Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறு கதியில்லையா?

Featured Replies

ஈழத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் இந்திய உளவாளிகள் தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று பலத்த பிரச்சாரம் செய்து வருகின்றனர். யாழ்ப்பாண நகரில் உள்ள விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் இந்தியாவில் இருந்து பல உளவாளிகள் ஊருடுவியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்களின் பணி அங்குள்ள மக்களின் மன நிலையை அறிந்து அதை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றுவதுதான் என்று அறியப் படுகிறது. இது போல இலங்கையின் பல பாகங்களிலும் இந்திய உளவாளிகள் செயற்படுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம் பெயர்ந்த நாடுகளில் வெளிவரும் வானொலி தொலைக் காட்சி சேவைகளின் நேயர் நேரங்களில் இதுவரை பங்கு பற்றி தகாத வார்த்தைப் பிரயோகம் வீண் வாதம் விடுதலை புலிகள்மீது வசை பாடுதல் போன்றவற்றை செய்து அவற்றைக் குழப்பி வந்த இந்திய உளவாளிகள் இப்போது தாம் தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல அமைதியாகக் கதைத்து தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று பரப்புரை செய்கின்றனர். அது மட்டுமல்ல தமிழர்கள் இன்றிருக்கும் நிலையில் எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மூன்று இலட்சம் உறவுகள் முகாம்களில் வதை படும் போது உணர்வில்லாதவர்கள்தான் அமைதியாக் இருப்பர்.

இதேவேளை தமிழ்நாட்டில் சீமானின் பரப்புரைகளை தடுக்க அவரை கைது செய்தல் அல்லது திருமாவளவன் மூலமாக இன்னோரு ஈழ் ஆதரவு பிரச்சாரத்தைத் தொடக்கி சீமானின் பரப்புரைகளை முறியடிப்பது போன்ற சதிகளை இந்திய உளவுப் பிரிவு தொடங்கலாம். அல்லது கலைஞரே நேரடியாக இன்னொரு நாடகமாடலாம்.

இந்திய உளவுத்துறை தமிழர்களின் மனங்கைளை மாற்ற முயன்று வரும் வேளையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வன்னி வதை முகாம்களில் உள்ள மக்களை வெளியேற்றுவது உடனடியாகச் சாத்தியமில்லை என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதற்கு இலங்கை அரசு கூறிய சாட்டையே அவரும் கூறுகிறார். கண்ணிவெடி அகற்றுவதால் தாமதமாம். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் தோன்றி சாட்சியமளித்த International Crisis Groupஐச் சார்ந்தவர்கள் இலங்கியில் மக்கள் விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைத்திருப்பது இலங்கைச் சட்டத்திற்கும் உலகச் சட்டத்திற்கும் முரணானது என்பதை நிரூபித்துள்ளனர். அதுமட்டுமல்ல கண்ணிவெடி அகற்றுதல் இல்லாமலே மீள்குடியேற்றத்திற்கு சாத்தியம் உண்டேன்றும் சுட்டிக் காட்டியுள்ளர். சட்டமே படிக்காத ஒரு சாதாரண மனிதன் கூட ஒருவரை நீதிமன்றில் நிறுத்தாமல் விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைத்திருப்பது குற்றம் என்பதை அறிவான். அப்படியிருக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு வக்காலத்து வாங்குவது இந்தியாவின் தமிழின அழிப்புப் போரில் இந்தியாவிற்கு இலங்கை உதவியது என்ற உண்மைக்கு வலுவூட்டுகிறது.

இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறு கதி இல்லையா?

அல்லது

இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறு எதிரி இல்லையா?

இந்தியா உட்பட உலகெங்கும் வாழும் தமிழர்களே முடிவு செய்யுங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யதாத்த நிலை என்னவென்றால்.

இந்தியாவை மீறிஇ இன்று இலங்கைத்தமிழர்களை காக்கஇ அவர்கள் உறிமைகளை மீட்டுத்தர யாரும் இல்லை.

மிகச்சரியாக சொல்லவேண்டும் என்றால்இ யாருக்கும் இந்த பிரச்சனை அத்தனை தலையாயது அல்ல.

சுருக்கமாக சொன்னால்இ புலம் பெயர்ந்த தமிழர்கள் கையில் தான் இன்றை பிரச்சனையின் முடிவு இருக்கிறது

இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறு எதிரி இல்லையா?

இந்தியாவே தமிழரின் முதல் எதிரி. இந்தியாவின் ஆசிய வல்லரசு கனவை அழிப்பதன் மூலமே ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவு பிறக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முட்டாள் தமிழர்கள் திருந்தும் வரை தமிழர்களுக்கு விடிவு என்று ஒன்று இல்லை. யுத்தவிதிகளை மீறாது போர் புரிந்த தேசியத்தலைவர் போராட்டம் நடந்த வரை தமிழர்களுக்கு வாழ்வு கிடைத்தது. இன்று எதிலிகளாக தமிழர்கள் ஆக்கப்பட்டது இந்தியாவால் தான் என்பது தமிழர்கள் விளங்காத உண்மை. இலங்கை அரசு ஒரு பொம்மலாட்டியாக பாவிக்கப்பட்டதே தவிர பின்னணி இசை முழுவதும் இந்தியாதான். ஏன் இன்று உலகம் இலங்கை அரசிற்கு பணமும், ஆயுதமும் அள்ளிக் கொடுக்கின்றன? இது சமாதான கால ஓப்பந்த அடிப்படை என்பது யாருக்கும் விளங்காத புதிர்.

