Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழி பேட்டி: இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாக பேசினார்களா?

Featured Replies

இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாக பேசினார்களா?

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில் இருந்து

இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியிருக்கிறது, தமிழக எம்.பி.க்கள் குழு. இலங்கை சென்ற எம்.பி.களில் ஒருவரான கனிமொழியிடம் அவர்களது பயணம் தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்தோம்.

முகாம்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா?

``முகாம்கள் என்பதே குறைந்த கால அளவில் குடியமர்த்தப் பயன்படுவதுதான். எனவே, எப்படிப்பட்ட முகாம்களாக இருந்தாலும் மக்கள் அங்கே தொடர்ந்து வாழ முடியாது. அந்த முகாம்களில் உள்ள அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை விட சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.''

ஓரளவு நவீன வசதிகள் செய்யப்பட்ட முகாம்களுக்கு மட்டும்தான் உங்களைக் கூட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறதே?

``எனக்கு அப்படியெதுவும் தெரியவில்லை. எங்களை `அங்கே செல்லக்கூடாது, இங்கே செல்லக் கூடாது' என்று யாரும் தடுக்கவில்லை. நாங்கள் விரும்பும் முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர். பெரும்பாலும் 4_வது முகாமுக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்ற கருத்து நிலவியது. அங்கும் நாங்கள் அனுமதிக்கப்பட்டோம்.''

முகாம்களில் உள்ள தமிழர்கள் உங்களிடம் சுதந்திரமாக கருத்துச் சொல்ல முடிந்ததா?

``எங்களுடன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இருந்ததால் மக்கள் சுதந்திரமாக கருத்துக் கூற முடியாமல் தயக்கம் காட்டினார்கள். மற்றபடி பலர், அன்றாடப் பிரச்னைகளை எடுத்துச் சொன்னார்கள். சிலர் கோரிக்கை மனுவும், புகாரும் கொடுத்தார்கள்.''

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக எம்.பி.களுக்கு மனிதவெடிகுண்டு ஆபத்து இருந்ததாகக் கூறப்பட்டதே. உங்களுக்கான பாதுகாப்பு வசதிகள் எப்படி இருந்தன?

``அதுபோன்ற மிரட்டல் இருப்பதாக இலங்கை அரசு கூறவில்லை. ஆனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது உண்மைதான்.''

முகாம்களில் பாலியல் குற்றச்சாட்டு இருப்பதாகக் கூறப்பட்டதே? அதுபோன்ற புகார்களை, பெண் என்ற முறையில் யாராவது உங்களிடம் சொன்னார்களா?

``நாங்கள் ஒரு குழுவாகத்தான் அனைவரையும் சந்தித்தோம். தனிப்பட்ட முறையில் எந்த ஒரு பெண்ணையும் நான் சந்திக்கவில்லை. முகாம்களில் இருந்த தமிழ்ப்பெண்களும் கூட்டாகத்தான் வந்து தங்களது குறைகளைத் தெரிவித்தனர். அவர்களில் யாரும் பாலியல் புகார் எதுவும் கூறவில்லை. அதற்காக அப்படியொரு சம்பவமே அங்கே நடக்கவில்லை என்று நான் கூறவில்லை.''

துக்கம் விசாரிக்கச் சென்ற இடத்தில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆடம்பர வரவேற்பை நீங்கள் புறக்கணித்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன் வைக்கப்படுகிறதே?

``இரண்டுநாள் அவகாசத்தில் நாங்கள் இலங்கைப் பயணம் மேற்கொண்டதால் அங்கே என்ன மாதிரியான வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள் என்பதை எங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஈழத்தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும், விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நாங்கள் இலங்கை சென்றோம். அவர்கள் கொடுக்கும் வரவேற்பை நிராகரித்து, அவமரியாதைப்படுத்தினால் நம் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்குமா? வெறும் வீர வார்த்தைகளால் எந்தப் பயனும் ஏற்படாது.''

முகாமுக்குச் சென்ற சில இடங்களில் திருமாவளவனையும், உங்களையும் மக்கள் முற்றுகையிட்டதாகக் கூறப்படுகிறதே?

``அப்படியெதுவும் நடக்கவில்லை. மக்கள் கூட்டமாக வந்து எங்களைச் சந்தித்து, தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தனர். திருமாவளவனுக்கு எதிராக ஏன் இப்படி ஒரு பொய்ப்பிரசாரம் என்று தெரியவில்லை? அவர் பிரதமர் மற்றும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவைச் சந்தித்தபோது, அவர் சார்பாக சில கோரிக்கைகளை வைத்தார். அவற்றைப் பரிசீலிப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.''

இலங்கை சென்ற எம்.பி.க்கள் குழு எந்த மாதிரியான அறிக்கை சமர்ப்பிக்கும் என்று ஜெயலலிதா முன்கூட்டியே ஊகமாக விட்ட அறிக்கை பற்றி.......?

``நாங்கள் ஒன்றும் அகதி முகாம்கள் சிறப்பாக இருப்பதாகக் கூறவில்லையே? எப்படிப்பட்ட முகாம்களாக இருந்தாலும் மக்களை மீண்டும் அவர்களது வாழ்விடத்தில் குடியேற்ற வேண்டும் என்றுதான் கூறியுள்ளோம். எனவே ஜெயலலிதாவின் ஆரூடம் பொய்த்து விட்டது.''

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாக பேசினார்களா?

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில் இருந்து

துக்கம் விசாரிக்கச் சென்ற இடத்தில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆடம்பர வரவேற்பை நீங்கள் புறக்கணித்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன் வைக்கப்படுகிறதே?

``இரண்டுநாள் அவகாசத்தில் நாங்கள் இலங்கைப் பயணம் மேற்கொண்டதால் அங்கே என்ன மாதிரியான வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள் என்பதை எங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஈழத்தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும், விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நாங்கள் இலங்கை சென்றோம். அவர்கள் கொடுக்கும் வரவேற்பை நிராகரித்து, அவமரியாதைப்படுத்தினால் நம் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்குமா? வெறும் வீர வார்த்தைகளால் எந்தப் பயனும் ஏற்படாது.''

பொத்திட்டு இரு.. இதை நாங்கள் நம்ப :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

கனி மொழி என்ன சொல்வார் என்பது மகிந்த அரசுக்கும், இந்திய அரசுக்கும் ஏற்கனவே தெரிந்ததே.எமது கையால் எம்மை குத்த வைக்க இந்தியாவும் , மகிந்த அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகள் துல்லியமாக தெரிகிறது. என்ன இருந்தாலும் சிங்கள அரசியல்வாதிகள் கில்லாடிகள் தான். நாம் நிறையவே அரசியல் கற்க வேண்டியுள்ளது என்பது தான் யதார்த்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.