Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இனப்படுகொலையை வெளிக்கொண்டு வந்த அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் இந்தியாவிற்குள் நுழைவதற்குத் தடை

Featured Replies

இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெறுகின்றன என்ற உண்மையை வெளி உலகுக்குத் தெரிவித்த அமெரிக்க உளவியல் நிபுணரும் மனித உரிமைகள் ஆர்வலருமான எலைன் ஷண்டர் இந்தியாவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லி தமிழ் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக எலைன் ஷண்டர் இந்தியா வர இருந்தார். இதற்கான விசா அனுமதிப் பத்திரத்தை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் அவருக்கு ஏற்கனவே வழங்கி இருந்தது.

கடந்த 11 ஆம் நாள் இந்தியாவிற்குப் பயணம் செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் கடந்த 10 ஆம் நாள் அவரது விசா அனுமதிப் பத்திரத்தை இந்தியத் தூதரகம் அவசர அவசரமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

மனித உரிமைகள் ஆர்வலரான ஷண்டர், இலங்கையில் அண்மையில் நடந்த போர் குறித்து கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வருபவர்.

சிறிலங்காவில் இனப்படுகொலையை அரசு மேற்கொண்டு வருகின்றது என்பது பற்றியே அவர் புதுடில்லியில் பேச இருந்தார் என்று கூறப்படுகின்றது. இதனை அடுத்தே அவர் நாட்டுக்குள் நுழைவதற்கு இந்தியா தடை விதித்தது.

புதுடில்லி தமிழ் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்கு ஷண்டர் வரமுடியாத காரணத்தால் அவரது செய்தி பதிவு செய்யப்பட்டு கூட்டத்தில் ஒலிபரப்பப்பட்டது.

அந்தச் செய்தியில், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அரசை ஹிட்லர் தலைமையிலான நாசிகளுக்கு அவர் ஒப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசின் அடாவடித்தனங்களை கண்மூடித்தனமாக ஆதரித்து வருவதாக இந்திய அரசு மீதும் அவர் தாக்குதல் நடத்தி உள்ளார்.

"தமிழர்களை அழிவில் இருந்து காக்குமாறு இந்தியாவிடம் நாங்கள் கோருகின்றோம். கைதிகளை அடைத்து வைக்கும் முகாம்களில் இருந்து மக்களை விடுவியுங்கள்" என்று ஷண்டர் தனது செய்தியில் கூறினார்.

மறுமலர்ச்சி திராவிடர் கழகத் தலைவர் வைகோவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். சிறிலங்காவில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு இந்திய அரசு உதவிகளை வழங்கி வருகின்றது என அவர் அங்கு குற்றம்சாட்டினார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின விரோதப் பத்திரிகையான தினமலரில் அதிசயமாக புதினத்தில் வந்த இச்செய்தி வந்திருக்கிறது.

விலங்குகளைப் போல இலங்கை தமிழர்கள் : அமெரிக்க டாக்டர் டில்லியில் வேதனை

""விலங்குகளை அடைத்து வைத்துள்ளதுபோல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்கு கொட்டடியில் அடைத்துவைத்துள்ளனர். ஒரு மாதத்தில் வரப்போகும், வடகிழக்கு பருவமழையின் கடுமையான பாதிப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்,'' என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

டில்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்கள் சார்பில், இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய இஸ்லாமிய மைய அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அமெரிக்காவைச் சேர்ந்த, டாக்டர் எலின் சந்தர் உரையாற்றுவதாக இருந்தது. இவருக்கு விசா மறுக்கப்பட்டதையடுத்து, அமெரிக்காவில் இருந்தே நேரடியாக டெலிகான்பரன்சிங் மூலம் அரங்கில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: சுனாமியின்போது இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் அன்பை நேரடியாகக் கண்டேன். அப்படிப்பட்டவர்கள், இன்று உடமைகள் இழந்து தவிக்கின்றனர். முகாம்கள் என்ற பெயரில், முள்வேலிக்குள் அடைத்து வைத்துள்ள அவலம் நடந்துள்ளது. தண்ணீர் வசதி அந்த முகாமில் இல்லை. மூன்றரை லட்சம் பேருக்கு வெறும் ஐநூறு கழிவறைகள்தான் உள்ளன. முகாமைச் சுற்றிலும் மனிதக் கழிவுகள் கிடக்கின்றன. சுகாதாரமற்ற சூழ்நிலையால் சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்களுக்கு பலரும் பலியாகின்றனர். திறந்தவெளி பிரசவங்கள் நடக்கின்றன. தொண்டு நிறுவனங்கள் உதவ வந்தும் அதை அரசு தடுக்கின்றது. உணவு,மருந்து தட்டுப்பாடு உள்ளது. வெறும் 50 டாக்டர்கள்தான் உள்ளனர். உறவினர்களை பார்க்க அனுமதியில்லை. விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல இவர்களை ஒரு வனவிலங்கு கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் ஒரு மாதத்தில், வடகிழக்கு பருவமழை பெய்யும். முகாம் இருக்கும் வன்னி பகுதி மிகவும் தாழ்வான பகுதி. எனவே மழைநீர் பெரியஅளவில் தேங்கும் வாய்ப்புள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய மீடியாக்களுக்கும் அனுமதியில்லை. வடக்கு பகுதி,முல்லைத்தீவு போன்றவற்றில் கண்ணிவெடியெல்லாம் கிடையாது. போஸ்னியாவில் செர்பியர்கள் தாக்கப்பட்டபோது, சிலமணி நேரங்களில் ஐக்கியநாடுகள் சபை செயல்பட்டு அவர்களைக் காப்பாற்றியது. ஆனால் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, யாருமே கண்டுகொள்ளவில்லை. ஐ.நா., வை செயல்படவிடாமல் ஒருசில நாடுகள் செய்துவிட்டன. இவ் விஷயத்தில், இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு எலின் சந்தர் பேசினார்.

இதே கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ," இந்தியாதான் அனைத்து துயரங்களுக்கும் பொறுப்பு. மத்திய அரசு அளித்த 500 கோடி ரூபாய் மற்றும் உதவிப் பொருட்கள் என்ன ஆனது என்பதே தெரியவில்லை,' என்றார். ம.நடராஜன் மற்றும் பலர் உரையாற்றினர்.

- நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?News_id=5088

  • கருத்துக்கள உறவுகள்

இனப் படுகொலையில் இந்தியாவுக்கு பாரிய பங்கு உண்டு என்பதை இந்தியா காலந் தோறும் நிரூபித்து வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.