உலகளாவிய ரீதியில் தமிழர்கள் தங்கள் உறவுகளைக் காப்பாற்றச் சொல்லி போராட்டம் நடத்தியும் எந்தவொரு அரசும் கடைசி ஆறுதல் ஆவது கூறியதா? புலிகளையும் தமிழர்களையும் அழிக்க உலகம் செயற்பட்ட துரிதமும்; தமிழர்களை முகாம்களில் இருந்து சொந்த இடத்திற்கு அனுப்ப காட்டும் துரிதமும்; வெறும் பாசாங்கு போக்குத்தான். இன்னமும் தமிழர்களுக்கெதிரான போக்கே உலக நாடுகளில் காணப்படுகின்றது. நாங்கள் உலகத்தின் வார்த்தையாலங்களை வைத்து தப்புக்கணக்குடன் இருக்கின்றோம். தலைவர் சொன்னது போல் செய் அல்லது செத்துமடி. ஐ. நா. வின் போர் விதிகளை மீறிய இலங்கையை உலகம் கண்டித்ததா? மாறாக ஐ. நா. போர் விதிகளை மதித்து போரிட்ட புலிகளை அழிக்கத்துடிக்கின்றது. சமாதானத்தை உடைத்த இலங்கைக்கு அள்ளி வழங்கியது. இதுதான் உலக தர்மம், உலக நியாயம். சிங்களவன் அடிக்க அடிக்க தலை குனிந்த காலத்தைப் புலிகள் மாற்றி அமைத்தார்கள். இன்று உலகமும் தமிழன் தலையில் குட்ட வெளிக்கிட்டுவிட்டார்கள். இது இன்றல்ல பாரதிகாலத்தில் கூடத் தமிழன் தலைகுனிந்து வாழ்ந்தது பாரதியே அழகாகச் சொல்லியுள்ளார். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று அவரே சொல்லியுள்ளார். அதன் பின் தமிழனைத் தலை நிமிர வைத்தவர் தேசியத்தலைவர்தான். தமிழன் தலை நிமிர வேண்டுமென யாரும் நினைத்தால் எட்டப்பன் கூடடடம் அழியவேண்டும். தமிழர் ஒற்றுமை ஓங்கவேண்டும். சிதறி இருக்கும் தமிழினம் எல்லோரும் ஒன்றுபடவேண்டும். இல்லையேல் தமிழன் என்றொரு இனம் வாழ்ந்தது இது போராடி அழிந்தது என்ற வரலாறே மிஞ்சும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓம் இந்தியாவை உருப்படியாக விட தமிழனுக்கு மனம் இல்லை. அதெல்லாம் ஒரு நாடு அந்த நாடு எங்களுக்கு ஒரு நாடு தரப்போது சிரிப்பு தான் வருது......

இந்தியாவை நாங்கள் விட்டால் இந்தியா நடாத்திய போரில் கொல்லப்பட்டவர்களின் ஆன்மா விடாது....

தனிப்பட்ட ரீதியில இந்தியாவில் பூகம்பம் வந்தால் என்னா... குண்டு வெடிச்சால் என்ன எனக்கு சந்தோசம்....குறிப்பாக வட இந்தியாவிலையும் கேரளாவிலையும்!

வலியவர்கள் போராட மெலியவர்கள் இறக்கின்றார்கள். இது தான் நியதி இது தான் அமைப்பு! இதை புரிந்து கொண்டு நாம் எமது அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வலியவர்கள் போராட மெலியவர்கள் இறக்கின்றார்கள். இது தான் நியதி இது தான் அமைப்பு! இதை புரிந்து கொண்டு நாம் எமது அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.

எனக்கும் ஒரு பிரெஞ்சுக்காறன் சொன்னான்

சிங்கம்

மானைக்கொல்வது இயற்கைதானே என்று.

அடிக்காத குறையாக கலைத்துவிட்டேன்

ஆனால் என்னுள் அது ஏற்படுத்திய வடு இன்னும் ஆறவில்லை

இந்தியா பற்றி நாம் என்ன நினைக்கின்றோம் என்பதைவிட

இந்தியா எம்மைப்பற்றி என்ன நினைக்கின்றது என்பதே முக்கியம்

இந்தியாவை என்றுமே நாம் மதித்தே வந்துள்ளோம்

இந்தியாவின் பின் செல்லவே துடிக்கின்றோம்

ஆனால்இந்தியா???

தலைவர் கடைசிவரை இந்தியாவை மீறாது காத்திருந்து அழிக்கப்பட்டார் என்ற உண்மைக்குப்பின்பும்.....???

எனக்கும் ஒரு பிரெஞ்சுக்காறன் சொன்னான்

சிங்கம்

மானைக்கொல்வது இயற்கைதானே என்று.

அடிக்காத குறையாக கலைத்துவிட்டேன்

ஆனால் என்னுள் அது ஏற்படுத்திய வடு இன்னும் ஆறவில்லை

அந்த பிரஞ்சுக்காறன் சொன்னதில் என்ன தவறு...???

அதுதானே உண்மை...

இண்டுவரைக்கும் சில புலிகள்( பல சிங்கங்களுக்கு எதிராக ) போராடினாலும் பல தமிழர்கள் பதுங்கி ஓடும் மானாகத்தானே இருந்திருக்கிறோம்... கொல்ல படுவது காயப்படுத்த பட்டு இருப்பதும் வடுக்களோடு வாழ்வதும் இயற்கைதானே...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா இந்தியா :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.