Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா என்கின்ற வாந்தி

Featured Replies

ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யேர்மனிக்கு தமிழ்நாட்டில் இருந்து கவிஞர் மா. செங்குட்டுவன் வந்திருந்தார். கவிக்கொண்டல் செங்குட்டவன் என்று அவரை அழைப்பார்கள். திமுகவின் ஏதோ ஒரு இலக்கியப் பிரிவில் அவர் இருப்பதாக ஞாபகம். அவர் யேர்மனியோடு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று விட்டு தமிழ்நாட்டிற்கு திரும்பிச் சென்றதும் முரசொலி மற்றும் தினகரன் பத்திரிகையில் கவிக்கொண்டல் செங்குட்டுவன் இலக்கியப் பயணத்தை முடித்திக் கொண்டு தமிழ்நாடு திரும்பினார் என்று பெட்டிச் செய்தியும் வந்திருந்தது.

திமுகவில் ஏதோ ஒரு மட்டத்தில் ஓரளவு முக்கியமானவராக அவர் இருக்கின்றார் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன். யேர்மனியில் உள்ள அன்னை பூபதி படிப்பகத்திற்கான பெருந்தொகை நூல்களையும் அவர் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி உதவியிருக்கின்றார்.

இவர் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யேர்மனிக்கு வந்த போது கண்ணதாசனின் மகள் விசாலியும் வந்திருந்தார். அவரை வைத்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விசாலி மேடையில் நின்றபடி ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசுகின்ற போதெல்லாம் „சிலோன் தமிழர்கள்“ என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தார்.

எனக்கு அருகில் உட்காந்திருந்த கவிஞர் செங்குட்டுவனிடம் மெதுவாகச் சொன்னேன் „எங்களை சிலோன் தமிழர்கள் என்று அழைக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் தமிழீழத் தமிழர்கள், இப்படி அழைப்பதற்கு விசாலிக்கு தயக்கமாக இருந்தால் ஆகக் குறைந்தது ஈழத் தமிழர்கள் என்றாவது அழைக்கச் சொல்லுங்கள்“ என்றேன். அவரும் தன்னுடைய உரை வருகின்ற பொழுது இதைச் சுட்டிக் காட்டுகிறேன் என்று சொன்னார்.

அவருடைய உரை தொடங்கியது. நான் குறிப்பிட்ட விடயத்திற்கும் வந்தார். „தங்களை சிலோன் தமிழர்கள் என்று அழைக்க வேண்டாம் என்று எனக்கு இங்கே சொல்லப்பட்டது. அது மிகச் சரியானது. நீங்கள் தமிழீழத் தமிழர்கள், உங்களை ஈழத் தமிழர்கள் என்றுதான் அழைக்க வேண்டும். அதே வேளை இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும். நீங்களும் எங்களை இந்தியத் தமிழர்கள் என்று அழைக்காதீர்கள். நாங்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள், எங்கள் நாடு தமிழ்நாடு“ இப்படி அவர் சொன்னார்.

தந்தை பெரியார் எழுப்பிய தனித் தமிழ்நாட்டுச் சிந்தனை இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதற்கு அந்த மனிதர் சாட்சியாக நின்றார்.

அவர் அதைக் கூறியதன் பிற்பாடு நான் இன்றுவரை தமிழ்நாட்டுத் தமிழர்களை „தமிழ்நாட்டுத் தமிழர்கள்“ என்றுதான் அழைத்து வருகின்றேன். தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற தமிழர்களைக் காணுகின்ற பொழுது „நீங்கள் தமிழ்நாடா?“ என்றுதான் கேட்பேன். „தமிழ்நாட்டில் எந்த இடம்?“ என்று கேட்பேன். “இந்தியா” என்றும் மறந்தும் உச்சரிப்பது இல்லை.

கவிஞர் செங்குட்டுவன் கூறினார் என்பதற்காக மட்டும் என்று இல்லை. „இந்தியா“ என்பது என்ன என்கின்ற தெளிவான புரிதலும் எனக்கு இருப்பது இதற்கு முக்கியமான ஒரு காரணம்.

……………………

சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் ஒரு எழுத்தாள நண்பரை சந்தித்தேன். „இந்தியன் என்று சொல்லடா! இமயமாக நில்லடா!“ என்ற கோசத்தை தன்னுடைய பெயரோடு இணைத்திருந்தார்.

நாங்கள் இணையத்தில் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை கடுமையாக வைக்கின்ற பொழுது எம்மை எதிர்த்து வாதிடுவார். இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை கண்டால் பொங்கிக் கொண்டு வந்து விடுவார். அவர் யார் என்று தெரியாமலேயே அவர் மீது உச்சக்கட்ட வெறுப்பு எனக்குள் படர்ந்திருந்தது.

