Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விருது பெற்ற ஊடகவியலாளர் திசநாயகத்தை கெளரவிக்க கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு: பெற்றோர் பங்கேற்பு

Featured Replies

ஊடகத்துறையில் துணிச்சலுடன் பணியாற்றியமைக்கான பீற்றர் மக்லர் விருதைப் பெற்றுக்கொண்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்தை கெளரவிக்கும் முகமாக கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் திசநாயகத்தின் பெற்றோரும், ஊடகத்துறையில் உள்ள அவரின் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய திசநாயகத்தின் தந்தையான ஜெயப்பிரகாஷ் திசநாயகம் (வயது 90) தனது மகனுக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பின்னர், அவருக்கு அன்பையும் ஆதரவையும் தெரிவித்து வெளிநாடுகளில் இருந்து 600 வரையிலான கடிதங்கள் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

மனோ ரீதியாக தாமும் தமது குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு தமது நலன் விரும்பிகள் வெளிப்படுத்தியிருக்கும் இந்த ஆதரவுக்கு தாம் பெரிதும் நன்றிக்கடன் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கடிதங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தே கிடைத்திருந்தது எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து தமக்கு ஆதரவாக கடிதங்கள் எதுவும் வரவில்லை எனவும் தெரிவித்தார்.

பெரும்பாலான மக்கள் பேசுவதற்கு அஞ்சுகின்றார்கள் எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் அவ்வாறு பேச வேண்டும் என தான் உணர்வதாகக் குறிப்பிட்டார். "எனது மகன் என்னைப் பேசுமாறு கோரி செய்தி ஒன்றை அனுப்பிவைத்திருக்கின்றார். அதனால்தான் நான் இப்போது பேசுகின்றேன்" எனவும் உணர்ச்சிவசப்பட்டவராக திசநாயகத்தின் தந்தை தெரிவித்தார்.

தனது மகனுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை எனக்குறிப்பிட்ட அவர், தனக்கு வயதாகிவிட்ட இந்தக் காலத்தில் கூட, எது சரி எது பிழை, எது நல்லது எது கெட்டது, எது நியாயமானது எது நியாயமற்றது என்பது தனக்குத் தெரிகின்றது எனக் குறிப்பிட்டார்.

ஜே.எஸ்.திசநாயகத்துக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் நாள் இருபது வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

quote name='NewsBot' date='Oct 8 2009, 02:43 AM' post='545233']

ஆனால் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து தமக்கு ஆதரவாக கடிதங்கள் எதுவும் வரவில்லை எனவும் தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.