நாங்கள் சாப்பிடனேம் அதனால் ? நான் சனியனுக்கு விரதம் பிப்பதில்லை எல்லாம் ஆண்டவன் செயல் என்று தான் இருப்பன் என்கள் சொந்த ஊர் என்றாலும் பறவாயில்லை எப்பவும் புனிதமாக எல்லா விரதமும் பிடிக்களாம்

சனிக்கிரகம் வாயுவினால் ஆனது. 75 விழுக்காடு நீரகமும் (hydrogen) 25 விழுக்காடு பரிதியம் (helium) இவற்றினால் ஆன கோள். எடைமானத்தில் மிகக் குறைந்த தனிமம் நீரகமாகும். தண்ணீரோடு ஒப்பிடும்போது அதன் வீத எடைமானம் ( 0.7) ஆகும். உட்புறம் பாறைகளினால் ஆனது. வியாழனுக்கு அடுத்த பெரிய கோள். பூமியில் இருந்து சுமார் 8,500,000 கிமீ (6,300,000 மைல்) தூரத்தில் உள்ளது. அதன் விட்டம் மத்திய கோட்டில் 120, 536 மிமீ. திண்மம் 5.68 கிலோகிராம். சூரியனை 1,429,400,000 கிமீ தூரத்தில் சுற்றி வருகிறது.

சனிக்கோளை 30 உபகோள்கள் சுற்றி வருகின்றன. வரலாற்றுக் காலத்துக்கு முன்னர் இருந்தே சனிக் கோள் பற்றி மனிதர்களுக்குத் தெரிந்திருந்தது. ரோமரது புராணக் கதையில் சனி பயிர்த்தொழிலின் கடவுள். கிரேக்கத்தில் சனியை குறோனஸ் (Gronus) கடவுள் என அழைத்தார்கள். இந்தக் கடவுள் Zeus (வியாழன்) கடவுளின் தந்தை. சனிக் கோளை தொலைநோக்கி மூலம் பார்த்த (கிபி 1610) முதல் மனிதர் கலிலியோதான். அதனைக் காகம் போல கன்னங்கரிய கோளாகச் சோதிடம் சித்திரித்தாலும் அது உண்மையில் பார்ப்பதற்கு மிகவும் ஒளிமயமான கோள்.

பூமியில் இருந்து இவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு கோள் இங்குள்ள ஒருவரது வாழ்க்கையின் போக்கை, அவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில், எப்படிப் பாதிக்க முடியும் என்பதையிட்டு யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. சரி அப்படித்தான் பாதிக்கிறதாக வைத்துக் கொண்டாலும் அதற்கு விரதம் இருந்து எள்ளெண்ணைச் சட்டி எரித்தால் அந்தக் கிரகத்தைத் திருப்திப் படுத்திவிட முடியுமா? திருப்திப்படுத்தலாம் என நினைத்து நவக்கிரகங்களை சுற்றுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

http://sooriyan.com/index.php?option=conte...=1617&Itemid=34

ஒம் அம்மன் கோயிலில் நவக்கிரகங்கள் இருக்கின்றன ? :(

நானும் பிடித்திருப்பன் ஆனால் சுவிசில் காகம் இல்லை  முறையாக காகத்துக்கு சோறு வைத்துத் தான்  நாங்கள் சாப்பிடனேம்  அதனால் ? நான் சனியனுக்கு விரதம் பிப்பதில்லை எல்லாம் ஆண்டவன் செயல் என்று தான் இருப்பன் என்கள் சொந்த ஊர் என்றாலும் பறவாயில்லை எப்பவும் புனிதமாக எல்லா விரதமும் பிடிக்களாம்

ஏன் ஸ்விஸுக்கு சனியர் வருவார் எண்டால் காக்கையாரும் வருவார் தானே. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் எள்ளெண்ணை சிவன் கோயிலில் தான் எரிக்கிறது. நீங்கள் மாறி போனதால்(அம்மன் கோயிலுக்கு) தான் பொன்னம்மாவிடம் மாட்டினியள்

சுவிசில் இல்லாத காகம் வேறெங்க இருக்கு வெளியில்செல்லும் சற்று மேலையும்பார்கவும் ஜோதிகா

ஓ ஜேதிகா தாங்ஸ ஒரு நல்ல பிஸ்னஸ அய்டியா தந்துட்டியளே எனக்கு :wink:

கூண்டில அடைச்ச காகத்தை இறக்கு மதி செய்து புரட்டாதி மாதத்தில எங்கட சனத்துக்கு வாடகைக்கு விட்டால் உங்கடை வங்கிக் கணக்கு கடன் மட்டையை பிடித்திருக்கிற சனிபகவான் மெல்ல மெல்ல விலகுவார். :idea:

ஓ ஜேதிகா தாங்ஸ ஒரு நல்ல பிஸ்னஸ அய்டியா தந்துட்டியளே எனக்கு :wink:

கூண்டில அடைச்ச காகத்தை இறக்கு மதி செய்து புரட்டாதி மாதத்தில எங்கட சனத்துக்கு வாடகைக்கு விட்டால் உங்கடை வங்கிக் கணக்கு கடன் மட்டையை பிடித்திருக்கிற சனிபகவான் மெல்ல மெல்ல விலகுவார். :idea:

:(:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote="narathar"]

நானும் பிடித்திருப்பன் ஆனால் சுவிசில் காகம் இல்லை முறையாக காகத்துக்கு சோறு வைத்துத் தான் நாங்கள் சாப்பிடனேம் அதனால் ? நான் சனியனுக்கு விரதம் பிப்பதில்லை எல்லாம் ஆண்டவன் செயல் என்று தான் இருப்பன் என்கள் சொந்த ஊர் என்றாலும் பறவாயில்லை எப்பவும் புனிதமாக எல்லா விரதமும் பிடிக்களாம்

ஏன் ஸ்விஸுக்கு சனியர் வருவார் எண்டால் காக்கையாரும் வருவார் தானே. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிசில் இல்லாத காகம் வேறெங்க இருக்கு வெளியில்செல்லும் சற்று மேலையும்பார்கவும் ஜோதிகா

ஆனால் நீங்கள் இருக்கும் பக்கம் காகம் இருக்காக்கும் :(

நாங்கள் இருக்கும் பகுதியில் காகம் இல்லை :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ ஜேதிகா தாங்ஸ ஒரு நல்ல பிஸ்னஸ அய்டியா தந்துட்டியளே எனக்கு :wink:

கூண்டில அடைச்ச காகத்தை இறக்கு மதி செய்து புரட்டாதி மாதத்தில எங்கட சனத்துக்கு வாடகைக்கு விட்டால் உங்கடை வங்கிக் கணக்கு கடன் மட்டையை பிடித்திருக்கிற சனிபகவான் மெல்ல மெல்ல விலகுவார். :idea:

மாம் றொம்பத்தான் லொள்ளு

:roll:

முகத்தார் எள்ளெண்ணை சிவன் கோயிலில் தான் எரிக்கிறது. நீங்கள் மாறி போனதால்(அம்மன் கோயிலுக்கு) தான் பொன்னம்மாவிடம் மாட்டினியள்

எனக்கிது வடிவாத் தெரியாது ஆனா உடுவில் அம்மன் கோலிலைதான் முன்னம் வருசா வருசம் எரிச்சனாங்கள் அது ஜயரின்ரை கோயில் எண்டபடியால் சிலவேளை ஜயர் உழைப்புக்காண்டி அப்பிடி வைச்சிருப்பர் ஆனா உண்மையில் அங்கிருந்த நவகிரகங்களுக்கு முன்னால் எரிக்க இடம் ஒதுக்கியிருந்தது...

சனி விரதத்தால் பெறும் பயன்கள் அளப்பெரியன..

நல்லெண்ணெய் விற்பவருக்கு நல்லவியாபரம்..

சுட்டிகள் செய்து விற்பவருக்கு அமோக வியாபாரம்..

எள்ளு விற்பனையும் நல்லாப் போகும்..

இது எல்லாத்தையும் குறைஞ்ச விலைக்கு வாங்கி

விற்கும் கோயில்காரருக்கு லாபமோ லாபம்..

மக்கள் நெற்றியில் நாமம்.. :P :P

  • தொடங்கியவர்

சனி விரதத்தால் பெறும் பயன்கள் அளப்பெரியன..

நல்லெண்ணெய் விற்பவருக்கு நல்லவியாபரம்..

சுட்டிகள் செய்து விற்பவருக்கு அமோக வியாபாரம்..

எள்ளு விற்பனையும் நல்லாப் போகும்..

இது எல்லாத்தையும் குறைஞ்ச விலைக்கு வாங்கி

விற்கும் கோயில்காரருக்கு லாபமோ லாபம்..

மக்கள் நெற்றியில் நாமம்..

அத்துடன் காகம் வியாபரம் செய்பவர்களுக்கும் கோடி லாபம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.