ஆனால் வேறு இணையங்களில் தமிழீழத்திற்கு ஆதரவாகவும் திராவிடக் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் அவர் எழுதிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். எனக்கு சற்றுக் குழப்பமாக இருந்தது.

அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்த பொழுது இதை நேரடியாகவே கேட்டேன். „திராவிடக் கொள்கைகளை ஆதரிக்கின்ற நீங்கள் எப்படி இந்தியத் தேசியத்தை ஆதரிக்கின்றீர்கள்“ என்ற என்னுடைய கேள்வியைக் கேட்டு அவர் சிரித்தார்.

சிரித்துக் கொண்டே „உண்மையில் எனக்கு இந்தியத் தேசியம் என்றாலே வாந்திதான் வரும். நான் இந்திய தேசியத்தை வெறுப்பவன், ஆனால் விடுதலைப் புலிகள் இந்தியாவோடு நட்பை நாடி நின்ற சூழலில் உங்கபை; போன்றவர்கள் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை கூறிக் கொண்டு திரிந்தது எனக்கு சரியான ராஜதந்திர நகர்வாகப் படவில்லை, அதனாற்தான் வேண்டுமென்றே இந்தியா தேசியத்தை ஆதரிப்பது போன்று நடித்து உங்களோடு முரண்பட்டேன்“ என்றார்.

அந்த நேரம் உண்மையாகவே விடுதலைப் புலிகள் இந்தியாவின் நட்பை நாடித்தான் நின்றார்கள். இந்தியாவை „தந்தையர் நாடு“ என்று வேறு சொன்னார்கள். கடைசியில் தந்தையர் நாடு தமிழர்களின் உச்சந் தலையில் ஆணி அறைந்து விட்டது. இது ஒருபுறம் இருக்கட்டும். மீண்டும் அந்த எழுத்தாள நண்பரிடம் வருவோம்.

„இந்தியா“ என்ற சொல்லைக் கேட்டால் எனக்கு எப்படியான உணர்வு ஏற்படும் என்பதை விளக்குவதற்கு சொல்லைத் தேடிக் கொண்டிருந்த எனக்கு அவர் சொன்ன விதம் மிகவும் பிடித்துப் போய் விட்டது.

„வாந்தி வரும்“ இதை விட அழகாக அந்த உணர்வைச் சொல்ல முடியாது. ஈழத் தமிழன் தன்னை „சிறிலங்கன்“ என்று சொல்கின்ற பொழுதும் எனக்கு வாந்தி வரும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் யாராவது „இந்தியா“ என்று பிதற்றினாலும் வாந்தி வரும். இதையே மாறி ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களை „இந்தியர்கள்“ என்றும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் எம்மை „சிலோன்காரர்கள்“ என்றும் அழைக்கின்ற போதும் வாந்தி வரும்.

அந்த எழுத்தாள நண்பரின் பெயரை இங்கே நான் குறிப்பிடவில்லை. இப்பொழுது அவர் தமிழ்நாட்டின் வெகுசன ஊடகங்களில் எழுதிக் கொண்டிருக்கின்றார். பலர் கவனிக்கும் ஒரு எழுத்தாளராக வளர்ந்து வருகின்றார். அவருடைய „இந்திய வாந்தி நிலைப்பாடு“ பற்றி இப்பொழுது வெளிப்படையாகப் பேசுவாரா என்று தெரியவில்லை. இன்னும் வளர்ந்த பிற்பாடு பேசக் கூடும்.

பலரைப் போன்று அவரும் மனதுக்குள் புழுங்கிக் கொண்டு விடிவுக்காக காத்திருக்கிறார் என்பதுதான் இங்கே சொல்ல வருகின்ற விடயம்.

……………………

இப்படியான உணர்வுகள் இருப்பது இந்திய அதிகார வர்க்கத்திற்கு தெரியாமல் இல்லை. அது தன்னுடைய பங்கிற்கு „தேச பக்தியை“ ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கிறது. பள்ளிகளில், புத்தகங்களில், தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் என்று எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தேசபக்தியை அது விளம்பரம் செய்கின்றது.

அண்மையில் „பசங்க“ என்று ஒரு படம் பார்த்தேன். சிறுவர்கள் கதை நாயகர்களாக நடித்த ஒரு நல்ல படம். ஆனால் படம் முழுவதும் ஒரே இந்திய தேசிய மயம். இந்தியக் கொடிகள், ராஜீவ்காந்தி படங்கள், சிறுவர்களின் சண்டையை நிறுத்துவதற்கு ஜனகணமண என்கின்ற உச்சக்கட்ட நகைச்சுவை என படம் முழுவதும் இந்திய வாந்தி மயம். படம் முடிவதற்குள் எனக்கு அடிக்கடி குமட்டி விட்டது.

„பசங்க“, „உன்னைப் போல் ஒருவன்“ என்று இந்திய அதிகார வர்க்கம் தன்னுடைய பரப்புரையில் திறைமையாகத்தான் இருக்கின்றது. தமிழ்நாட்டில் தமிழ் தேசிய சிந்தனை வளரக் கூடிய நேரத்தில் இப்படியான திரைப்படங்கள் தொடர்ந்து வருவதை கவனித்துப் பார்க்க வேண்டும்.

திரைப்படங்கள் என்று இல்லை. ஏற்கனவே சொன்னது போன்று அனைத்து வழிகளிலும் இந்திய அதிகார வர்க்கம் தன்னுடைய வாந்தியை மக்கள் மீது எடுக்கிறது. இதை சுத்தம் செய்ய யாராவது புறப்பட்டால் „தேசிய பாதுகாப்புச் சட்டத்தில்“ உள்ளே செல்ல வேண்டியதுதான்.

சிறிலங்காவின் பயங்கரவாதச் சட்டத்திற்கு இணையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்புச் சட்டம். ஒருவரை விசாரணை இன்றியே ஓராண்டு காலம் உள்ளே வைத்திருக்கலாம். ஆனால் இதுவரை யாரும் இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு இந்திய உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு துணியவில்லை. அப்படிச் செல்பவர்களை „தேசத் துரோகிகளாக“ இந்திய அதிகார வர்க்கம் முத்திரை குத்தி விடும்.

ஆனால் இவைகளை எல்லாம் மீறி இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் விடுதலையை நாடி நிற்கின்ற மக்கள் இருக்கின்றார்கள்.

……………………

வழமையாக நான் எழுதுவது போன்று இல்லாமல் என்னுடைய சில அனுபவங்களையும் கருத்துக்களையும் சேர்த்து இங்கே எழுதியிருப்பதற்கு காரணம் இருக்கின்றது.

„இந்தியா எமக்குப் பக்கத்தில் இருக்கின்ற வரை தமிழீழத்தை எம்மால் பெற முடியாது“ என்று சிலர் சொல்வார்கள். இது முற்றிலும் உண்மை. உலகத்திலே இருக்கின்ற மிகப் பெரிய உண்மைகளில் இதுவும் ஒன்று. இந்தியா எமக்கு அருகில் இருக்கின்ற வரை எம்மால் தமிழீழத்தை அமைக்க முடியாது. இந்தியாவோடு நாம் கெஞ்சினாலும் சரி, கொஞ்சினாலும் சரி, அது தமிழீழத்தை அமைக்க விடாது.

ஆகவே இந்தியா எமக்கு அருகில் இருக்கக் கூடாது. தமிழீழம் அமைக்க வேண்டும் என்ற சிந்தனையோடு யாராவது இருந்தால் அவர்கள் இதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

இந்து சமுத்திரத்தில் இருந்து இந்தியாவை எப்படி பெயர்த்து எடுக்கலாம் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இதை நோக்கி எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். இந்த நலன் சார்ந்து எமது நட்புக் கூட்டணியை உருவாக்க வேண்டும்.

இதைப் பற்றி ஆழமாக விரிவாக எழுத வேண்டும். ஒரு வரைவை உருவாக்க வேண்டும். அப்படி எழுதுவதற்கான முன்னுரையின் ஒரு சிறிய பகுpதியே மேலே எழுதியிருப்பது. இத்தனை இழப்புகளுக்குப் பின்னரும் தோல்விகளுக்குப் பின்னரும் தமிழீழம் அமைவதற்காக மிச்சம் இருக்கின்ற வழிகளைப் பற்றி நாம் தொடர்ந்து பேசுவோம்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

]இந்து சமுத்திரத்தில் இருந்து இந்தியாவை எப்படி பெயர்த்து எடுக்கலாம் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இதை நோக்கி எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். இந்த நலன் சார்ந்து எமது நட்புக் கூட்டணியை உருவாக்க வேண்டும்.

மண்வெட்டியாலை :lol:

இன்னும் கொஞ்சகாலத்தாலை இந்தியா ஆட்டோமெற்றிக்காவே சிதைஞ்சு போகுமாம்.

வெள்ளைக்கார அரசியல் ஆய்வாளர்கள் ஆரூடம் சொல்லீனம் :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.